Saturday, April 11, 2015

'ஆசிட்' தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு



நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற எண்ணற்ற மனித மிருகங்களையும் தான் நாம் கடந்து போகிறோம். 

சிலர் 15 வயது தாண்டியவுடனே, தலைமுடியை கண்டபடி செதுக்கி இருப்பார்கள். கழுத்தில் பிளேடு போட்ட சங்கிலியை போட்டிருப்பார்கள். கைகளில் தனது ஜாதி சார்ந்த ரப்பர் வளையம் இருக்கும்.  Yamaha, Pulsar, Apache போன்ற ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளில் நண்பர்களுடன் சாலைகளை அலற விடுவார்கள். Accident ஆகி அடிபட்டாலும் கூட மீண்டும் அப்படித்  தான் இருப்பார்கள். பஸ் ஸ்டாண்ட், பெண்கள் கல்லூரி வாசல், பெண்கள் பள்ளிக்கூட வாசல், டியூஷன் வாசல் என எல்லா வாசல்களிலும் நின்று பெண்களை தொந்தரவு செய்வார்கள்.

வேறு சிலர் அதிக பட்சம் 10ம் வகுப்பிற்குள் படித்திருப்பார்கள். தலையை விட முடி அதிகமாக இருக்கும்.  பின்பக்கம் நீளமாக வால் ஒன்றை வைத்திருப்பார்கள். கிருதா 'வை கத்தி போன்று டிசைன் செய்திருப்பார்கள். அழுக்கு டி-சர்ட், ஜீன்ஸ் இருக்கலாம். எந்த பழக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம். எப்போதாவது வேலை இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வேலை  பஸ் ஸ்டாண்ட், பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி, கார்மெண்ட்ஸ் வாசல்கள் இதர சில இடங்கள். இவர்கள் திருமணமான பெண்களையும் கூட தங்கள் கணக்கில் வைத்திருப்பார்கள். 

இவர்கள் இருவரிடமும் நவீன செல்போன்கள் இருக்கும். பாக்கெட்'ல் 10 ரூபாய் கூட இருக்காது.

இப்படி இந்த இருவருக்கும் ஒரே நோக்கம் என்னவென்றால், அழகான பெண்களை(திருமணம் ஆகி இருந்தாலும் கூட) பின்தொடர்வது, அப்பெண்கள் வழக்கமாக வந்தே தீர வேண்டிய இடங்களில் "Wait" செய்வது, மோசமான சிக்னல்கள் கொடுப்பது, பஸ்களில் தவறாமல் தினமும் வந்து அருகில் நின்றபடி நண்பர்களுடன் பேசுவது, கண்களில் காமத்தை வழிய விடுவது போன்றவைதான்.

சரி இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? காதலா? அறிவியலின் படி "காதல்" என்பதே ஒரு பொய்.  அது அவர்களுக்கும் தெரியும். படிப்போ, வேலை ஆகியவற்றில்  திறமையோ இல்லாத இவர்களுக்கு  ஒரு அழகான பெண் வேண்டும். அதுவும் நல்ல வசதியான வீட்டு பெண்களாகவோ அல்லது  நன்கு படித்து வேலைக்கு போகக் கூடிய பெண்களாகவோ இருந்தால் கூடுதல் அதிர்ஷ்டம். 

இதெல்லாம் இதை படிக்கும் நமக்கு முன்பே தெரியுமா? ஏன் தெரியாது? இப்படிப் பட்ட Character கொண்ட ஹீரோக்களின் படங்கள் தானே இங்கு Block Buster  அடிக்கிறது. நாம் தானே அவைகளை வெற்றி பெற வைக்கிறோம். 

சரி அதனால் என்ன?  இப்படி சமூகத்தில் பல இடங்களிலும், பலராலும் தொல்லைகளுக்கு உட்படுகின்ற பெண்கள் பெற்றோர்கள் அல்லது காவல் நிலையத்தில்  முறையிட்டாலும்,  அல்லது தானாகவே எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட அவர்களுக்கான பாதுகாப்பை பெற முடிவதில்லை. 

அழகை அல்லது பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வன்மங்கள் நிறைந்த பல மிருகங்கள் இந்நாட்டின் திருமகள்களை, தேவதைகளை, வேர்களை  'ஆசிட் வீச்சு' எனும் பேரால் நிர்மூலமாக்கி இருக்கின்றன.



சரி இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அரசாலும், ஆசிரியர்களால் முடியும். மத்திய அரசும், மாநில அரசுகளும் மாணவர்களின் ஒழுக்கக் கல்விக்கு முக்கியத்துவம் தரும்படி திட்டங்கள் வகுக்க வேண்டும்.  

கண்டிப்பு இருந்தால் தான் ஒழுக்கம் வரும்  என்பது விதி. ஒழுக்கம் தவறும் போது தண்டனை வரும் என்பதை ஆசிரியர்கள் சிறு வயது முதலே மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.(ஆனால் ஆர்வக் கோளாறில் நாம் தண்டனை அளிக்கக் கூடாது). வன்முறையற்ற தண்டனைகள் தர ஆசிரியர்களை அனுமதிக்கலாம்.  

Slow Learners ஐ படிக்க வைக்கலாம். அது நம் கடமை. ஆனால் முறைகேடுகளாலேயே முன்னுக்கு வந்து விடலாம் என்பவர்களை( Eg. Bihar SSLC Exam Video) எப்படி படிக்க வைக்க முடியும். அப்படி இருப்பவர்களை கண்டறிந்து, தொழிற்கல்வி பள்ளிகள் அமைத்து, ராணுவப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு வேலைவாய்ப்புகள்  தரக்கூடிய தொழிற் கல்வி  போன்ற மாற்றுக் கல்வி திட்டங்கள் அளிக்கலாம்.


சரி  இவற்றையெல்லாம் நாம் ஏன் இப்போது பேசுகிறோம்?


மிகக் கொடூரமான, ஆசிட் வீச்சுக்கு இலக்கான மேலே படத்தில் உள்ள லட்சுமி என்ற இளம்பெண்ணின் வழக்கை, 2006ம் ஆண்டு முதல் விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கொண்ட அமர்வுசிறப்பான ஒரு உத்தரவை நேற்று பிறப்பித்தது.


'ஆசிட்' தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு, உடனடியாக, தேவையான அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளையும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.



ஆசிட் வீச்சுக்கு இலக்காகும் பெண்கள், உடனடியாக தகுந்த சிகிச்சை கிடைக்காததால் தான், கடும் பாதிப்படைந்து உடல் பாகங்கள் கோரமாக ஆகின்றன என்பதால், இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோகுர், யு.யு.லலித் பிறப்பித்தனர்.

மேலும், இந்த உத்தரவை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிடம் இருந்தும் அதற்கான உறுதிமொழியை பெற்று, அருகில் உள்ள நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 15 முதல் நோடல் சென்டர்களில் விண்ணப்பிக்கலாம்

 14.04.2015 முதல் 21.04.2015 வரை

8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள்  14.04.2015 முதல்  21.04.2015 வரை நோடல் மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மண்டல  தேர்வுத் துறை துணை இயக்குநர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வு எழுத  01.05.2015 அன்று 12½  வயது நிறைவு பெற்று இருக்கவேண்டும்.


தேர்வுக்கட்டணம்  ரூ. 125 மற்றும் ஆன்லைன விண்ணப்பப் பதிவுக் கட்டணம்  ரூ. 50 ஆகியவை சேர்த்து  மொத்தம் ரூ.175/- ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் 

விண்ணப்பத்துடன் முன்னர் படித்த வகுப்பின் TC அல்லது  பிறப்புச் சான்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

நோடல் சென்டர்கள்:

வேலூர்

1. தோட்டப் பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - பெண்களுக்கு மட்டும் 
2. செயின்ட் ஆண்ட்ரூஸ், அரக்கோணம்   -  ஆண், பெண்  இருபாலரும் 
3. அரசு மேல்நிலைப்பள்ளி, ராணிபேட்டை - ஆண்கள் மட்டும் 
4.பெண்கள் மேல்நிலைப் பள்ளி , காட்பாடி  - ஆண், பெண்  இருபாலரும் 
5. ராமகிருஷ்ணா மேல்நிலை, திருப்பத்தூர்  - பெண்களுக்கு மட்டும் 
6. மஸ்ருல் உலம் மேல்நிலை , ஆம்பூர்  - ஆண்கள் மட்டும்
7.இந்து மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி - ஆண், பெண்  இருபாலரும்


