Sunday, March 5, 2017

+2 விடைத்தாள் திருத்தம், ஏப்ரல் 1 முதல் துவங்கும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி துவங்கி மார்ச் 31ல் முடிவடைகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக தேர்வுகள் நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெற்றதால் ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதனை தடுக்க, இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின், ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கப்பட்ட உள்ளது. ஏப்ரல் 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: