Monday, September 7, 2015

தமிழக அரசு சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தொகுப்பூதியத்தில் 4 பணியிடங்கள்

சமூக பாதுகாப்புத் துறையால் மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.



 வஎண் 
 பணியிடத்தின் பெயர் 
 பணியிடத்தின் எண்ணிக்கை 
 மாத தொகுப்பு ஊதியம் 
 1
 திட்ட மேலாளர் 
 1
 ரூ.35000/-
 2
 திட்ட அலுவலர் 
 1
 ரூ.26250/-
 3
 கணக்கர் 
 1
 ரூ.14000/-
 4
 உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் 
 2
 ரூ.10000/-


கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பட்டம் 

வயது : 40 வயதிற்கு மிகாமல் 
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி : 14.09.2015 மாலை 5.30க்குள் 

மேலும் விவரங்களுக்கு http://www.tn.gov.in/job_opportunity

Saturday, September 5, 2015

"கற்களை சிலைகளாக்கும் சிற்பிகள்" - அனைத்து நண்பர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

  
 Dr. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(05.09.1888 - 17.04.1975)
 
நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த மாமேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று(செப்டம்பர் 5) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது

டாக்டர் ராதாகிருஷ்ணன் 05.09.1888ல்  திருத்தணியில் தெலுங்கு நியோகி பிராமணப்பிரிவு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஆரம்பக் கல்வியை திருத்தணியில் பயின்றார். திருப்பதியில் உள்ள லுத்தரன் மிஷன் பள்ளியில் உயர்நிலைக்கல்வியை பயின்றார்.

வேலூர் ஊரிஸ் கல்லூரியில் B.A தத்துவம் சேர்ந்து பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு மாறுதல் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் M.A. தத்துவவியல் முடித்த பின்பு, 1909ல்  சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக சேர்ந்தார்.

1914ல் கணித மேதை டாக்டர் ஸ்ரீனிவாச ராமானுஜம், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு செல்வதற்கு முன் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க மன்னர் V ஜார்ஜ் பெயரால் வழங்கப்படும் தத்துவவியல் பேராசிரியர் பதவியை பெற்றார்.

1931ல் ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் ஆனார். 
1939ல் மதன் மோகன் மாளவியா நிறுவிய பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பேற்றார்.

சுதந்திரம் பெற்ற பிறகு 1948ல் பல்கலைக்கழக கல்விக் குழுவின்(University Education Commission ) தலைவர் ஆனார்.

1949ல் சோவியத் யூனியனுக்கான தூதுவராக நியமிக்கப் பட்டார்.

1952ல் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்
.
1954ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே ஆண்டில் அமெரிக்காவில் இவரது "The Philosophy of Dr. Sarvepalli Radhakrishnan" புத்தகம் வெளியிடப் பட்டது.
(Dr.Radhakrishnan and American President John F.Kennedy)

1962ல் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவி வகிக்க அ வருக்கு அழைப்பு விடப்பட்டும் அவர் அதை விரும்பவில்லை.



அவரது 79வது வயதில் 1967ல் அவர் சென்னை திரும்பினார். தனது இறுதி நாள்வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது "Girija" இல்லத்தில் மகிழ்வோடு இருந்தார்.

1975 ஏப்ரல் 17ம் நாள்  அவர் இம்மண்ணுலகை விட்டு மறந்தார்.

சிறந்த ஆசிரியர்
 
அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பணியை போற்றியவர் 
 
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை சேர்த்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்களுக்கு முன்னுதாரணம்.

ஆசிரியர்கள், சமூகத்தின் அடிப்படை:
 
ஒரு சமூகம் அதி உன்னத நிலை அடைந்து இருந்தால் நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம்.

ஆசிரியர்கள், சமூக சிற்பிகள்: 
 
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தினையும், தன்னம்பிக்கை, நன்னெறி,ஒழுக்கம், அறிவுத்தேடல் ஆகியவற்றை ஊட்ட வேண்டும். ஒரு குழந்தை விரும்பா விட்டாலும் அதன் தாய் எப்படி உணவை வாயில் அடைத்து ஊட்டுகின்றாரோ அதை போல எப்படிப் பட்ட மாணவர்களையும் கைவிடாது ஆசிரியர்கள் இதை செய்யவேண்டும். இதை சரியாக செய்யும்போதுதான், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை அடைந்ததாக அர்த்தம்.

கல்போல, களிமண் போல  பக்குவம் இல்லாமல் தன்னிடம் வரும் மாணவர்களை , சிலைகளாகவும், சிற்பங்களாகவும்  செதுக்கிடும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர்தின நல் வாழ்த்துக்கள்!

நாட்டுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி பிறந்தநாள்

V.O.Chidambaram Pillai
(05.09.1872 - 18.11.1936)
  • ஆங்கிலேயருக்கு கனவுகளில் கூட சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட தலைவர்.
  •  
  • 19ம் நூற்றாண்டில் நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர்.

  • ஏழைகளின் வழக்கறிஞர்.

  •  சுதேசி இயக்கத்தில் லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றியவர்.

  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1907ல்  S.S.Galileo, S.S.Lavo என்னும் கப்பல்களை வாங்கி   Swadeshi Steam Navigation Company (SSNC) என்னும் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கியவர்.
  • ஆங்கில அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களை நடத்தியவர்.

  • 12.03.1908ல் சிறையில் அடைக்கப்பட்டு, சிறைதண்டனையில் செக்கிழுத்தவர்.
 
  • செல்வந்தராக பிறந்து, நாட்டுக்காக அனைத்தையும் இழந்து மரணம் வரை வறுமையில் வாழ்ந்தவர்.
சுதந்திரப் போராட்டச் செம்மல் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்த நாளை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

Friday, September 4, 2015

ஆசிரியர் தினம் : முதல்வர் வாழ்த்து

 

செப்டம்பர் 5 - ஆசிரியர் தின வாழ்த்துரையாக தமிழக முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "கல்வி வளம் பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற லட்சியத்தோடும், தியாக உணர்வோடும், மன மகிழ்வோடும் ஆசிரியராக தன் பணியை தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் "ஒரு நாட்டின் உயர்வு தாழ்வு அந்த நாட்டின் இளைஞர்களுக்குக் கிடைக்கும் கல்வியைப் பொறுத்தே அமையும்" என்றார் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வியை அளித்திடும் வகையில் அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு 64,485.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 

அத்துடன் 1,319 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, 182 தொடக்கப் பள்ளிகள், தேசிய சட்டப் பள்ளி, 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. சிறந்த கல்வியை மாணவர்கள் இடையூறின்றி பெற்றிடும் வகையில் இதுவரை இல்லாத அளவிற்கு 72,843 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 

ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக திருச்சிராப்பள்ளியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆசிரியர் இல்லம், சென்னை, சைதாப்பேட்டையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் ஆசிரியர் இல்லக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 

அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவுக்கண்ணை திறந்திடும் மகத்தான மனிதவள மேம்பாட்டுப் பணியினை ஆற்றி வரும் ஆசிரியப் பெருமக்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு சிறப்பாகக் கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொளகிறேன். 

நாட்டின் எதிர்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கற்பித்து, அவர்களைத் தேசத்தின் விலை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கிடும் உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியர் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இன்று ESLC 'ரிசல்ட்'


எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிப்பில், 'மே மாதம் நடந்த, எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படும்.தேர்வு எழுதிய மையத்தில் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 2, 2015

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு அசல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்




ஜூன் 2015ல்  நடைபெற்ற 10ம்  வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள்  இன்று(02.09.2015) முதல் அந்தந்த தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Tuesday, September 1, 2015

நாளை பாரத் பந்த்! நாடு முழுவதும் ஆட்டோ, டாக்சி ஓடாது. வங்கிகள் முடங்கும்


தொழிலாளர் சட்டம், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் போன்ற சில சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்  என  எதிர்ப்பு தெரிவித்து   11 தொழிற்சங்கங்கள் நாளை (02.09.2015) பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. முன்னதாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் பந்த்துக்கு தங்கள் முழு ஆதரவு இருப்பதாக சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட தமிழகத்தின் 12 ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்த நகரத்திலும் நாளை ஆட்டோக்கள் ஓடாது. அதேபோல, இந்த வேலைநிறுத்தத்தில், தமிழகத்தில் ஷேர் ஆட்டோ, டாக்சி, கால்டாக்சி உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் பல நகரங்களிலும் நாளை வேலை நிறுத்த பாதிப்பு எதிரொலிக்கும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால் காசோலை மற்றும் வங்கி பரிமாற்றங்கள் பாதிக்கப்படும்.  குறிப்பிடத்தக்கது.

