Thursday, March 16, 2017

வாகன பதிவுக்கு 'ஆதார்' அவசியம். 01.04.2017 முதல் தமிழகத்தில் அமல்

தமிழகத்தில் 01.04.2017 முதல் வாகனங்கள் பதிவு செய்ய 'ஆதார்' எண் அவசியம்' என, அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, 'வாகன் 4' என்னும் புதிய மென்பொருளை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வழங்கி உள்ளது. அந்த மென்பொருள், 01.04.2017 முதல் செயல்பட துவங்கி உள்ளது.அந்த மென்பொருளில், 'அலைபேசி போன், ஆதார், பான்' எண் உள்ளிட்ட விண்ணப்பதாரரின் முழுமையான விபரங்கள் இடம்பெறும் வகையில், விண்ணப்ப படிவம் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள வாகன விற்பனையாளர் களுக்கும் போக்குவரத்து துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'வரும் ஏப்., 1 முதல், வாகனம் வாங்கும் அனைவரிடமும், ஆதார், பான், அலைபேசி எண்ணை கட்டாயம் பெற்று, பதிவு செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வாகன விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

No comments: