Thursday, November 10, 2016

2.5 லட்சத்திற்கு மேல் DEPOSIT செய்யப்படும் பணம், வருமானத்திற்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டால், வருமான வரி + 200% அபராதம்:

வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள அறிக்கை

வருமானத்திற்கு அதிகமான பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள், தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .


அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும் அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம் வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம் அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. 


நகை வாங்க PAN எண் கட்டாயம் 

மேலும்,  நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண் கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

No comments: