Thursday, March 16, 2017

தமிழக பட்ஜெட் : 2017 - 18 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

தமிழக சட்டசபையில் 2017 - 18 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் இன்று தாக்கல் செய்கிறார். இதற்காக சட்டசபையை காலை 10.30 மணிக்குக் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார். 


23ஆம் தேதி, வரும் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் டி.ஜெயகுமார் உரையாற்றவுள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இலவச செல்போன் உள்ளிட்ட சில புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments: