தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை.
(ஈழப் போரில் தன் தாய் இறந்தது தெரியாமல் பால் அருந்தும் பச்சிளம் குழந்தை)
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
(இவன் தாயல்ல. இது தாய்மை)
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பாரதி, கண்ணதாசன் போல் எண்ணற்ற மேதைகள் சொல்லிய அன்னையின் பெருமைகளை , அவர்களைப் போல பிறருக்கு எடுத்துச் சொல்லும் தகுதி நமக்கு இல்லாததால், அகத்தியர் திரைபடத்தில், வயலின் மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையில் உயர்திரு பூவை செங்குட்டுவன் அவர்கள் எழுதிய பாடல் மேலே எடுத்தாளப் பட்டுள்ளது.