திருவண்ணாமலை
1.ஷண்முகா இண்டஸ்ட்ரிஸ் மேல்நிலைப்பள்ளி  -ஆண்கள் மட்டும்
2.தியாகி அண்ணாமலை அ.மே.நி.பள்ளி - பெண்களுக்கு மட்டும் 
3. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போளூர் -ஆண், பெண்  இருபாலரும் 
4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கம் -ஆண், பெண்  இருபாலரும் 
5.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு - பெண்களுக்கு மட்டும் 
6.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி -ஆண்கள் மட்டும்
7.சுப்ரமணிய சாஸ்திரி  மேல்நிலைப்பள்ளி, ஆரணி- ஆண், பெண் 
தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட், தேர்வு நடைபெறும் நாட்கள் ஆகிய விவரங்கள் இணையத்தளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

Friday, April 10, 2015

கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக 10 ஆசிரியர்கள் தேர்வு



கற்பித்தலில் புதுமை

கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆசிரியர்களை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவர்களது கற்பித்தல் முறைகளை, இணையதளத்தில் பதிவேற்றவும், அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்தவும்; ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும், பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளை விட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த, புதிய முயற்சி ஒன்றை, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில், வீடியோவாக வெளியிட, முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, மாநிலம் முழுவதும், 1,526 ஆசிரியர்கள், தங்களின் கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர். இதில், கற்றலில் புதுமையை புகுத்திய 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 75 ஆசிரியர்களின் கற்பித்தலை, வீடியோ எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதைப் பார்த்து, மற்ற ஆசிரியர்களும் பின்பற்ற வாய்ப்புள்ளது என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
.
    காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், உத்திரமேரூர், நெல்லிக்குப்பம், நல்லம்பாக்கம், தென்மேல்பாக்கம், ஓனம்பாக்கம், குருவிமலை, கருநிலம், கொளத்துார், ஆத்தனஞ்சேரி, மதுரமங்கலம் ஆகிய 10 அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

     இதுவரை, எட்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், மீதமுள்ள இரண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை, வீடியோவாக பதிவு செய்து முடிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Wednesday, April 8, 2015

Dearness Allowance Hiked by 6%; to benefit over 1 crore Central Govt Employees



மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.


ஆறாவது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.  இதனால்  ஆண்டுக்கு ரூ. 6762.24 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பம் -தேர்வுத் துறை அறிவிப்பு

தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் விண்ணப்பிக்கலாம் 

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்க வேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Tuesday, April 7, 2015

WHO: World Health Day 2015, Food Safety - the Global View

அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடங்கள்



பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை 

மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் RMSA திட்டத்தின் கீழ், தமிழக அரசு பள்ளிகளில், 25 வகை தொழிற்கல்வி படிப்புகள் துவங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழிற்கல்வியினையும்   கற்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த பகுதிகள் சார்ந்துள்ள தொழில்களுக்கு ஏற்ப, பொது இயந்திரவியல், எலெக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், ஆடை உற்பத்தி, ஜுவல்லரி தயாரிப்பு உட்பட, 25 வகை தொழில் படிப்புகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


முதற்கட்டமாக, ஒன்பதாம் வகுப்பில் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளிலும், அந்த பகுதிகளில் நிலவும் தொழில் சார்ந்த இரண்டு படிப்புகள் துவங்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday, April 5, 2015

சத்தமின்றி முத்தமிடு

dbd's RainTree Studio's Presents
 
How to fall in love with King Cobra
 
இப்படி பண்ணா நீங்களும் கூட பாம்புக்கு "இச்"  தரலாம்.


Saturday, April 4, 2015

'Online' ல் 12ம் வகுப்பு விடைத்தாள் நகல் பள்ளிக்கல்வித் துறை முடிவு

 'Online' ல் 12ம் வகுப்பு விடைத்தாள் நகல்

மார்ச் 2015ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, Online மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.
இந்த ஆண்டு முதல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியானதும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. 
மேலும் கூடுதல் வசதியாக மாணவர்கள்,  மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
இதன்படி, இந்த ஆண்டு, Online மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Aloe Vera Face Packs to Remove Dark Spots, Acne Scars & Pimple Marks

How to Lighten Dark Underarms

Wednesday, April 1, 2015

தமிழன்டா.........

தமிழன்டா.........

