Thursday, September 29, 2016

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இதன்படி,

1. லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

2. நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

3. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

4. லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை என மொத்தம் 20%  வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33% குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படும்.

7. அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகையோ வழங்கப்படும்.

8. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

9. ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல் வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

10. இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8400 ரூபாய் அதிகபட்சம் 16800 ரூபாய் பெறுவர். தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் போனஸாக வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, September 27, 2016

TNPSC தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? (TNPSC Exam's Preparation Tips)


Base : M.Karthikeyan @ Dinamalar 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆண்டு தோறும் Group-I, Group-II, Group-IV, Group -VIII,  VAO  மற்றும் பலவிதமான தேர்வுகளை நடத்தி, பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.

கல்வி ஒன்று மட்டுமே துணையாகக் கொண்ட, வசதியற்ற பல்லாயிரம் இளைஞர், இளம்பெண்களின்  எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றக்கூடியதாக விளங்கும் TNPSC தேர்வுகளில் வெற்றியடைய வேண்டுமானால், சிறப்பான திட்டமிடல் வேண்டும். 

TNPSC தேர்வுகளுக்கான திட்டமிடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சில முக்கிய ஆலோசனைகள் இங்கே வழங்கப் படுகிறது.

  • தேர்வுக்கான தேதி அறிவிப்பு வந்தவுடன், தேர்வு நடைபெறும் நாள்வரையிலான நேரத்தை. பாடத்திட்டத்திற்கேற்ப  பகுத்து படிக்க வேண்டும்.

  • தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தான் முதல் அடித்தளம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் பொதுவாக மாநில அரசு தேர்வுகளுக்கான அடிப்படை புரிதலை வழங்குகின்றன.

  • ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவது அறிவுறுத்தத் தகுந்தது.

  • நாம் எவ்வாறு தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து வைத்திருக்கிறோம்  என்பதே தேர்வுக்கான வழிகாட்டியாகும்.  முந்தைய ஆண்டுகளுக்கான தேர்வுக் கேள்விகளை எவ்வாறு ஆய்ந்தறிந்துள்ளோம் என்பதும், அதற்கடுத்தாற்போல் எவ்வளவு சுய பயிற்சிகளை தேர்வுக்கு முன் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

  • தேர்வுக்கான ஊக்குவிப்புகளை புத்தகங்களில் தேடுவதை விட, எந்தப் பதவிக்கு தேர்வு எழுதுகிறோமோ அது பற்றிய விவரங்களையும், அதற்கான உங்களின் பாடங்களையும் தினசரி நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்தது.பாடத்திட்ட அடிப்படையிலான தயாரிப்பானது, பின்வரும் முறையில் மேற்கொள்ளப்படலாம்.

அறிவியல்

தமிழக அரசு தேர்வுகளுக்கு அறிவியல் பாடமானது முக்கிய பாடமாக கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது.

அறிவியல் பாடம், தேர்வுக்கான மதிப்பெண்களில் முக்கிய இடம் வகிப்பதால், அதில் சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம்.

வைட்டமின்கள், நோய்களும் காரணிகளும், நோய்த்தடைகாப்பு மண்டலம் - இரத்தம், நரம்பு மண்டலம், இயற்கை வளங்கள் (மரபு சார்ந்த மற்றும் மரபுசாரா வளங்கள்), கனிம வளம் மிகுந்த பகுதிகள் ஆகியவை சிறப்பு கவனம் பெறும்.

ஒளிச்சேர்க்கை - செல் - செல்லின் அமைப்பு - செல்லின் பாகங்கள் - கனிகள் - விதைகள் - மகரந்த சேர்க்கை - இனப்பெருக்கம் - தாவர நோய்கள் - சுவாசித்தல் ஆகியவையும் இடம் பெறலாம்.

சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள், பொதுத் தாள் புத்தகங்கள் அறிவியல் பாடத் தயாரிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு:


போட்டித் தேர்வுகளில் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதியாக இது கருதப்படுகிறது.

பொதுவாகவே இவற்றிலுள்ள பெரும்பாலான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அடிப்படை உரிமைகள், அரசு நெறிப்படுத்தும் கொள்கைகள், பாராளுமன்றம், மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வரலாறு

வரலாறு பாடத்திற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான சமச்சீர் புத்தகங்கள் ஆரம்பக் கட்ட புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1857-1947), கவர்னர்கள் (1757-1947), புத்த சமயம், சமணசமயம், சமூக சீர்திருத்த இயக்கம், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரீகம், குப்தர்கள், மௌரியர்கள், சேர, சோழர், பாண்டியர் காலம், சுல்தான்கள் மராத்தியர்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வது நல்லது.

பொருளாதாரம்

குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தே பொருளாதாரத்தில் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஆனாலும் அவற்றை அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.

பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்

போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முக்கியமான பகுதிகளாக பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் கருதப்படுகின்றன. நாள்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிரபல நபர்கள், அரசாங்க திட்டங்கள், தமிழக நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.

புவியியல்

இந்திய, தமிழக வரைபடங்கள், உயர்ந்த சிகரங்கள், மலைத்தொடர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

மனத்திறன் பயிற்சி மற்றும் அறிவுக்கூர்மை திறன்

வினாத்தாளில் நான்கில் ஒரு பகுதிக் கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்கப்படுகின்றன.


சில குறிப்புகள்

முக்கிய ஆண்டுகளை நினைவில் வைத்திருத்தல் அவசியம். இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.

குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 8 ஆகிய தேர்வுகளுக்கு நடப்பு அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக நிகழ்வுகளை அறிந்து வைத்திருத்தல் கூடுதல் பயனளிக்கும்.

முறையான மற்றும் தேவையான கையேடுகளை மட்டும் படித்தாலே இத்தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

அனைத்து பாடபுத்தகங்களையும் கைப்பேசி அல்லது கணினி உதவியோடு இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

வாழ்த்துக்கள் 
Composed By:  DBD  Team 

Sunday, September 25, 2016

DEPARTMENTAL EXAMINATIONS – DECEMBER- 2016 - Registration Upto 30.09.2016 ( Reminder Notice)

தமிழக அரசின் துறைத்தேர்வுகள் 23.12.2016 முதல்  31.12.2016 வரை நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 30.09.2016 கடைசி நாளாகும்.

Genuineness Certificate Fees - DD Amount - Application for All Universities - Revised Fee Structure after 01.09.2016

உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும் தொகையும் 


D.D Amount for Genuineness Certificate
 All Universities

அனைத்து  விவரங்களும் நடப்பு நிலவரப்படி அளிக்கப்பட்டுள்ளன 
 S.No
University
DD Amount
Payable at
1
Madras University
Rs. 250 for TN Govt /  Rs. 500 for Aided / Rs.1000 for Private / Rs. 1000 with postage for foreigners
Letter Sent to
The Registrar, University of Madras,
Chennai-600005

2
Periyar University , Selam
Rs.300 for Govt Rs.1200 for Others
The Registrar,
Periyar University Payable at Salem
3
IGNOU , New Delhi
Rs.200 for Govt 
Rs.400 for Others/
Rs. 1200 for SAARC
Countries Students
$100 for Non-SAARC Countries Students
The Registrar,IGNOU,
Payable at  New Delhi

IGNOU All Degree Genuineness Certificate.pdf 
(* Old Format - Mind it the Fee Corrections )
4
Annamalai University, Chidambaram
Rs. 600
 The Registrar, Annamalai University, Annamalai Nagar payable at Chidambaram    
5
Alagappa University, Karaikudi
Rs. 500 for Govt / Rs.1000 for others
The Registrar, Alagappa University Payable at Karaikudi
6
Bharathiyar University           , Coimbatore
Rs.500 for Govt / Rs.1000 for others / 

"The Registrar, Bharathiar University" payable at Coimbatore.
7
Bharathidasan University, Trichy

Rs.1000/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)


in favour of "Bharathidasan University" payable at Tiruchirappalli.
8
Madurai Kamarajar University

Rs.1500/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)

The Registrar, Madurai Kamaraj University payable at Madurai (or)
 SBI Chalan on MKU Account No. I payable at Palkalainagar Branch,Madurai
9
Manomaniam Sundaranar, Nellai

Rs. 500 for Govt and Aided / Rs.1000 for Private / Rs.1500 for foreigners

The Registrar, Manonmaniam Sundaranar University,   Payable at Thirunelveli
10
Tamilnadu Teacher Education University, Chennai
Rs. 500
The Registrar, Tamil Nadu Teachers Education University Payable at Chennai
11
Thiruvalluvar University, Vellore
Rs. 500 for Govt / Rs.1250 for Others
The
Registrar, Thiruvalluvar University”  payable at Vellore

மார்ச் 2017ல் 10ம் வகுப்பு தனித்தேர்வு (SSLC - PRIVATE) எழுத உள்ள மாணவர்கள், அறிவியல் செய்முறை தேர்வுக்கு 27.09.2016 முதல் 08.10.2016 வரை பதிவு செய்யலாம்

மார்ச் 2017ல் 10ம் வகுப்பு ( SSLC ) தேர்வு எழுதவுள்ள  தனித்தேர்வர்கள், அறிவியல் பாடத்திற்கான செய்முறைதேர்வுக்கு, தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள 27.09.2016 முதல் 08.10.2016 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில் (ஞாயிற்றுக் கிழமை தவிர), மாணவர்கள், அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கு (DEO Office) சென்று விண்ணப்பித்து பதிவு செய்துக்கொள்ளலாம்.

இவ்வாறு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமே, பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிகளில் சென்று செய்முறைத் தேர்வு செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

முதல் முறை தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், செய்முறைத் தேர்வு எழுதி இருந்தால் மட்டுமே, மார்ச் 2017 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSLC SEP/OCT - 2016 EXAMINATION HALL TICKET DOWNLOAD

Click Here to Download the X September 2016 Hall Ticket




Tuesday, September 20, 2016

Saithan - Official Teaser | Vijay Antony, Arundhathi Nair | Pradeep Kris...

மார்ச் 2017 - 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் 1 மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள் : அரசின் ஒப்புதலுக்காக தேர்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது

 
 
மார்ச் 2017ல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்,  ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு OMR ( Optical Mark Recognition) விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.  
 
கணினி அறிவியல் பாடங்களுக்கு மார்ச் 2000 முதலே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. TNPSC, TRB, UPSC தேர்வுகள் அனைத்தும் OMR விடைத்தாள்களை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகின்றன.
 
இதனால் ஒரு மதிப்பெண் விடைகள் 100% சரியான முறையில், OMR Reader இயந்திரங்களை பயன்படுத்தி திருத்தப் படுகிறது. மேலும் எத்தனை லட்சம் விடைத்தாட்கள் இருந்தாலும் ஓரிரு நாட்களில் முடிவுகள் அறியப்படும்.  
 
 
 
தேர்தல் துறையில் EVM ( Electronic Voting Machine) இயந்திரத்தை போல, தேர்வுத்துறையில் OMR Reader மிக குறைவான நேரத்தில், 100% நம்பகத்தன்மையான முடிவுகளை தருகிறது.

எனவே மார்ச் 2017ல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், அனைத்து பாடங்களுக்கும்  1 மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள் வழங்குவது குறித்து தேர்வுத்துறை முடிவு செய்து, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும்  மார்ச் 2017 மேனிலைப் பொதுத்தேர்வில்  அனைத்து பாடங்களுக்கும் OMR விடைத்தாள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

5 ஆண்டுகளுக்கு பிறகு, 10 மற்றும் 12ம் வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் , 150 மதிப்பெண்களுக்கும் கொள்குறி வகை (Objective Type) தேர்வுகள் நடத்தப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. மக்கள் தொகையும், மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க, மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம்.

Thursday, September 15, 2016

நாளை தமிழகத்தில் முழு அடைப்பு: தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்பு- அரசு பள்ளிகள் இயங்கும்- பெட்ரோல் பங்குகள் நாளை மாலை வரை மூடப்படும்



கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என தனியார நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்


இதனால் தமிழகம் முழுவதும் 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது. நாளைக்கு பதிலாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும், நாளை நடைபெற வேண்டிய காலாண்டுத் தேர்வு சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஏற்கெனவே தனியார் பள்ளிகள் வாகன சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

அரசுப் பள்ளிகளில் தேர்வு நடக்கும்:
 
தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இதுகுறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால், திட்ட மிட்டபடி தேர்வு நடக்கும்" என்றார்

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்:
 
காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நாளை (செப்.16) நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன


தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனையாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி கூறுகையில், "சங்க தலைவர் கே.பி.முரளி தலைமையில் நடந்த அவசர நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களையும் 16-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்குவதில்லை என முடிவெடுக்கப் பட்டுள்ளது" என்றார்.

Saturday, September 10, 2016

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்வது சார்பான சாத்தியக்கூறுகளை அளிப்பது சார்ந்து அரசு ஊழியர் / ஆசிரியர்கள் சங்கங்களுக்கு 15.09.2016 அன்று அழைப்பு விடுப்பு


Smart Ration Card - கூகிள் பிளே ஸ்டோரில் 'TNEPDS' App சேவை துவக்கம்





'Smart Ration Card  திட்டத்திற்காக, மொபைல் App  சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. 

தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'Smart' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'Point  of Sale' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம் அதிகமாக உள்ளது. 

இதனால் மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே ஆதார் விபரத்தை வழங்க, மொபைல் 'App' சேவையை, உணவு மற்றும் வழங்கல் துறை (TN Civil Supply Dept)  அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று TNEPDS என்ற App ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் ரேஷன் கார்டுதாரர் தன் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின், அவற்றில் கேட்கப்படும் விபரங்களை அளித்து, Aadhaar  அட்டையையும்  Barcode  வாயிலாக Scan  செய்து சமர்ப்பிக்கலாம்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிக அளவில், மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்கு செல்வது கிடையாது. எனவே, அவர்கள், ரேஷன் கடைக்கு சென்று காத்திருக்காமல், எளிய முறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி பலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாக வழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, September 8, 2016

குரூப் - 4 தேர்வு - விண்ணப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு ( Date Extended for TNPSC Group IV Online Application Upto Sep 14 )

 

 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  மூலம்  நவம்பர் 6ம் தேதி நடக்கவுள்ள  Group IV தேர்வுக்கு வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

குரூப் 4 தொகுதியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது , இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த செப்டம்பர் 16 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது