Monday, April 20, 2015

மே 8 முதல் 18 வரை B.Ed தேர்வுகள்



பி.எட்., படிப்புக்கான தேர்வுகள் மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கின்றன. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு.


வ.எண்
தேதி
பாடம்
1
மே 8ம் தேதி       
இந்திய சமூகத்தில் கல்வி 
2
மே 9ம் தேதி       
கற்றல் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி

3
மே 11ம் தேதி       
கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு 
4
மே 12ம் தேதி      
விருப்ப பாடங்கள் 
5
மே, 13, 14ம் தேதி    
மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் 
6
மே 15ம் தேதி
M.Ed மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல்,
புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் 
7
மே 16ம் தேதி
B.Ed பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி  அறிவியல், உயிரி அறிவியல், வரலாறு, புவியியல்                மற்றும் கணினி அறிவியல் பாடங்கள்
8
மே 18ம் தேதி
M.Ed முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப்   பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ்உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல்புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப்  பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும்.
 

Saturday, April 18, 2015

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது?

 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இதில், 2,176 எம்.பி.பி.எஸ். இடங்கள், 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், மே 11, 12ம் தேதிகளில் துவங்கும்  என எதிர்பார்க்கப் பட்டது.
 
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு மே 14ல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை துவக்கினோம். இந்த ஆண்டு  பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதைப் பொறுத்தே, விண்ணப்ப வினியோக தேதியை முடிவு செய்வோம்" என்றார்.

+2 தேர்வு  முடிவுகள் மே 16 அல்லது மே 17ல்  வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Friday, April 17, 2015

பள்ளி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் Insight அறிவியல் கருத்தரங்கம் - அனுமதி இலவசம்

 Advertisement

 

 Insight 2015

Insight is back this year too on May 4, 5 and 6 from 9.00 A.M to 4.00 P.M. in the Department of Information Science and Technology, CEG Campus, Anna University. We invite students of IX-XII to participate. The workshop is conducted free of cost.

About Insight

This workshop aims at presenting the scientific thought process that has been followed for centuries in our country. All major areas of study from Mathematics and Astronomy to Logic and Grammar are influenced by this thought process. The highlight of this thought process is that it improves the ability to think differently, yet quickly; and communicate precisely. This is embedded in the techniques used for Mathematics, Logic and Astronomy. This workshop will train the students in these techniques through short-cuts and mental calculations that the students can effectively use in their day-to-day activities. In turn, these techniques will enhance in depth understanding of academics, lateral thinking and memory.

To Register Insight 2015                Click Here


TOPICS IN THIS WORKSHOP
 Indian Mathematics
  •   Place Value System
  •   Arithmetic – multiplication, squaring, division, square-root, divisibility and other short-cuts
  •   Algebra – solution of simultaneous and quadratic equations
Logic
  • Introduction to Tarka
  •   Classification from Tarka perspective
  •   Intellect, apprehension, perception and inference
  •   Inference structure
  •   Defective reasoning
 Astronomy
  • The planets and the Stars
  •   The Indian Calendar

காதல் வலையில் சிக்கும் பள்ளி மாணவிகள் - வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பு


பள்ளி பொதுத் தேர்வுகள்  முடிந்துள்ள நிலையில், காதல் வலையில் சிக்கி, வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 25 மாணவியர் மாயமாகி உள்ளனர்.

கிருஷ்ணகிரி,கல்வியில் பின்தங்கிய மாவட்டம். குறிப்பாக பெண் கல்வி சதவீதத்தில், மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. பொருளாதார ரீதியில், பின்தங்கியிருப்பதால், படிக்கும் வயதிலேயே, குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் அதிகமாக உள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும், சினிமா, 'டிவி' உள்ளிட்டவை, பள்ளி மாணவியரை ஹீரோயினாக்கி விடுவதால், 'ரோமியோ'க்கள், பள்ளிகளை முற்றுகையிட துவங்கி விடுகின்றனர். மொபைல் போன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன், பள்ளிப் பருவம் முடிவதற்குள், 'காதலை' வளர்த்துக் கொள்கின்றனர்.பள்ளிப் படிப்பை முடித்தவுடன், பெண் குழந்தைகளை, உயர்கல்விக்கு அனுப்பாமல், பல குடும்பத்தினர், திருமணம் நடத்துவதில் குறியாக உள்ளனர். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, தேர்வு முடிந்தவுடன் மாணவியர், 'காதலனோடு' ஓட்டம் பிடிப்பது அதிகரித்து வருகிறது.


நடப்பு கல்வியாண்டில் இதைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேர்வு மையங்களையொட்டிய பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த வாலிபர்களை விசாரித்து விரட்டியடித்தனர். ஆனாலும், தேர்வு முடிந்த ஒரு வாரத்துக்குள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 25க்கும் மேற்பட்ட மாணவியர், குறிப்பாக, 10ம் வகுப்பு தேர்வு எழுதியோர் மாயமாகி உள்ளதாக புகார் பதிவாகியுள்ளது.

புள்ளி விவரம் 


போலீஸ் விசாரணையில், பெரும்பாலான மாணவியர், காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, இது போன்று காணாமல் போன மாணவியர் எண்ணிக்கை, 17. இந்த ஆண்டு, 25 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரம், போலீசில் பதிவு செய்யப்பட்ட புகார் அடிப்படையிலானது. போலீசில் புகார் செய்யாத குடும்பத்தினர் பலர், தனிப்பட்ட முறையில் தேடி வருவதும் நடந்து வருகிறது.

போலீசார் கூறியதாவது:

காதல் என்ற பெயரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவியர் ஓட்டம் பிடிப்பது அதிகரித்து வருகிறது. பல ரோமியோக்கள், பள்ளி மாணவியரை இலக்காக கொண்டு உள்ளனர். வாழ்க்கை குறித்த எவ்வித தெளிவும் இல்லாமல், சில நாளிலேயே, இந்த காதல் முடிவுக்கு வந்து விடுகிறது. பலரும், மாணவியரை விட்டு ஓடி விடுகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு

பெற்றோர்,குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால், விசாரித்து அறிய வேண்டும். ஏனென்றால் இவ்வாறு ஓட்டம் பிடிக்கும் மாணவியரில், 90 சதவீதம் பேர், சில நாட்களிலேயே கைவிடப்படுகின்றனர். மாணவியருக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

காற்றினால் இயங்கும் 4 சக்கர வாகனம் கண்டுபிடித்த மாணவர்கள்


திண்டுக்கல்: திண்டுக்கல் PSNA இன்ஜி., கல்லூரி மாணவர்கள், காற்றினால் இயங்கும் மாசு ஏற்படுத்தாத நான்கு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.

மெக்கானிக்கல் பிரிவு இறுதியாண்டு மாணவர்கள் ரெக்ஸ்ஆரோ, சந்தோஷ் தங்கராஜ், ரிஷிமணிகண்டன், சதீஷ்பாண்டியராஜா, மிதிவண்டியின் ப்ரீ வீல் தத்துவத்தில், காற்றால் இயக்கப்படும் நான்கு சக்கர (மாதிரி) வாகனத்தை தயாரித்துள்ளனர். துறை தலைவர் வாசுதேவன், பேராசிரியர் கண்ணன் உதவியுடன் ரூ.14,500ல் வாகனம் தயாரிக்கப்பட்டது.