(கதை, சம்பவங்கள் கற்பனையே, நகைச்சுவைக்காக மட்டுமே SunMicroSystems பெயரை பயன்படுத்தி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் - deccanbluediamonds)


உகண்டா ல இருக்குற SunMicroSystems கம்பெனில JavaOS ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ண உலகம் முழுசும் இருந்து Apply பண்ணலாம் னு விளம்பரம் பண்ணி இருந்தாங்க. ஒரே ஒரு Vacant  தான்.


நம்ம ஆளுக்கு வேலை தான் எதுவும் இல்லையே,"சரி இதுக்காச்சும் apply பண்ணலாம்"னு அப்ளிகேசன் போட்டாரு.
இண்டர்வியு நாள் வந்தது. நம்ம ஆள் ஆப்பிரிக்கா கெளம்பி போனாரு. உகாண்டா கேபிடல் Kampala வுல இறங்கி நேரா கம்பெனிக்கு போனாரு.
.

அங்கே இவரைப் போல 5000 பேர் இன்டர்வியு' க்கு வந்திருந்தாங்க.  

நெறைய பேர் இருந்ததால, ஆளுங்களை filter பண்ண கம்பெனி முடிவெடுத்தாங்க.
முதல்ல "எத்தனை பேருக்கு JAVA OS ல அனுபவம் இருக்கு" னு  கேட்டாங்க.

நம்மாளுக்கு இந்தோனேசியா ல  இருக்குற JAVA  தீவு தான் தெரியும். இருந்தாலும் "பாத்துக்கலாம் விட்றா" னு தைரியம் ஆகி "தெரியும்" னு  சொல்லிட்டாரு.
java  தெரியாததால 3000 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "அமெரிக்கன் இங்கிலீஷ் ல எத்தன பேரு fluent" னு கேட்டாங்க.

நம்மாளுக்கு  தமிங்கிலீஷ் தான்  கரெக்ட்டா தெரியும். இருந்தாலும் இது ரெண்டாவது பொய் தானேன்னு நெனைச்சி "தெரியும்" னு  சொல்லிட்டாரு.
English  தெரியாததால 1000 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "எத்தனை பேர் ஆப்ரிக்கன் country" னு  கேட்டாங்க.

"சரி அடிச்சி விடுவோம்" னு  நெனைச்சி நம்மாளும்  "நானும் ஆப்ரிக்கா  தேங் " னு சொல்லிட்டாரு.
ஆப்ரிக்கனா  இல்லாததால ஒரு 500 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "எத்தனை பேருக்கு HR  ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு"னு கேட்டாங்க.நம்மாளுக்கும் அதுல ஒண்ணும் இல்லைதான். இருந்தாலும், டீ  கடைல, பார்பர் ஷாப் ல பொது அறிவை வளர்ததுனால அவரு "இருக்கு" ன்னுட்டாரு.
HR எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம 400 பேர் குறைஞ்சாங்க. 100 பேர் தான்  மிச்சம். அதுல நம்மாளு ஒருத்தர்.

கடைசியா, "எத்தனை பேருக்கு உகாண்டா மொழியான Bantu தெரியும்" னு கேட்டாங்க.

நம்மாளுக்கு தமிழே தகறாரு. இந்தி இம்சை, English  னாவே இழுப்பு வந்திடும். இருந்தாலும் 'பத்தோட பதினொன்னு' னு  நெனைச்சி "எனக்கு ரொம்ப நல்லா தெரியும்" னு சொல்லிட்டாரு.
Bantu மொழி தெரியாம 98 பேர் போயிட்டாங்க. 

மிஞ்சி இருந்தது ரெண்டே பேர் தான். அதுல நம்மாளு ஒருத்தர். உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறல் எடுத்தாலும் நம்மாளு கொஞ்சம் கெத்தோட உக்காந்து இருந்தாரு.
Interview பண்றவங்க கடைசியா இருந்த ரெண்டு பேரையும் "உங்களோட Bantu மொழியில பேசிக்குங்க பாப்போம்"னு சொன்னங்க.

நம்மாளு எதிர்ல இருந்தவர் கிட்டே கேட்டாரு.

"தம்பிக்கு எந்த ஊரு?"
அதுக்கு அவன் சொன்னான்.

"அண்ணே நான் திருச்சி பக்கம். நீங்க?"

Tuesday, March 31, 2015

12 ம் வகுப்பு AGRI தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 12 மதிப்பெண்கள் போனஸ்



 12 ம் வகுப்பு AGRI தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை  உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், இஎம்ஏ, ஜிஎம், வேளாண் செயல்முறைகள் ஆகிய  தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது.


தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.


தோட்டக்கால் பயிர் குறித்து இடம்பெற்ற, 47வது வினா குழப்பமானதாக இருந்ததால், மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். இது குறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.  

வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம், கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட அந்த  வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில்47வது வினா, 3,4 வது 1 மதிப்பெண் வினா ஆகியவற்றுக்கு மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - பள்ளிக்கல்வி இயக்குனர் தேதி அறிவிப்பு



பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

வேலூர்: "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே கடைசி வாரத்திலும் வெளியாகும்என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும்,

  • ஏப்ரல் முதல் வாரத்திலேயே 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படும்.
  • ஜூன் மாதத்தில் , 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, மே கடைசி வாரத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். 

 எனவும், அரக்கோணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Monday, March 30, 2015

வெளிமாநிலத்தில் 10,12ம் வகுப்பு படித்த தமிழக அரசு பணியாளர்களுக்கான 2ம்,3ம் நிலை மொழித் தேர்வு முடிவுகள் TNPSC வெளியீடு

SECOND CLASS LANGUAGE TEST  & 3RD CLASS LANGUAGE TEST - RESULT ANNOUNCED BY TNPSC (EXAM HELD ON 13,16,17,18,19,20 MARCH 2015 )


மார்ச் மாதத்தில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற TNPSC 2ம் நிலை ,3ம் நிலை மொழித் தேர்வு (VIVA VOICE) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன  

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்களின் பெயர்ப் பட்டியலை http://www.tnpsc.gov.in/Resultget-dec2k14.html என்னும் வலைத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முடிவுகளை DOWNLOAD செய்ய கீழே கிளிக் செய்யவும்.

RAMNAD DISTRICT - NOON MEAL COOKING ASSISTANT RECRUITMENT -சத்துணவு மையங்களில் 219 சமையல் உதவியாளர் பணியிடம்

  RAMNAD DISTRICT 

NOON MEAL PROGRAM - COOKING ASSISTANT RECRUITMENT

ராமநாதபுரம்  

சத்துணவு மையங்களில் 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகின்றன. 

பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்ய, பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மண்டபம் - 27, ஆர்.எஸ்.மங்கலம் -18, திருவாடானை - 26, முதுகுளத்தூர் - 15, கமுதி - 22, கடலாடி - 26, பரமக்குடி - 17, போகலூர் - 14, நயினார்கோவில் - 11, திருப்புல்லாணி - 22, ராமநாதபுரம் - 17, ராமநாதபுரம் நகராட்சி - 1, பரமக்குடி நகராட்சி - 3, என மொத்தம் 219 பள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி
  1. ஐந்தாம் வகுப்பு படித்து, எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
  2. ஆதி திராவிடர் 1.1.2015 அன்று 21 வயது நிரம்பியவராகவும், பழங்குடியினர் 18 வயது நிரம்பியவராகவும், இருதரப்பினரும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 
  3. விண்ணப்பதாரர் காலி இடம் உள்ள மையம் அமைந்திருக்கும் ஊரிலோ அல்லது 3 கி.மீ., தொலைவிற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை http://www.ramnad.tn.nic.in/nmp.htm என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பத்துடன் கல்வி, வயது, இருப்பிடச் சான்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஜாதிச்சான்றுகளின் ஜெராக்ஸ் இணைத்து ஏப்., 7க்குள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம். அன்றைய தினமே நேர்காணல் நடத்தப்படும்.  தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களும், ஏப்., 7 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.

விண்ணப்பத்தினை பெற கீழே DOWNLOAD செய்யவும்.

 

Technical Teachers’ Certificate (TTC)  Course in 
Typewriting 2015
தட்டச்சு தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிப்பு  -  தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு.


2015ம் ஆண்டிற்க்கான தட்டச்சு தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தகுதிகள் 

1.  01.03.2015 அன்று 25 வயது நிரம்பி இருக்க வேண்டும் 
2.  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தமிழ் அல்லது ஆங்கில தட்டச்சில் Higher தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தினை tndte.gov.in என்னும் வலைத்தளத்தில்  பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பம் மற்றும்  விவரங்களை கீழே download செய்யவும்.

Monday, March 23, 2015

WORLD WATER DAY 2015 - March 22 - Water and Sustainable Development



இதை படிக்கலேன்னா நீங்க வரும் காலத்தில் ரொம்ப கஷ்டப் படுவீங்க. தண்ணியே இல்லாத ஊர்ல சதுர அடி 1500 ரூபாய்க்கு வாங்குவோமே. அந்த மாதிரி.(So,  Read Must and Be Cool Friends.)

 Humanity Needs Water

 A drop of water is flexible. A drop of water is powerful.

A drop of water is in demand.

தண்ணீர் என்பது உடல்நலன் (Water is Health)

மனிதனின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தண்ணீர். உணவு இல்லாமல் பல வாரங்கள் கூட மனிதனால் உயிர் வாழமுடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது. கைகளை சுத்தமாக கழுவுவதாலேயே நாம் பெரும்பாலான நோய்களை தவிர்த்து விட முடியும். ஒரு கிராம் மனிதக் கழிவில் சுமார் 1 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதனின் உடல் சராசரியாக 50-65% தண்ணீரைக் கொண்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகள் உடலில் 78% தண்ணீர் உள்ளது. மனிதர்களாகிய நாம்  தினந்தோறும் குடிக்கவும் , குளிக்கவும், சமைக்கவும், துவக்கவும் என பல விதங்களில் தண்ணீரைச் சார்ந்தே வாழ்கிறோம்.  உலகில் சுமார் 75 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட  குடிநீர் வசதி இல்லாமலே வாழ்கிறார்கள். சுமார் 250 கோடி மக்களுக்கு சரியான சுகாதார வசதிகள் இல்லை. எனவே வருங்காலத்தில்  தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் சார்ந்த தொழில்துறை வளர்ச்சிபெரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 தண்ணீர் என்பது இயற்கை  (Water is  Nature )

 உலகின் சுற்றுச் சூழல் என்பது  நிலையான, தொடர்ச்சியான நீர் சுழற்சியை மட்டுமே நம்பி உள்ளது.  சுத்திகரிக்கப் படாத தொழிற்சாலை கழிவுகள், விவசாயக் கழிவுகள், இல்லக் கழிவுகள்  என எல்லாவற்றையும் ஆறுகளிலும் , கால்வாய்களிலும், ஏரிகளிலும் கலந்து சுத்தமான நன்னீர் மண்டலங்களை எல்லாம் நாம் பாழ்படுத்தி விட்டோம். 

 இந்தியாவை பொறுத்தவரை, கங்கை நதியை நாம் மிகவும் கீழ்த்தரமாக மாசுபடுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் காவேரி, பாலாறு, வைகை, பவானி என அனைத்து ஆறுகளும் கழிவுநீர் கால்வாய்களாகிவிட்டன. இதனால் இயற்கையின் சமநிலையும் சுற்றுச் சூழலும் வெகுவாக பாதிக்கப் பட்டு எங்கெங்கு காணினும் வறட்சியை மட்டுமே கண்டு வருகிறோம்.

 

 தண்ணீர் என்பது நகர்மயமாதல்   (Water is urbanization )

உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சுமார் 10 இலட்சம் மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். நகரமயமாக்கல் பெரும்பாலும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் சுமார் 93% இருக்கும் என  UN DESA’s Population Division ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் நகர்ப்புறங்களில் சுமார் 40% பகுதிகள் குடிசைப் பகுதிகளை இருக்கும். 2050ம் ஆண்டிற்குள் 250 கோடி மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா , சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில் மிகப் பெரும் நகர்மயமாதல் ஏற்படும் எனவும் UN DESA ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் என்ன ஆகும்?

நகர்புற மேம்பாடுகளை செய்வது என்பது 2050ம் ஆண்டுவாக்கில் பெரும் சவாலானதாக இருக்கும். தற்போதுள்ள நீர் மேலாண்மை கட்டமைப்புகள் அனைத்தும் ஏராளமான தண்ணீரை வீணாக்குகின்றன. கழிவுநீர் அமைப்புகள் எல்லாம் முறையாக இல்லாமலும், காலாவதி ஆகியும் உள்ளன. இதனால் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் பைப்புகளை புதைக்க வேண்டியிருக்கும்.

                                                                                   --  இன்று மாலை நிறைவு பெறும் .