Thursday, August 27, 2015

இணைய தவறுகளைத் தடுக்கும் மென்பொருள் கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி (Trisha Prabhu invent 'Rethink' To Stop Cyber bullying)

2014 Google Science Fair  Finalist
Trisha Prabhu


அமெரிக்கா:  சிகாகோவை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி திரிஷா பிரபு இணையதள தவறுகளைத் தடுக்கும் 'Rethink' எனும்  மென்பொருளைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். 

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல நேரங்களில், பல்வேறு விஷயங்களில் அச்சுறுத்தலாகவே முடிகிறது.

இதைத் தடுக்கும் வகையில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிஷா பிரபு என்கிற 13 வயது மாணவி  'Rethink' எனும் மென்பொருளை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.
 
 Galapagos Islands 
 
Google Science Fair கடைசி சுற்று மூலமாக தேர்வு செய்யப்பட்ட 15 பேர்களும் பசிபிக் பெருங்கடலில் உள்ள Galapagos (https://www.galapagosislands.com/) தீவுகளுக்கும், கலிபோர்னியாவில் உள்ள  Virgin Galactic Spaceport (http://www.virgingalactic.com/spaceport-america/)
விண்வெளி மையத்திற்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக தலா   50,000 டாலர் அளிக்கப்படுகிறது.
 
 Virgin Galactic Spaceport
 
Google Science Fair கடைசி சுற்று மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களில்   திரிஷா பிரபு மட்டும் அல்லாமல், வேகமான தேடுபொறியை (Search Engine) வடிவமைத்த அன்மோல் துக்ரெல் (Anmol Tukrel) என்பவரும் இந்திய வம்சாவளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

12ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு (XII SPL.SUPP.EXAM-JUNE 2016) அசல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்

 ஜூன் 2016ல் 12ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று (27.08.2015) முதல் 04.09.2015 வரை அந்தந்த தேர்வு மையங்களில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

04.09.2015 க்கு பின்னர் தேர்வுத்துறை மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் தான் மதிப்பெண் பட்டியல்களை பெற முடியும்

Wednesday, August 26, 2015

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 - National Population Survey 2011( Religious Survey)

மக்கள் தொகை கணக்கெடுப்பு  2011
(Religion Wise)

S.No
Religion
2001
(in Crore)
2001
%

2011
(in Crore)
2011
%

Increase (+) / Decrease (-)
1
Hindu
82.75
80.5%
96.63
79.8%
-
2
Muslim
13.8
13.4%
17.22
14.2%
+
3
Christian
2.40
2.3%
2.78
2.3%
No Change
4
Sikh
1.92
1.9%
2.08
1.7%
-
5
Buddhist
.79
0.8%
.84
0.7%
-
6
Jain
.42
0.4%
.45
0.4%
No Change
7
Others
.66
0.6%
.79
0.7%
+
8
Not Related to Any Religion
.07
0.1%
.29
0.2%
+



100%

100%


7th Pay Commission Report செப்டம்பரில் தாக்கல் செய்யப்படும் - நீதிபதி ஏ.கே. மாத்தூர்



48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.  

7-வது ஊதியக் கமிஷன் தற்போது,  தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள், 2016 ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். 

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 619 கோடி செலவாகிறது.

7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

இதே போல நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியர் களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

Tuesday, August 25, 2015

இளைஞர் பாதுகாப்பு படையினருக்கு காவல் துறையில் பணி - தமிழக அரசு அறிவிப்பு

 
இளைஞர் பாதுகாப்பு படையினரை எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து காவல் துறையில் பணி வழங்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக போலீசாருக்கு உதவிகரமாக செயல்பட இளைஞர் பாதுகாப்பு படை என்ற அமைப்பை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். இதையடுத்து 10,099 இளைஞர் பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் தற்போது போலீசாருக்கு உதவியாக ரோந்து பணி, தபால் கொண்டு செல்லும் பணி போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.

இளைஞர் பாதுகாப்பு படையினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஒரு ஆண்டு காலம் தங்களது பணியை சிறப்பாக செய்த இளைஞர் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வேலையில் சேர அரசு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (www.tnusrb.tn.gov.in) நடத்தும் எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும். பொது அறிவு மற்றும் போலீஸ் சம்பந்தப்பட்ட தேர்வில் பங்கேற்க வேண்டும். 

பொது அறிவு தேர்வில் 60 மதிப்பெண்களும், போலீஸ் சம்பந்தப்பட்ட தேர்வில் 40 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். இரண்டு தேர்விலும் குறைந்த பட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றால் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். தேர்வு பெற்றவர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.

காலி இடங்கள் மற்றும் சாதி ஒதுக்கீடு அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 24, 2015

மாணவர்களின் அறிவை வளர்க்க அனிமேஷன்

மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தொழில்நுட்பம் சார்ந்த, மாநில அளவிலான கற்பித்தல் போட்டியில், நீலகிரி மாவட்டம், தேனாடு ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் தர்மராஜ் முதலிடம் பெற்றுள்ளார். 

இவர், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடங்களை  அனிமேஷன் மற்றும் வீடியோ காட்சிகளாக மாற்றி கற்பித்தல் முறையை வடிவமைத்துள்ளார். 

கழிவு நீக்க மண்டலம், சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் பணி, வேரின் அமைப்பு மற்றும் பணி, தனிம வரிசை அட்டவணை, காடுகள், வன விலங்குகளின் பாதுகாப்பு, எலும்பு மண்டலம், மீன், தேனீ வளர்ப்பு, தாவர உலகம், அணு அமைப்பு உள்ளிட்ட பாடப் பகுதிகள், நவீன தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


ஆன்ட்ராய்டு மொபைல் போன் மூலம் கல்வி மென்பொருளை பயன்படுத்தி தமிழ் அகராதி, வார்த்தை உச்சரிப்பு, திருக்குறள் வாசிப்பு, மேடைப் பேச்சுக்கு ஆயத்தமாக்குதல் போன்ற படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவரது படைப்பு, வரும் டிசம்பரில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2010ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் கற்பித்தலில் புதுமை படைத்ததற்காக, தேசிய அளவிலான விருதை  தர்மராஜிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Sunday, August 23, 2015

Indian Origin Anmol Tukrel Build a Search Engine 47% accurate than Google




Canadian citizen Sixteen-year-old Anmol Tukrel is an Indian-born techie and has designed a search engine all by himself. He also claims that apart from it being 47 per cent more accurate than Google’s search engine, it is also 21 per cent more accurate on an overall average.

Tukrel is just a standard 10 student and has been working on the project for just a couple of months. He has taken around 60 hours code and build a search engine, which is a part of the submission to the Google Science Fair. The Google competition is applicable for those between ages 13 and 18.


According to reports online, when Tukrel was in India for a short internship in Bangalore, that's when he came to know about Google already having a personalized search engine, he planned to take it to a next level. 

Tukrel’s development kit included only a computer with at least 1GB of free storage space, a python-language development environment, a spreadsheet program and access to Google and New York Times.

He managed to test out his product’s accuracy with limiting his search query to the current year's news articles from The New York Times. He then created numerous fictitious users, each with a different interest and other corresponding web histories. This information was then fed to both Google and his search engine, after which, he compared the results between the two.

Tukrel has submitted his paper, of research and his findings, to the International High School Journal of Science. He now hopes to study further with computer science at Stanford University. He is presently running a small company on his own, named Tacocat Computers, with consent from his parents.

Friday, August 21, 2015

Puli - Official Trailer | Vijay, Sridevi, Sudeep, Shruti Haasan, Hansika...

20 கி.மீ உயர டவர் மீது ராக்கெட் ஏவுதளம் - கனடா முயற்சி


An artist's concept of an inflatable space elevator design patented by the Canadian company Thoth Technology, Inc. The elevator would lift passengers to an altitude of 12 miles (20 kilometers) where they could catch a commercial spacecraft launch into orbit.  


உலகின் உயர்ந்த ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் முயற்சியில் கனடா நாட்டின்  Thoth Technology, Inc (http://thothx.com/) இறங்கியுள்ளது. 


இது தற்போது உலகிலேயே மிக உயரமான கட்டடமாக இருக்கும் துபாய் நாட்டின் புர்ஜ் காலிபா (830 மீ) வை விட 20 மடங்கு உயரமுள்ள டவராக இருக்கும். அதாவது கிட்டதட்ட 20 கி.மீ உயரத்தை கொண்டிருக்கும்.

Thursday, August 20, 2015

கல்விக்கடன் பெற புதிய இணையதளம் துவக்கம் - மத்திய அரசு (NEW WEBSITE FOR EDUCATIONAL LOAN)


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் 2015 பட்ஜெட் கூட்டத் தொடரில்  கல்வி கடன் பெறும் மாணவர்களின் வசதிக்காக  புதிய இணைதளம் துவக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார்.

தற்போது இந்த இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த இணையத்தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து, ஆன்லைன் மூலமாக எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 

இணையதள முகவரி

Tuesday, August 18, 2015

தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் 1101 வேலைவாய்ப்புகள்




  • கால் நடை ஆய்வாளர் நிலை2  - 294
  • கதிரியக்கர்(ரேடியோகிராபர்) 24
  • ஆய்வக உடனாள் 17
  • ஆய்வுக்கூட தொழில் நுட்பர் 02
  • மின்னாளர் 03
  • அலுவலக உதவியாளர் 36
  • கால் நடை பராமரிப்பு உதவியாளர் 725

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 15.09.2015

கல்வித்தகுதி:  8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு,12ம் வகுப்பு 
              தேர்ச்சி/தோல்வி

மேலும் விவரங்கள் மற்றும் படிவங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

Sunday, August 16, 2015

, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்


உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும்  இந்தியர்கள்  



தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின்  முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, Google தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) 10.08.2015 அன்று சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

Google நிறுவனர் மற்றும்  தலைமை நிர்வாக அதிகாரி  Larry Page, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைக்கும் பிரதான நிறுவனமாக 'Alphabet' (https://abc.xyz/) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக  தன்னை நியமித்துக் கொண்ட லாரி பேஜ், 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் தமிழரான சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்களை நியமித்துள்ளார்.