Thursday, September 8, 2016

குரூப் - 4 தேர்வு - விண்ணப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு ( Date Extended for TNPSC Group IV Online Application Upto Sep 14 )

 

 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  மூலம்  நவம்பர் 6ம் தேதி நடக்கவுள்ள  Group IV தேர்வுக்கு வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

குரூப் 4 தொகுதியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது , இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த செப்டம்பர் 16 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

No comments: