Friday, July 29, 2016

10ம் வகுப்பு துணை தேர்வு ’ரிசல்ட்’

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன்/ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். 


தேர்வு முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், நாளை முதல், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, இரு தாள்கள் உடைய பாடத்துக்கு தலா, 305 ரூபாய்; ஒரு தாள் பாடத்துக்கு, தலா, 205 ரூபாய் மற்றும், &'ஆன்லைன்&' கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

Thursday, June 16, 2016

+2 துணை தேர்வுக்கு இன்று முதல் Hall Ticket

ஜூன் 22 முதல் நடைபெற உள்ள  12ம் வகுப்பு சிறப்பு  துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். 

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு, 'தத்கல்' உட்பட அனைத்து வழியிலும், விண்ணப்பித்தவர்கள் இன்று முதல், தங்கள், 'ஹால் டிக்கெட்'களை, www.tngdc.gov.in  இணையதளத்தில், வரும் 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. 

விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத பொதுத்தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம், 'ஹால் டிக்கெட்'டை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Sunday, June 12, 2016

SSLC INSTANT EXAM- JUNE 2016 - TATKAL ANNOUNCEMENT ( 13.06.2016 - 14.06.2016 2 Days only)

மார்ச் 2016ல் 10ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியுற்று, ஜூன் 2016 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் 


தேர்வுக்கட்டண விவரம் 

தத்கல் கட்டணம்                                                                                           :    500
தேர்வுக் கட்டணம்  (எத்தனை பாடங்கள் இருந்தாலும் )         :     125
ஆன்லைன் பதிவுக் கட்டணம்                                                                 :     50


Friday, June 10, 2016

XII INSTANT EXAM- JUNE 2016 - TATKAL ANNOUNCEMENT ( 10.06.2016 - 11.06.2016 2 Days only)

மார்ச் 2016ல் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியுற்று, ஜூன் 2016 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இன்றும், நாளையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் 


தேர்வுக்கட்டண விவரம் 

தத்கல் கட்டணம்                                                :  1000
தேர்வுக் கட்டணம்  ( 1 பாடத்திற்கு )         :      50
மதிப்பெண் சான்று கட்டணம்                     :      35
ஆன்லைன் பதிவுக் கட்டணம்                    :     50


இம்மாணவர்கள் சென்னையில் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள்.
 

Thursday, June 2, 2016

01.06.2006ல் முறையான நியமனத்திற்கு உட்படுத்தப் பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.06.2016ல் தேர்வு நிலை வழங்குவதற்கான படிவம்

01.06.2006ல் முறையான நியமனத்திற்கு உட்படுத்தப் பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.06.2016ல் தேர்வு நிலை வழங்குவதற்கான  படிவம், மொத்த பணிக்கால விவரம், பதிவுத்தாள், இணைப்பு விவரங்கள் 

MS Word File (Vanavil Avvaiyar Font)  & JPG Format 

Click Here To Download
  


 
 

Wednesday, June 1, 2016

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள் அல்லது பங்கேற்காதர்வளுக்காக ஜூன் 29 முதல் ஜூலை 8ம் தேதி வரை சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் அல்லது தேவெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குநர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று  ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்

தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ. 175

ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகளிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

ஹால்டிக்கெட்

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக் கொள்ளலாம்.

Selection Grade Format for PG/BT

(for  Friends)

முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் தேர்வுநிலை பெறுவதற்கான படிவம்.  
(பட்டதாரி ஆசிரியர் உட்பட பிற ஆசிரியர்களும் இப்படிவத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்து பயன்படுத்தலாம்.)
(in Vanavil Avvaiyar Font)




வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தரும் 1GB இலவச 4G

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4G இணைய வசதியை வழங்கி வருகிறது. இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் 4G மொபைல் & 4G sim வைத்திருக்க வேண்டும்.

ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால், 1 GB இலவச 4G டேட்டாவை அந்த நிறுவனம் இலவசமாக தருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன்.

இன்று ( 01.06.2016) முதல் சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு - செல்போன் கட்டணம் உயர்கிறது

இன்று ( 01.06.2016)  முதல் சேவை வரி 0.5 சதவீதம் உயர்வதை அடுத்து, செல்போன் உள்ளிட்டவற்றின் கட்டணம் அதிகரிக்க உள்ளது.

சேவை வரி தற்போது 14.5 சதவீதமாக ஆக உள்ளது. இது ஜூன் 1ம் தேதி முதல் 0.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 15 சதவீதமாக உயர்கிறது.

கிரிஷி கல்யாண் என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் கட்டணம், வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த வரி உயர்வால், செல்போன் கட்டணம், ஓட்டல்களில் தங்குவதற்கான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், சிணிமா திரையரங்க கட்டணம், வங்கி பரிவர்த்தனை கட்டணம் மற்றும் விமான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரிக்க உள்ளது. 

 

Saturday, May 28, 2016

தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு



 
தமிழகத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வி துறை, திட்டமிட்டபடி ஜூன் 1ல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது

Tuesday, May 24, 2016

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : இணையதளங்கள் விவரம் ( SSLC (10th) Results Will Be Announced on 25th May 2016)



10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணிக்கு வெளியிடப் படுகின்றன. 
இந்த முடிவுகளை, 
ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். 
மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை  பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

ஜூன் 1-ந் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து 

ன்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Marksheet) தாங்களாகவே  டவுன்லோடு செய்து கொள்ளலாம். அத்துடன், அன்றைய தினமே மாணவர்கள் பயின்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Verdict 2016: Spl Song Dedication to TN Leaders | Tamil The Hindu

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்: தமிழகத்தில் இந்த ஆண்டு +2 மதிப்பெண் அடிப்படையில் MBBS,BDS மாணவர் சேர்க்கை


மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET) மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதனை தமிழகம் உட்பட 15 மாநிலங்கள் எதிர்த்தன. இதனையடுத்து எழுந்த பல்வேறு அதிருப்தி காரணமாக, மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஒராண்டு தள்ளி வைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் குறித்து ஒப்புதலுக்கு வந்த போது சில விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டார். நேற்று மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேரில் சென்று விளக்கமளித்தார். 

அதன் பின், மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அதற்கான மசோதாவில் அவர் இன்று கையெழுத்திட்டார்.  

இதனையடுத்து, தமிழக அரசு வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வை நடத்த உள்ளது.

ஆனால், மத்திய அரசுக்  கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக NEET  தேர்வினை எழுத வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பிளஸ்2 சிறப்புத் துணைத் தேர்வு( +2 Supplementary Exam- June 2016 ): அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு



ஜூன்/ஜூலை 2016ல் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2016 தேர்வில் தோல்வியுற்றவர்கள்/வருகைப்புரியாதவர்களுக்காக வருகிற 22.06.2016 அன்று தொடங்கி 04.07.2016 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2016, மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 24.05.2016 (செவ்வாய்கிழமை) முதல் 27.05.2016 (வெள்ளிக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் Browsing centre-கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
 
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

எச்வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்:

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக்கொள்ளலாம்.

Monday, May 23, 2016

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா

  1. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி
  2. அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.
  3.   தாலிக்கு ஒரு பவுன் (8கிராம்) தங்கம்.
  4. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிப்பு, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டாக அதிகரிப்பு.
  5. தமிழகத்தில் மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் சில்லறை கடைகள் மூடப்படும், சில்லறை மதுபான விற்பனை கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

Saturday, May 21, 2016

+2 மாற்றுச் சான்றிதழ்(TC) , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Marksheet) - பள்ளிகளில் இன்று முதல் விநியோகம்

+2 மாற்றுச் சான்றிதழ்(TC) , தற்காலிக மதிப்பெண்  சான்றிதழ்(Provisional Marksheet)களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.