மார்ச் 2017ல் 10ம் வகுப்பு ( SSLC ) தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், அறிவியல் பாடத்திற்கான செய்முறைதேர்வுக்கு, தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள 27.09.2016 முதல் 08.10.2016 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில் (ஞாயிற்றுக் கிழமை தவிர), மாணவர்கள், அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கு (DEO Office) சென்று விண்ணப்பித்து பதிவு செய்துக்கொள்ளலாம்.
இவ்வாறு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமே, பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிகளில் சென்று செய்முறைத் தேர்வு செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.
முதல் முறை தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், செய்முறைத் தேர்வு எழுதி இருந்தால் மட்டுமே, மார்ச் 2017 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.