Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Thursday, March 30, 2017
Thursday, March 16, 2017
வாகன பதிவுக்கு 'ஆதார்' அவசியம். 01.04.2017 முதல் தமிழகத்தில் அமல்
தமிழகத்தில் 01.04.2017 முதல் வாகனங்கள் பதிவு செய்ய 'ஆதார்' எண் அவசியம்' என, அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வாகன விற்பனையாளர் களுக்கும் போக்குவரத்து துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'வரும் ஏப்., 1 முதல், வாகனம் வாங்கும் அனைவரிடமும், ஆதார், பான், அலைபேசி எண்ணை கட்டாயம் பெற்று, பதிவு செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வாகன விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழக பட்ஜெட் : 2017 - 18 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்
தமிழக சட்டசபையில் 2017 - 18 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் இன்று தாக்கல் செய்கிறார். இதற்காக சட்டசபையை காலை 10.30 மணிக்குக் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.
23ஆம் தேதி, வரும் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் டி.ஜெயகுமார் உரையாற்றவுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இலவச செல்போன் உள்ளிட்ட சில புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
இந்த அகவிலைப்படி உயர்வு 01.01.2017 முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
இதற்கு முன் 01.07.2016ல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
Wednesday, March 8, 2017
1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு (1111 BT Teachers Will have Appointed through TRB. List on 10.03.2017 in TRB Website)
2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு TET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து, பள்ளிக்கல்வித் துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவு பணியிடங்கள்
623, அனைவருக்கும் கல்விதி திட்டத்தின் கீழ் 202 பணியிடங்கள் ஆகியவற்றுக்கு, தரவரிசைப் பட்டியல்
அடிப்படையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அற்கான பட்டியல் 10 மார்ச் 2017ம்
தேதி www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும்.
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக
வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், B.Ed படித்த வருடத்திலேயே தகுதித்
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், ஏற்கெனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ்
சரிப்பார்ப்புக்கு வராதவர்கள் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது
பணித் தெரிவுக்குரிய தகுதியினைப் பெறாமல் தற்போது தகுதியைப்
பெற்றிருப்பவர்கள் ஆகியோர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டி
விண்ணப்பித்து உள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின்
தகுதி பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 10.03.2017ம்
ஆண்டு வெளியிடப்படும். அந்தப் பட்டியல் ஆன்லைனில் 20.03.2017 வரை இருக்கும். தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அதில் உரிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம்
கூறியுள்ளது.
Sunday, March 5, 2017
+2 விடைத்தாள் திருத்தம், ஏப்ரல் 1 முதல் துவங்கும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி துவங்கி மார்ச் 31ல் முடிவடைகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தேர்வுகள் நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெற்றதால் ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதனை தடுக்க, இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின், ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கப்பட்ட உள்ளது. ஏப்ரல் 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Friday, March 3, 2017
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2017
TEACHERS RECRUITMENT BOARD
COLLEGE ROAD,CHENNAI-6
TAMIL NADU TEACHER
ELIGIBILITY TEST
(TNTET) - 2017
The applications for Tamil Nadu Teachers Eligibility Test will
be available for sale from 06.03.2017 to 22.03.2017.
Candidates can submit the filled in applications from 06.03.2017
to 23.03.2017.
TET SYLLABUS - PAPER 1
TET SYLLABUS - PAPER 2
PROSPECTUS
Application Sales & Receiving Center's
Wednesday, March 1, 2017
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் குறைதீர்க்கும் மையம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு ( Grievance Redressal for SSLC and +2 Exam Students)
10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 30ம் தேதி
வரையும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் மார்ச்
31ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக
அரசு தேர்வாணையம் நான்கு எண்களை அறிவித்துள்ளது.
இந்த எண்களில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை
தெரிவிக்கலாம் என அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்கம் வழங்கியிருக்கும் தொலைபேசி எண்கள்
8012594114, 8012594115, 8012594122, 8012594124
DEPARTMENTAL EXAMINATIONS – MAY- 2017 - Registration Upto 31.03.2017
தமிழக அரசின் துறைத்தேர்வுகள் 24.05.2017 முதல் 31.05.2017 வரை நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 31.03.2017 கடைசி நாளாகும்.
டிசம்பர் 2016ல் நடைபெற்ற துறைத்தேர்வுகளின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Apply Online, Click the link Below
or
10ம் வகுப்பு, மார்ச் 2017 - பொதுத்தேர்வு எழுதவுள்ள மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள்(Urdu, Telugu, Kannada, Malayalam-Language Minority Students) தமிழ் பாடத்தேர்வு எழுத தேவையில்லை
'மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு , இந்த ஆண்டும்(மார்ச் 2017), தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு
தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என, 2006ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி, 2016ல், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத வேண்டும். அப்போது, மொழி சிறுபான்மை பள்ளிகள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ் மொழி கற்பிக்க, தமிழ் ஆசிரியர்களை அரசு நியமிக்கவில்லை; எனவே, இந்த ஆண்டு தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என, கோரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத, மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது.
தற்போது
தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அதில், தமிழ் மொழி பாடம் தேர்வு எழுத விலக்கு அளிக்கவும், அதற்கு பதில், தங்கள் தாய் மொழி பாடத்தில் எழுத அனுமதிக்கவும் கோரப்பட்டது.
மனுக்களை, தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன்
அடங்கிய, ’முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த
வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ரவீந்திரன் மற்றும் வழக்கறிஞர் தாட்சாயிணி
ரெட்டி ஆஜராகினர்.
வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், ’உயர் நீதிமன்றம்,
2016 மார்ச்சில் பிறப்பித்த உத்தரவு, இந்த ஆண்டுக்கும் தொடரும்’ என, முதல்
பெஞ்ச் உத்தரவிட்டது. மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கான
நடவடிக்கைகளை, இரண்டு நாட்களில் முடிக்கும் படியும், கல்வித்துறைக்கு முதல்
பெஞ்ச் உத்தரவிட்டது.
Subscribe to:
Posts (Atom)