Sunday, September 25, 2016

Genuineness Certificate Fees - DD Amount - Application for All Universities - Revised Fee Structure after 01.09.2016

உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும் தொகையும் 


D.D Amount for Genuineness Certificate
 All Universities

அனைத்து  விவரங்களும் நடப்பு நிலவரப்படி அளிக்கப்பட்டுள்ளன 
 S.No
University
DD Amount
Payable at
1
Madras University
Rs. 250 for TN Govt /  Rs. 500 for Aided / Rs.1000 for Private / Rs. 1000 with postage for foreigners
Letter Sent to
The Registrar, University of Madras,
Chennai-600005

2
Periyar University , Selam
Rs.300 for Govt Rs.1200 for Others
The Registrar,
Periyar University Payable at Salem
3
IGNOU , New Delhi
Rs.200 for Govt 
Rs.400 for Others/
Rs. 1200 for SAARC
Countries Students
$100 for Non-SAARC Countries Students
The Registrar,IGNOU,
Payable at  New Delhi

IGNOU All Degree Genuineness Certificate.pdf 
(* Old Format - Mind it the Fee Corrections )
4
Annamalai University, Chidambaram
Rs. 600
 The Registrar, Annamalai University, Annamalai Nagar payable at Chidambaram    
5
Alagappa University, Karaikudi
Rs. 500 for Govt / Rs.1000 for others
The Registrar, Alagappa University Payable at Karaikudi
6
Bharathiyar University           , Coimbatore
Rs.500 for Govt / Rs.1000 for others / 

"The Registrar, Bharathiar University" payable at Coimbatore.
7
Bharathidasan University, Trichy

Rs.1000/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)


in favour of "Bharathidasan University" payable at Tiruchirappalli.
8
Madurai Kamarajar University

Rs.1500/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)

The Registrar, Madurai Kamaraj University payable at Madurai (or)
 SBI Chalan on MKU Account No. I payable at Palkalainagar Branch,Madurai
9
Manomaniam Sundaranar, Nellai

Rs. 500 for Govt and Aided / Rs.1000 for Private / Rs.1500 for foreigners

The Registrar, Manonmaniam Sundaranar University,   Payable at Thirunelveli
10
Tamilnadu Teacher Education University, Chennai
Rs. 500
The Registrar, Tamil Nadu Teachers Education University Payable at Chennai
11
Thiruvalluvar University, Vellore
Rs. 500 for Govt / Rs.1250 for Others
The
Registrar, Thiruvalluvar University”  payable at Vellore

மார்ச் 2017ல் 10ம் வகுப்பு தனித்தேர்வு (SSLC - PRIVATE) எழுத உள்ள மாணவர்கள், அறிவியல் செய்முறை தேர்வுக்கு 27.09.2016 முதல் 08.10.2016 வரை பதிவு செய்யலாம்

மார்ச் 2017ல் 10ம் வகுப்பு ( SSLC ) தேர்வு எழுதவுள்ள  தனித்தேர்வர்கள், அறிவியல் பாடத்திற்கான செய்முறைதேர்வுக்கு, தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள 27.09.2016 முதல் 08.10.2016 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில் (ஞாயிற்றுக் கிழமை தவிர), மாணவர்கள், அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கு (DEO Office) சென்று விண்ணப்பித்து பதிவு செய்துக்கொள்ளலாம்.

இவ்வாறு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமே, பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிகளில் சென்று செய்முறைத் தேர்வு செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

முதல் முறை தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், செய்முறைத் தேர்வு எழுதி இருந்தால் மட்டுமே, மார்ச் 2017 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSLC SEP/OCT - 2016 EXAMINATION HALL TICKET DOWNLOAD

Click Here to Download the X September 2016 Hall Ticket




Tuesday, September 20, 2016

Saithan - Official Teaser | Vijay Antony, Arundhathi Nair | Pradeep Kris...

மார்ச் 2017 - 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் 1 மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள் : அரசின் ஒப்புதலுக்காக தேர்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது

 
 
மார்ச் 2017ல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்,  ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு OMR ( Optical Mark Recognition) விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.  
 
கணினி அறிவியல் பாடங்களுக்கு மார்ச் 2000 முதலே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. TNPSC, TRB, UPSC தேர்வுகள் அனைத்தும் OMR விடைத்தாள்களை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகின்றன.
 
இதனால் ஒரு மதிப்பெண் விடைகள் 100% சரியான முறையில், OMR Reader இயந்திரங்களை பயன்படுத்தி திருத்தப் படுகிறது. மேலும் எத்தனை லட்சம் விடைத்தாட்கள் இருந்தாலும் ஓரிரு நாட்களில் முடிவுகள் அறியப்படும்.  
 
 
 
தேர்தல் துறையில் EVM ( Electronic Voting Machine) இயந்திரத்தை போல, தேர்வுத்துறையில் OMR Reader மிக குறைவான நேரத்தில், 100% நம்பகத்தன்மையான முடிவுகளை தருகிறது.

எனவே மார்ச் 2017ல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், அனைத்து பாடங்களுக்கும்  1 மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள் வழங்குவது குறித்து தேர்வுத்துறை முடிவு செய்து, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும்  மார்ச் 2017 மேனிலைப் பொதுத்தேர்வில்  அனைத்து பாடங்களுக்கும் OMR விடைத்தாள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

5 ஆண்டுகளுக்கு பிறகு, 10 மற்றும் 12ம் வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் , 150 மதிப்பெண்களுக்கும் கொள்குறி வகை (Objective Type) தேர்வுகள் நடத்தப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. மக்கள் தொகையும், மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க, மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம்.

Thursday, September 15, 2016

நாளை தமிழகத்தில் முழு அடைப்பு: தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்பு- அரசு பள்ளிகள் இயங்கும்- பெட்ரோல் பங்குகள் நாளை மாலை வரை மூடப்படும்



கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என தனியார நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்


இதனால் தமிழகம் முழுவதும் 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது. நாளைக்கு பதிலாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும், நாளை நடைபெற வேண்டிய காலாண்டுத் தேர்வு சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஏற்கெனவே தனியார் பள்ளிகள் வாகன சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

அரசுப் பள்ளிகளில் தேர்வு நடக்கும்:
 
தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இதுகுறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால், திட்ட மிட்டபடி தேர்வு நடக்கும்" என்றார்

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்:
 
காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நாளை (செப்.16) நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன


தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனையாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி கூறுகையில், "சங்க தலைவர் கே.பி.முரளி தலைமையில் நடந்த அவசர நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களையும் 16-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்குவதில்லை என முடிவெடுக்கப் பட்டுள்ளது" என்றார்.

Saturday, September 10, 2016

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்வது சார்பான சாத்தியக்கூறுகளை அளிப்பது சார்ந்து அரசு ஊழியர் / ஆசிரியர்கள் சங்கங்களுக்கு 15.09.2016 அன்று அழைப்பு விடுப்பு


Smart Ration Card - கூகிள் பிளே ஸ்டோரில் 'TNEPDS' App சேவை துவக்கம்





'Smart Ration Card  திட்டத்திற்காக, மொபைல் App  சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. 

தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'Smart' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'Point  of Sale' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம் அதிகமாக உள்ளது. 

இதனால் மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே ஆதார் விபரத்தை வழங்க, மொபைல் 'App' சேவையை, உணவு மற்றும் வழங்கல் துறை (TN Civil Supply Dept)  அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று TNEPDS என்ற App ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் ரேஷன் கார்டுதாரர் தன் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின், அவற்றில் கேட்கப்படும் விபரங்களை அளித்து, Aadhaar  அட்டையையும்  Barcode  வாயிலாக Scan  செய்து சமர்ப்பிக்கலாம்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிக அளவில், மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்கு செல்வது கிடையாது. எனவே, அவர்கள், ரேஷன் கடைக்கு சென்று காத்திருக்காமல், எளிய முறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி பலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாக வழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, September 8, 2016

குரூப் - 4 தேர்வு - விண்ணப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு ( Date Extended for TNPSC Group IV Online Application Upto Sep 14 )

 

 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  மூலம்  நவம்பர் 6ம் தேதி நடக்கவுள்ள  Group IV தேர்வுக்கு வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

குரூப் 4 தொகுதியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது , இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த செப்டம்பர் 16 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

Friday, September 2, 2016

அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு - முதல்வர் அறிவிப்பு


இன்று பாரத் பந்த்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன. 
 
வங்கி, இன்சூரன்ஸ் பணிகள் உட்பட நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் பணிகளில் 15 கோடி ஊழியர்கள் இந்த சங்கங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் வேலை நிறுத்த பாதிப்பு பெருமளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
சாலை போக்குவரத்து, மின் வினியோகம், சமையல் எரிவாயு, எண்ணை சப்ளையில் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. மின்சாரம், சுரங்கம், பாதுகாப்பு, டெலிகாம் மற்றும் இன்சூரன்ஸ் துறைகள் பாதிப்பை சந்திக்கும் எனவும், வங்கிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் அனேகமாக மூடப்படும் எனவும் தெரிகிறது. 
 
ஆட்டோ, டாக்சி யூனியன்கள் பலவும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து்ள்ளதால் அவற்றின் போக்குவரத்து பாதிக்கப்படலாம். 
 
தமிழகத்தை பொறுத்தளவில்,  வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. அரசு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை கைவிடக்கோரி தமிழ்நாடு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குழுவும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் தனியார் பஸ், ஆட்டோ, லாரிகள் ஓடாது. வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் அரசு பணிகள், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
வங்கிகளை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள 6000 வங்கி கிளைகளில் சேவை கடுமையாக பாதிக்கப்படும். பணப்பட்டு வாடா, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவையும் முற்றிலும் முடங்க வாய்ப்பு உள்ளது. 
 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி கூறுகையில், புதிய பென்‌ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய மாற்றுக் குழு அமைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழகத்தில் போராடி வருகிறோம். அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 5 லட்சம் அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம் என்றார். 
 
இன்று நடக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி, ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஈடுபடுகின்றனர்.

Monday, August 29, 2016

CPS திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை(DCRG) வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்

பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத்தில்(CPS) உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (Death Cum Retirement Gratuity) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படு கின்றனர். மத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டம், 2004 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. 

ராணுவத் தினருக்கு மட்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்(BASIC),  தர ஊதியம் (Grade Pay), அகவிலைப்படி(DA) ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.. இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும். இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் CPS எண் கொடுக்கப்பட்டு அதில் இரு தொகைகளும் வரவு வைக்கப்படும். 

இவ்வாறு CPS கணக்கில் சேரும் தொகை, அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது மொத்த தொகையில் 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதிய மாக வழங்கப்படும். புதிய ஓய் வூதிய திட்டத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என்றாலும் எவ்வளவு கிடைக்கும் என்பதை உத்தரவாதத்துடன் சொல்ல இயலாது. மேலும், இந்த திட்டத்தில் பழைய அரசு ஊழியர் களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை (கிராஜுவிட்டி), குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்களும் கிடையாது. 

தமிழகத்தில் சுமார் 4.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத் திருக்கிறது. 

இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர் களுக்கும் பணிக்கொடை வழங்க மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி ஓர் உத்தரவை பிறப்பித்துள் ளது. அதில், 1.1.2004-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையைப் பெற தகுதியுடையவர் ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், நிதித்துறை செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் நல அமைச்ச கத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூ தியதாரர் நலத்துறை இயக்குநர் கடந்த 26-ம் தேதி தகவல் அனுப்பி யுள்ளார். 

பணிக்கொடை என்பது ஓர் ஊழியரின் பணிக்காலத்துக்கு ஒவ்வோர் ஆண்டுக்கும் அரை மாத சம்பளம் என்ற வீதத்தில் கணக் கிடப்படும். அதாவது, ஒரு ஊழியர் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந் தால் தோராயமாக அவரின் 10 மாத சம்பளம் பணிக்கொடையாக கிடைக்கும். தற்போது பணிக் கொடைக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உள்ளது.

Friday, August 26, 2016

QUARTERLY EXAMINATION – SEPTEMBER 2016 - TIME TABLE


DATE
DAY
XII
X
08.09.2016
THU
 LANGUAGE  I PAPER
LAN. I PAPER
09.09.2016
FRI
 LANGUAGE  II PAPER
-
10.09.2016
SAT
 ENGLISH I PAPER
LAN.  II PAPER
12.09.2016
MON
 ENGLISH II PAPER
ENGLISH I
13.09.2016
TUE
BAKRID HOLYDAY
14.09.2016
WED
 COMMERCE/ HOME SCIENCE/  
 GEOGRAPHY
ENGLISH II
15.09.2016
THU
 MATHS  / MICRO BIOLOGY / ZOOLOGY /  NUTRITION AND DIET /  TEXTILES  
 DESIGN  / FOOD MGMT AND CHILD CARE/  AGRICULTURE PRACTICES  / POLITICAL 
 SCIENCE  /  NURSING (VOC & GEN) / 
 ACCOUNTANCY & AUDITING
-
16.09.2016
FRI
 COMMUNICATIVE ENGLISH/ INDIAN  
 CULTURE/  COM.SCI / BIO CHEMISTRY /  STATISTICS /  ADV. LANGUAGE(TAMIL)
MATHS
19.09.2016
MON
 PHYSICS / ECONOMICS
 VOCATIONAL:
 GM / EE / DC/  EMA / AM/ TT/  OSS
SCIENCE
21.09.2016
WED
 CHEMISTRY / ACCOUNTANCY
OPTIONAL LANGUAGE
23.09.2016

 BIOLOGY/ BOTANY/HISTORY /
 BUSINESS  MATHS
SOCIAL SCIENCE

Tuesday, August 23, 2016

மேல்நிலைத் துணைத்தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு ( October Private Exam for XII - Online Application, Centre, Time Table Announced)

 

மேல்நிலைத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 24.08.2016  முதல்    (25.08.2016 மற்றும் 28.08.2016 ஆகிய விடுமுறை நாட்கள் தவிர்த்து )  31.08.2016  மாலை 5.45 வரை தங்களின் விண்ணப்பங்களை, தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நோடல் மையங்களுக்கு சென்று பதிவு செய்யலாம். 

யார் விண்ணப்பிக்கலாம்? 
  • ஏற்கனவே நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்  தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் H வகையினர் 
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும், 16 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள்  நேரடித் தனித்தேர்வர்களாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் HP வகையினர். 
பாடத்திட்டம் 

நேரடித் தனித்தேர்வர்கள் (HP) 

முதன்முதலாக மேல்நிலைத் தேர்வெழுதும் HP வகை நேரடித் தனித்தேர்வர்கள், பகுதி I மற்றும் II மொழிப் பாடங்களுடன் பின்வரும் ஐந்து பாடத் தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். 
 
பாடத் தொகுப்பு எண்
பகுதி 3 பாடங்கள்
304
வரலாறு,பொருளியல்,வணிகவியல்,கணக்குப் பதிவியல்
305
பொருளியல்,அரசியல் அறிவியல்,வணிகவியல், கணக்குப் பதிவியல்
306
பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், இந்தியக் கலாச்சாரம்
307
பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், சிறப்பு மொழி (தமிழ்)
308
பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம்

அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் 

ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் (Service centres) அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்


தேர்வுக் கட்டணம் 

மறுமுறை தேர்வெழுதுவோர் (H வகை தனித்தேர்வர்கள்) 
  • ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ35/-ம் செலுத்த வேண்டும். 
  • ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- 
நேரடித் தனித்தேர்வர்கள் (HP வகை தனித்தேர்வர்கள்) 
  • தேர்வுக் கட்டணம் ரூ.150/- இதரக் கட்டணம் ரூ.35/- கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு ரூ.2/- மொத்தம் ரூ.187/- 
  • ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- 
  • தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை பணமாக செலுத்த வேண்டும். 
மாற்றுத் திறனாளிகள் கவனத்திற்கு

  1. பார்வையற்றோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 
  2. மாற்றுத் திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய குறிப்பிட்ட சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 
விண்ணப்ப எண்ணின் முக்கியத்துவம்

ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 

தேர்வு மையம்

தனித்தேர்வர்கள் அவரவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும். 
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
 
H வகையினர் 
  • உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையங்களில் (Service Centre) பணமாகச் செலுத்த வேண்டும். 
  • மதிப்பெண் சான்றிதழ் ஒளிநகல் (இதுவரை எழுதிய மேல்நிலைத் தேர்வுகளுக்கானது).ஜூன் 2016 பருவத்தில் தேர்வெழுதியோர் தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினை இணைக்க வேண்டும். 
  • பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவராக பதிவு செய்யப்பட்டு தேர்வெழுதாதவர்களுக்கு மட்டும்). 
  • செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வெழுதுவோர் மட்டும்) 
HP வகையினர் 
  • உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையங்களில் (Service Center) பணமாகச் செலுத்த வேண்டும். 
  • பத்தாம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ். 
  • பள்ளி மாற்றுச் சான்றிதழின் அசல் 
  • இடப்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்) 
மேற் குறிப்பிட்டுள்ள இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

மேலும் மேற் குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 14.09.2016 மற்றும் 15.09.2016 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின் (Takkal) மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.