உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
72 காலிப் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப் பட்ட நடுநிலைப் பள்ளிகளின் 50 புதிய பணியிடங்கள் என, 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு, பட்டதாரி மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (01.03.2015) காலை 09.00 மணிக்கு சென்னை பள்ளிக்கல்வி அலுவலக வளாகத்திலுள்ள SIEMAT கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
01.01.2014 நிலவரப் படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியலில், வரிசை எண் 576 முதல் 685 வரை உள்ள 110 ஆசிரியர்கள், 3 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட உள்ளது.