Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Thursday, August 6, 2015
இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை
மையங்களிலும், ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம்
தமிழகம் முழுவதும் 333 இடங்களில் பொது இ-சேவை மையங்களை அமைத்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் ஒன்றும், 264 தாலுகா அலுவலகங்களிலும், சென்னை
மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு மையமும் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள்,
50 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு பொது இ-சேவை மையமும், மதுரை மற்றும் சென்னை
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் தலா ஒரு மையமும் என மொத்தம் 333 மையங்களை
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அமைத்துள்ளது.
ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைத்தவர்கள் பொது இ-சேவை மையத்தில்
ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.
ஆதார் அட்டை பெறுவதற்கு கண்விழி-கைரேகை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது
இ-சேவை மையத்துக்கு சென்று ரூ.40 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.
Tuesday, August 4, 2015
இன்ஜி. கவுன்சிலிங் 1.07 லட்சம் இடங்கள் நிரம்பின
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 536 இன்ஜி. கல்லூரிகளில் பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கு கடந்த ஒரு மாதமாக நடந்த கவுன்சிலிங் நேற்று நிறைவடைந்தது. இதில் 1,07,969 இடங்கள் நிரம்பியுள்ளன. 94,453 இடங்கள் காலியாக உள்ளன.
Monday, August 3, 2015
Wednesday, July 29, 2015
மக்கள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் -இறுதி யாத்திரையை நோக்கி...
மறைந்த முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது.
முழு அரசு மரியாதையுடன் நாளை(30.07.2015) காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம், தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முழு அரசு மரியாதையுடன் நாளை(30.07.2015) காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம், தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
84 வயதான முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 27.07.2015 அன்று காலமானார்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் IIM கல்வி நிறுவன நிகழ்ச்சியில்
பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவரை,
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
கலாம் மறைவுச் செய்தியறிந்து நாடே சோகத்தில்
மூழ்கியுள்ளது.
மறைந்த அப்துல் கலாம் உடல் கவுஹாத்தி விமான
நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
கலாம் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முப்படைத் தளபதிகள், பிரதமர்
நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து
ராணுவ மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு
வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி,
ராகுல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்
தலைவர்களும் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆலோசனைக்கு பிறகு ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் கலாமின் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்து கலாம் உடல்
இன்று(29.07.2015) காலை 8 மணிக்கு தனி விமானம்
மூலம் மதுரை வருகிறது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள பருந்து விமானப்படை தளத்திற்கு கலாம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள பருந்து விமானப்படை தளத்திற்கு கலாம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலாம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் உள்ள
கலாமின் சகோதரர் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள்,
குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். இரவு
முழுவதும் அவரது வீட்டிலேயே உடல் வைக்கப்படுகிறது.
நாளை காலை 11 மணிக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு தொழுகை செய்யப்படுகிறது.
அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
அங்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா, மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் அங்கேயே அவரது உடல்
அடக்கம் செய்யப்படும்.
மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் உடலை
எதிர்பார்த்து ராமேஸ்வரம் தீவு கண்ணீர்க் கடலில் ஆழ்ந்துள்ளது.
அப்துல் கலாம் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுவதால், நாளை வியாழக் கிழமை அன்று (30-07-2015) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அலுவலகங்கள் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னால் குடியரசு முன்னாள் தலைவர்
அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை (ஜூலை 30) கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன.
அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, கடலுக்குச்
செல்வதில்லை என்று ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
Tuesday, July 28, 2015
Dr. A.P.J.Abdul Kalam - The Living History
காலக்கோடு (Time Line of Dr. A.P.J.Abdul Kalam )
- இளைஞர்களின் வழிகாட்டி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 15.10.1931ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
- ராமநாதபுரத்தில் உள்ள Schwartz உயர்நிலைப் பள்ளியில் தமிழைப் பாடமொழியாகக் கொண்டு பயின்றார்.
- 1951ல் திருச்சி St.Joseph கல்லூரியில் B.Sc இயற்பியல் படிப்பை முடித்தார்.
- 1955ல் சென்னை MIT ல் Aerospace Engineering பட்டம் பெற்றார்.
- 1960ல் தலைமை விஞ்ஞானியாக DRDO வில் சேர்ந்தார்.
- 1962ல் ISRO திட்ட இயக்குநராகச் சேர்ந்தார்
- 1982ல் ஐதராபாத்தில் உள்ள DRDL இயக்குநரானார்.
- 1992ல் பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசராக சேர்ந்தார்.
- 1992-1999 வரை DRDO செயலர் ஆனார்.
- 1997ல் நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா'' விருது பெற்றார்.
- 1998ல் பொக்ரான் அணுஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார்.
- 2002ல் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
- 27.07.2015ல் அப்துல்கலாம் மறைந்தார்.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
பொருள் : பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
பெற்ற விருதுகள்
எண்ணற்ற விருதுகளுடன்,
1981ல்
பத்மபூஷன் விருது,
1996ல் பத்மவிபூஷன் விருது
1997ல் பாரத ரத்னா விருதையும் பெற்றார்.
எழுதிய நூல்கள்
இந்தியா 2020 (India 2020)
அக்னிச் சிறகுகள் (Wings of Fire)
கடந்த நிலை - (வெளியிடப்பட்ட நாள்: 25.07.2015)
- ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கக்கூடியவர்
- தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்
- வீணை மீட்டுவதில் வல்லவர்
- சைவ உணவுப் பழக்கம் கொண்ட பிரம்மச்சாரி.
- எஸ்.எல்.வி.3 (SLV 3) ராக்கெட்,
- தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் திரிசூல்,
- தரையிலிருந்து தரையைத் தாக்கும் பிருத்வி,
- நடுத்தர வேக ஆகாஷ்,
- பீரங்கியை எதிர்த்துத் தாக்கும் நாக் ஆகியவை மேம்படுத்தப்பட்டன.
- 1989ல் அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
அப்துல் கலாம் பல்வேறு தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்தினார்.
3000 C வெப்ப நிலையிலும் உருகாத உலோகப் பொருட்களை காம்ப்ரோக் என்னும் மையம்
உருவாக்கியது. இது ஏவுகணைகள் தீப்பிடித்து எரிந்து விடாமல் இருக்க பயன்பட்டது.
DRDO தலைமை இயக்குநராக பதவி வகித்த போது 2வது முறையாக
ராஜஸ்தானில் உள்ள போக்ரானில் அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியது.
அப்துல் கலாம் மந்திரம்
"கனவு காணுங்கள்"
கனவு என்பது
நீங்கள் தூங்கும்போது வருவதல்ல.
உங்களை தூங்க விடாமல் செய்வது.
நீங்கள் தூங்கும்போது வருவதல்ல.
உங்களை தூங்க விடாமல் செய்வது.
Monday, July 27, 2015
Dr. A.P.J.Abdul Kalam -130 கோடி இந்திய இதயங்களின் தலைவன்
நீ
தமிழணங்கின் செல்ல மகன்.
130 கோடி இந்திய இதயங்களின் தலைவன்
உலக இளைஞர்களுக்கு ஞான குரு.
குழந்தைகளின் குழந்தை.
மீண்டும்
இந்நிலத்தில் நீ
பிறந்து வர வேண்டும் என,
உன் பாதங்களை
முத்தமிடும்
பாலைவன மழைத்துளி
நான்.
Friday, July 24, 2015
CONSOLIDATE MARKSHEET PROTOTYPE IN EXCEL
Click Here To download the
Consolidate Marksheet Prototype Excel File.
Conditions
1. Ensure the Marks Between 1 - 200
2. If the Student is Absent then Specify AAA (3 A's) in marks columns
Includes
Total, Result, Rank are Calculated Automatically.
More
More options are updated soon.
(for the requisition of friends.)
மாணவர்களுக்கு AADHAAR - பள்ளிகளில் முகாம் நடத்த கல்வித்துறை ஏற்பாடு
தமிழகம் முழுவதும் அனைத்து வகை அரசுத் திட்டங்களுக்கும் AADHAAR எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கல்வி
உதவித் தொகை மற்றும் இலவசத் திட்ட முறைகேடுகளைத் தடுக்க ஆதார் எண்களை இணைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்புத் திட்ட தொடர்பு அதிகாரியாக
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது உத்தரவின்படி,
மாணவ, மாணவியரின் ஆதார் எண் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்
சேகரித்துள்ளனர்.
இவற்றில் 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு
ஆதார் எண் இல்லை என தெரியவந்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் இல்லை
என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆதார் எண் உருவாக்கும்
வகையில் சிறப்பு முகாம்
நடத்த பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக பெங்களூரிலுள்ள ஆதார் எண் திட்ட உதவி
இயக்குனரகத்துடன், தமிழக
பள்ளிக்கல்வித்துறை இணைந்து, முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Thursday, July 23, 2015
PAY EXTENSION ORDER FOR COMPUTER INSTRUCTOR / VOCATIONAL INSTRUCTOR POST - UPTO 31.12.2015
Click Here To download the
Clear-cut PDF file for
Computer Instructor
Computer Instructor
pay extension order for cs teachers.pdf
Vocational Instructor
Voc_Inst_Pay_Order_page1.jpg
Voc_Inst_Pay_Order_page2.jpg
Click Here To download the
PDF file for Vocational Instructor
Voc_Inst_Pay_Order_page1.jpg
Voc_Inst_Pay_Order_page2.jpg
Monday, July 20, 2015
2015-2016 GENERAL COUNSELING AND TRANSPER SCHEDULE - 29.07.2015 to 18.08.2015
ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணை
Date
|
Day
|
Tentative Schedule
|
29.07.2015
|
Wednesday
|
Govt/Municipal Hr.Sec. School HM Transfer
|
31.07.2015
|
Friday
|
Govt/Municipal Hr.Sec. School HM Promotion
|
03.08.2015
|
Monday
|
Govt /Municipal High
School HM Transfer
|
05.08.2015
|
Wednesday
|
Govt /Municipal High
School HM Promotion
|
07.08.2015
|
Friday
|
Govt/Municipal PG Transfer
|
08.08.2015
|
Saturday
|
Govt/Municipal PG Transfer (Dist to Dist
|
10.08.2015
|
Monday
|
Govt/Municipal PG Promotion
|
11.08.2015
|
Tuesday
|
PET, Special, SGT Transfer (within Dist)
|
12.08.2015
|
Wednesday
|
PET, Special, SGT Transfer (Dist to Dist)
|
17.08.2015
& 18.08.2015
|
Monday
&
Tuesday
|
BT Asst Deployment Counselling
|
B.Ed மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு
கடந்த ஆண்டு வரை B.Ed ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின்
புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல் B.Ed படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இம்மாத இறுதியில் B.Ed மாணவர் சேர்க்கையைத் துவங்க, TNTEU முடிவு செய்துள்ளது.
அதற்காக புதிய விதிமுறைகளை தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு
உள்ளது.
அதன் விபரம்
- B.Ed படிப்பில் சேர ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
- M.Phil - Ph.D., மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்களும் சேர முடியும்.
- இளங்கலை படிப்பில், OC- 50; BC- 45; MBC- 43; SC, SCA- 40 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் மதிப்பெண்களுக்கு ஏற்ப தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். PG- 4; M.Phil-5, Ph.D- 6 என வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
- மேலும் 19 வகையான, ஆப்ஷனல் பாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- B.Ed மாணவர் சேர்க்கை, சென்னை லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடக்கும்.
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி மற்றும்
கவுன்சிலிங் குறித்து, விரைவில்
அறிவிப்பு வெளியாகும்.
TNPSC Group 1 தேர்வு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1 தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என தமிழக Group 1 தேர்வர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, கூட்டமைப்பு
சார்பில் தமிழக முதல்வருக்கு
அனுப்பி உள்ள மனுவில்,
'தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் வழியிலேயே கல்வி
கற்கின்றனர். இவர்கள் Group 1 தேர்வு குறித்து
30 வயது கடந்த பின்னரே
தெரிந்து கொள்கின்றனர்.
ஒன்று அல்லது இரண்டு தோல்விக்கு
பின்னரே தேர்வை எவ்வாறு
எதிர்கொள்வது என தெரிந்து
கொள்கின்றனர். இதற்குள் தேர்வு
எழுதுவதற்கான உச்ச வயது வரம்பை கடந்து விடுவதால், Group 1 தேர்வு குறித்து நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு
ஆளாகின்றனர்.
UPSC தேர்வுகள்,
ஆண்டுக்கு ஒரு முறை
நடத்தப்படுகின்றன.ஆனால் TNPSC Group 1 தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பணி நியமனம் வரை, மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த காலகட்டத்தில்
பல இளைஞர்கள் உச்ச வயது வரம்பை கடந்து விடுகின்றனர். இதில்
கிராமப்புற மாணவர்கள்
பெரிதும்
பாதிக்கப்படுகின்றனர்.
கேரளா, குஜராத், அரியானா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் Group 1க்கான உச்ச வயது வரம்பு
45 வயது என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
09.07.2015 அன்று வெளியான, Group 1தேர்வுக்கான உச்ச வயது வரம்பையும் 45 வயதாக உயர்த்தி தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும்' எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)