பேராசிரியர் கண்ணன் கூறியதாவது: காற்றில் இயங்குவதால் மாசு ஏற்படாது. சைலன்சர் இதில் இல்லை. பத்து பார் அளவுள்ள காற்றை டேங்கில் அடைத்து, ஏர் ரெகுலேட்டருக்கு அனுப்பிவைக்கப்படும். பின், செலிநாய்டு வால்வு மூலம் இரண்டு ஏர் சிலிண்டர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக காற்று செலுத்தப்படும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது.  இரண்டு சிலிண்டர் மூலம், திறன் பெறப்பட்டு ப்ரீ வீலுக்கு சக்தி கடத்தப்பட்டு வாகனம் நகரும். மணிக்கு 17 கி.மீ., செல்லும். 60 மீட்டரை 10 நொடிகளில் கடக்கும். வேகத்தை கட்டுப்படுத்த, டைமிங் கண்ட்ரோல் போர்டு அமைத்திருக்கிறார்கள். இதேபோல் காற்று மறுபடியும் டேங்கிற்கு கடத்தப்படுகிறது. தொடர்ந்து காற்று வெளியேறாமல் திறன் பெறும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது, மாதிரி கண்டுபிடிப்புத்தான். தற்போது, கல்லூரி வளாகத்தில் பொருட்களை கொண்டுசெல்ல பயன்படுத்த உள்ளோம். அடுத்தகட்ட ஆய்வில், பெரியளவில் காற்றினால் இயங்கும் வாகனம் உருவாக்குவோம், என்றார்.

Wednesday, April 15, 2015

UGC NATIONAL ELIGIBILITY TEST (NET) - NOTIFICATION JUNE 2015

UGC NET  -  JUNE 2015

NOTIFICATION



It is notified that CBSE  will conduct the next  UGC-NET for Junior Research  Fellowship & Eligibility for Assistant Professor  which  will be held on 28th June  2015 (Sunday). The candidates who desire to appear in the test may see the detailed notification available on the website  www.cbsenet.nic.in  from  15th April  2015. The candidates are required to apply online only  from  16th April, 2015. The last date for applying online is  15th May 2015 and fee can be paid up to 16th May, 2015. 
 
 Important Dates
Online Form Submission
16th April 2015
Last date for Applying Online & generation of filled Bank Challan for Fee.
15th May 2015
Last date of submission of Fee through online generated Bank Challan, at any branch of (SYNDICATE/CANARA/ICICI BANK)
16th May 2015
Date of Examination
28.06.2015

 Fees



Category
Fee Amount
General
Rs. 600 /- (Six Hundred)
OBC 
Rs. 300 /- (Three Hundred)
SC / ST / Person with Disabilities(PwD)
Rs. 150 /- (One Hundred Fifty)
 

மாணவர்களின் ‘பஸ் பாஸ்’களில் அடுத்த ஆண்டு முதல் ரத்தப் பிரிவு இடம்பெறும்.

BUS PASS 

மாணவர்களின் ’பஸ் பாஸ்’களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகிறது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதற்கட்டமாக, அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை, மாணவ, மாணவியரின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதை, EMIS, I.D.கார்டு, பஸ் பாஸ்  போன்றவற்றில் குறிப்பிட  முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் மூலம் உத்தரவிடப் படுகிறது.

வரும் கல்வியாண்டில்  ’பஸ் பாஸ்’  கோரும்  மாணவர்களின்  பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், பஸ்சில் ஏறும், இறங்கும் இடம், அந்தப் பாதையில் வரும் பஸ்களின் தடம் எண் போன்ற விவரங்களை, ஆன்-லைன் பதிவேட்டில் (EMIS) குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்துடன் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து, ரத்தப் பரிசோதனை நடத்தி, அவர்களின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதையும் ஆன்-லைனில் மாணவர் விவரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை, வரும், 28ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ரத்தப் பிரிவுடன் கூடிய விவரங்களை போக்குவரத்துத் துறைக்கு அனுப்பி, பள்ளி திறக்கும் ஜூன், 1ம் தேதி, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, ’பஸ் பாஸ்’ அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tuesday, April 14, 2015

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.




             யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
             தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
             நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

             சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
             இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
             இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
  
             வானம் தண்துளி தலைஇ, ஆனாது
             கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
             நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
             முறைவழிப் படூஉம்என்பது திறவோர்

             காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
             பெரியோரை வியத்தலும் இலமே;
             சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


                     கணியன் பூங்குன்றன்
                                                 ( புறநானூறு - 192)







பொருள்:                                                                                               © deccanbluediamonds

            எவ்வூரும் எமது ஊர்.அனைவரும் எம் சொந்தம்.

            துன்பங்களும், இன்பங்களும் நம்மால் தான்.

            பிறர் தந்து வருவதல்ல தீதும், நன்றும்.



            மரணம் என்பது இயற்கை.

            அதனால்,

            வாழ்வு இனிது என

            மகிழ்வதும் தவறு.

            துறவு கொடிது என

            இகழ்வதும் தவறு.



            வெட்டும் மின்னலில்

            விழுகின்ற நீர்த் துளி

            கட்டுக் கடங்காத வெள்ளமாய்

            கல்லும் மண்ணும் புறண்டோட,

            அதில் சிக்கி அதன் வழியே போகும்

            ஓடம் போன்றது உயிர்.



            அது முன்னர் இட்ட முறைவழியே

            போகத் தான் செய்யும் என

            முன்பே அறிந்தவர் முனிவர்.

            அதனால்


                             பெரியோர் என நினைப்பவரை

            வியத்தலும் இல்லை.

            சிறியோரை இகழ்தல் என்பது

            அதனினும் இல்லை.            

                                                                 

                            
                                          

Sadhguru Tamil Video சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் Sadhguru...

Saturday, April 11, 2015

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTTO) வேலூரில் 19.04.2015 அன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

 (JACTTO)  
 

'ஆசிட்' தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு



நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற எண்ணற்ற மனித மிருகங்களையும் தான் நாம் கடந்து போகிறோம். 

சிலர் 15 வயது தாண்டியவுடனே, தலைமுடியை கண்டபடி செதுக்கி இருப்பார்கள். கழுத்தில் பிளேடு போட்ட சங்கிலியை போட்டிருப்பார்கள். கைகளில் தனது ஜாதி சார்ந்த ரப்பர் வளையம் இருக்கும்.  Yamaha, Pulsar, Apache போன்ற ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளில் நண்பர்களுடன் சாலைகளை அலற விடுவார்கள். Accident ஆகி அடிபட்டாலும் கூட மீண்டும் அப்படித்  தான் இருப்பார்கள். பஸ் ஸ்டாண்ட், பெண்கள் கல்லூரி வாசல், பெண்கள் பள்ளிக்கூட வாசல், டியூஷன் வாசல் என எல்லா வாசல்களிலும் நின்று பெண்களை தொந்தரவு செய்வார்கள்.

வேறு சிலர் அதிக பட்சம் 10ம் வகுப்பிற்குள் படித்திருப்பார்கள். தலையை விட முடி அதிகமாக இருக்கும்.  பின்பக்கம் நீளமாக வால் ஒன்றை வைத்திருப்பார்கள். கிருதா 'வை கத்தி போன்று டிசைன் செய்திருப்பார்கள். அழுக்கு டி-சர்ட், ஜீன்ஸ் இருக்கலாம். எந்த பழக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம். எப்போதாவது வேலை இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வேலை  பஸ் ஸ்டாண்ட், பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி, கார்மெண்ட்ஸ் வாசல்கள் இதர சில இடங்கள். இவர்கள் திருமணமான பெண்களையும் கூட தங்கள் கணக்கில் வைத்திருப்பார்கள். 

இவர்கள் இருவரிடமும் நவீன செல்போன்கள் இருக்கும். பாக்கெட்'ல் 10 ரூபாய் கூட இருக்காது.

இப்படி இந்த இருவருக்கும் ஒரே நோக்கம் என்னவென்றால், அழகான பெண்களை(திருமணம் ஆகி இருந்தாலும் கூட) பின்தொடர்வது, அப்பெண்கள் வழக்கமாக வந்தே தீர வேண்டிய இடங்களில் "Wait" செய்வது, மோசமான சிக்னல்கள் கொடுப்பது, பஸ்களில் தவறாமல் தினமும் வந்து அருகில் நின்றபடி நண்பர்களுடன் பேசுவது, கண்களில் காமத்தை வழிய விடுவது போன்றவைதான்.

சரி இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? காதலா? அறிவியலின் படி "காதல்" என்பதே ஒரு பொய்.  அது அவர்களுக்கும் தெரியும். படிப்போ, வேலை ஆகியவற்றில்  திறமையோ இல்லாத இவர்களுக்கு  ஒரு அழகான பெண் வேண்டும். அதுவும் நல்ல வசதியான வீட்டு பெண்களாகவோ அல்லது  நன்கு படித்து வேலைக்கு போகக் கூடிய பெண்களாகவோ இருந்தால் கூடுதல் அதிர்ஷ்டம். 

இதெல்லாம் இதை படிக்கும் நமக்கு முன்பே தெரியுமா? ஏன் தெரியாது? இப்படிப் பட்ட Character கொண்ட ஹீரோக்களின் படங்கள் தானே இங்கு Block Buster  அடிக்கிறது. நாம் தானே அவைகளை வெற்றி பெற வைக்கிறோம். 

சரி அதனால் என்ன?  இப்படி சமூகத்தில் பல இடங்களிலும், பலராலும் தொல்லைகளுக்கு உட்படுகின்ற பெண்கள் பெற்றோர்கள் அல்லது காவல் நிலையத்தில்  முறையிட்டாலும்,  அல்லது தானாகவே எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட அவர்களுக்கான பாதுகாப்பை பெற முடிவதில்லை. 

அழகை அல்லது பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வன்மங்கள் நிறைந்த பல மிருகங்கள் இந்நாட்டின் திருமகள்களை, தேவதைகளை, வேர்களை  'ஆசிட் வீச்சு' எனும் பேரால் நிர்மூலமாக்கி இருக்கின்றன.



சரி இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அரசாலும், ஆசிரியர்களால் முடியும். மத்திய அரசும், மாநில அரசுகளும் மாணவர்களின் ஒழுக்கக் கல்விக்கு முக்கியத்துவம் தரும்படி திட்டங்கள் வகுக்க வேண்டும்.  

கண்டிப்பு இருந்தால் தான் ஒழுக்கம் வரும்  என்பது விதி. ஒழுக்கம் தவறும் போது தண்டனை வரும் என்பதை ஆசிரியர்கள் சிறு வயது முதலே மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.(ஆனால் ஆர்வக் கோளாறில் நாம் தண்டனை அளிக்கக் கூடாது). வன்முறையற்ற தண்டனைகள் தர ஆசிரியர்களை அனுமதிக்கலாம்.  

Slow Learners ஐ படிக்க வைக்கலாம். அது நம் கடமை. ஆனால் முறைகேடுகளாலேயே முன்னுக்கு வந்து விடலாம் என்பவர்களை( Eg. Bihar SSLC Exam Video) எப்படி படிக்க வைக்க முடியும். அப்படி இருப்பவர்களை கண்டறிந்து, தொழிற்கல்வி பள்ளிகள் அமைத்து, ராணுவப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு வேலைவாய்ப்புகள்  தரக்கூடிய தொழிற் கல்வி  போன்ற மாற்றுக் கல்வி திட்டங்கள் அளிக்கலாம்.


சரி  இவற்றையெல்லாம் நாம் ஏன் இப்போது பேசுகிறோம்?


மிகக் கொடூரமான, ஆசிட் வீச்சுக்கு இலக்கான மேலே படத்தில் உள்ள லட்சுமி என்ற இளம்பெண்ணின் வழக்கை, 2006ம் ஆண்டு முதல் விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கொண்ட அமர்வுசிறப்பான ஒரு உத்தரவை நேற்று பிறப்பித்தது.


'ஆசிட்' தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு, உடனடியாக, தேவையான அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளையும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.



ஆசிட் வீச்சுக்கு இலக்காகும் பெண்கள், உடனடியாக தகுந்த சிகிச்சை கிடைக்காததால் தான், கடும் பாதிப்படைந்து உடல் பாகங்கள் கோரமாக ஆகின்றன என்பதால், இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோகுர், யு.யு.லலித் பிறப்பித்தனர்.

மேலும், இந்த உத்தரவை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிடம் இருந்தும் அதற்கான உறுதிமொழியை பெற்று, அருகில் உள்ள நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 15 முதல் நோடல் சென்டர்களில் விண்ணப்பிக்கலாம்

 14.04.2015 முதல் 21.04.2015 வரை

8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள்  14.04.2015 முதல்  21.04.2015 வரை நோடல் மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மண்டல  தேர்வுத் துறை துணை இயக்குநர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வு எழுத  01.05.2015 அன்று 12½  வயது நிறைவு பெற்று இருக்கவேண்டும்.


தேர்வுக்கட்டணம்  ரூ. 125 மற்றும் ஆன்லைன விண்ணப்பப் பதிவுக் கட்டணம்  ரூ. 50 ஆகியவை சேர்த்து  மொத்தம் ரூ.175/- ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் 

விண்ணப்பத்துடன் முன்னர் படித்த வகுப்பின் TC அல்லது  பிறப்புச் சான்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

நோடல் சென்டர்கள்:

வேலூர்

1. தோட்டப் பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - பெண்களுக்கு மட்டும் 
2. செயின்ட் ஆண்ட்ரூஸ், அரக்கோணம்   -  ஆண், பெண்  இருபாலரும் 
3. அரசு மேல்நிலைப்பள்ளி, ராணிபேட்டை - ஆண்கள் மட்டும் 
4.பெண்கள் மேல்நிலைப் பள்ளி , காட்பாடி  - ஆண், பெண்  இருபாலரும் 
5. ராமகிருஷ்ணா மேல்நிலை, திருப்பத்தூர்  - பெண்களுக்கு மட்டும் 
6. மஸ்ருல் உலம் மேல்நிலை , ஆம்பூர்  - ஆண்கள் மட்டும்
7.இந்து மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி - ஆண், பெண்  இருபாலரும்


திருவண்ணாமலை
1.ஷண்முகா இண்டஸ்ட்ரிஸ் மேல்நிலைப்பள்ளி  -ஆண்கள் மட்டும்
2.தியாகி அண்ணாமலை அ.மே.நி.பள்ளி - பெண்களுக்கு மட்டும் 
3. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போளூர் -ஆண், பெண்  இருபாலரும் 
4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கம் -ஆண், பெண்  இருபாலரும் 
5.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு - பெண்களுக்கு மட்டும் 
6.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி -ஆண்கள் மட்டும்
7.சுப்ரமணிய சாஸ்திரி  மேல்நிலைப்பள்ளி, ஆரணி- ஆண், பெண் 
தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட், தேர்வு நடைபெறும் நாட்கள் ஆகிய விவரங்கள் இணையத்தளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

Friday, April 10, 2015

கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக 10 ஆசிரியர்கள் தேர்வு



கற்பித்தலில் புதுமை

கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆசிரியர்களை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவர்களது கற்பித்தல் முறைகளை, இணையதளத்தில் பதிவேற்றவும், அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்தவும்; ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும், பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளை விட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த, புதிய முயற்சி ஒன்றை, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில், வீடியோவாக வெளியிட, முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, மாநிலம் முழுவதும், 1,526 ஆசிரியர்கள், தங்களின் கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர். இதில், கற்றலில் புதுமையை புகுத்திய 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 75 ஆசிரியர்களின் கற்பித்தலை, வீடியோ எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதைப் பார்த்து, மற்ற ஆசிரியர்களும் பின்பற்ற வாய்ப்புள்ளது என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
.
    காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், உத்திரமேரூர், நெல்லிக்குப்பம், நல்லம்பாக்கம், தென்மேல்பாக்கம், ஓனம்பாக்கம், குருவிமலை, கருநிலம், கொளத்துார், ஆத்தனஞ்சேரி, மதுரமங்கலம் ஆகிய 10 அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

     இதுவரை, எட்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், மீதமுள்ள இரண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை, வீடியோவாக பதிவு செய்து முடிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.