Sunday, August 30, 2015

லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு மைய கருத்துக்கணிப்புகள் -தேர்தல் 2016(Layola College Census Predictions- Election 2016)


 
சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு மையம் சார்பில் இம்மாதம் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.  

3370 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டார்கள். ஆண்களும், பெண்களும் இந்த கருத்துக்கணிப்பில் சம அளவில் கலந்து கொண்டார்கள். அதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் சுருக்கத்தினை  மட்டும் வரைபடங்களில் அளிக்கிறோம்.







Saturday, August 29, 2015

2009 ஏப்ரல் 1 முதல் 2014 மார்ச் 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு வட்டித்தொகை தள்ளுபடி

வங்கிகளில் 2009 ஏப்ரல் 1 முதல் 2014 மார்ச் 31ம் தேதி வரை  கல்விக்கடன் பெற்றவர்களுக்கு  வட்டித்தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. 

'அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற, தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் விளம்பரம் செய்ய வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்களே வங்கிகளை நேரடியாக அணுகி மனு அளித்தும்  கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடியைப் பெறலாம். 

'வட்டி தள்ளுபடி தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். புகாரின் பிரதியை, இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் அனுப்பலாம்' என கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் ஆலோசனை கூறியுள்ளார்.

Friday, August 28, 2015

தமிழகத்திலுள்ள 690 B.Ed கல்லூரிகளில் சேர செப்டம்பர் 3 முதல் விண்ணப்பம்

 

தமிழகத்திலுள்ள  690 B.Ed கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  வரும் செப்டம்பர்  3ம்  தேதி முதல் 10ம் தேதி வரை வழங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை கீழ்காணும் கல்லூரிகளில் பெறலாம். 

S.No
Name of the College
Phone No
1
Institute of Advance Study in Education, Saidapet, Chennai -15
044-24358351
2
Lady Willingdon College, Triplicane, Chennai-5
044-28445531
3
Govt College of Education, Kumarapalayam,Namakkal Dist
04288-260085
4
Govt College of Education, Orathanadu, Thanjavur District
04372-233258
5
Govt College of Education, Pudukottai
04322-221559
6
Govt College of Education for Women, Townhall, Coimbatore – 641001
0422-2397616
7
Govt College of Education, Silk Mill, Gandhi Nagar, Vellore-6
0416-2243103
8
Lakshmi College of Education ,Gandhigram, Dindigul Dist-624302
0451-2452337
9
Sri Sarada College of Education for Women, Sarada College Road, New Fairlands,
Salem- 636016
0427- 2447538
0427- 244 9201
10
Thiagarajar College of Preceptors, Madurai
0452-2311682
0452- 2311875
11
V.O.C. College of Education, Palayamkottai Road, Thoothukkudu- 628008
0461-2310600
12
St.Ignatius College of Education for Women, South Mutharamman Kovil Street, Palayamkottai, Tirunelveli-627002
http://www.ignatiuscollegeofeducation.com/
0462- 2560558
13
N.V.K.S.D. College of Education, Attoor, Thiruvattar (Via)- 629191, Kanyakumari
04651 282 130

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 
11.09.2015 மாலை 5.00 மணிக்குள் 

மேலும் விவரங்களுக்கு

Welcome to mythical King Mahabali - Happy Onam for All my Friends

அனைத்து தமிழ் , கேரள  நண்பர்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்


"When Maveli ruled the land,
All the people were equal.
And people were joyful and merry;
They were all free from harm. 



There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
There were no lies,
There  was neither theft nor deceit,
And no one was false in speech either.



Measures and Weights were right;
No one cheated or wronged his neighbor.


When Maveli ruled the land,
All the people formed one caste less races"

 Thanks To: #HappyOnam, Alicia Blain ‏@trstydotcom, www.ns7.tv, www.deepika.comwww.mathrubhumi.com