Tuesday, March 31, 2015

12 ம் வகுப்பு AGRI தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 12 மதிப்பெண்கள் போனஸ்



 12 ம் வகுப்பு AGRI தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை  உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், இஎம்ஏ, ஜிஎம், வேளாண் செயல்முறைகள் ஆகிய  தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது.


தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.


தோட்டக்கால் பயிர் குறித்து இடம்பெற்ற, 47வது வினா குழப்பமானதாக இருந்ததால், மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். இது குறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.  

வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம், கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட அந்த  வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில்47வது வினா, 3,4 வது 1 மதிப்பெண் வினா ஆகியவற்றுக்கு மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - பள்ளிக்கல்வி இயக்குனர் தேதி அறிவிப்பு



பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

வேலூர்: "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே கடைசி வாரத்திலும் வெளியாகும்என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும்,

  • ஏப்ரல் முதல் வாரத்திலேயே 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படும்.
  • ஜூன் மாதத்தில் , 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, மே கடைசி வாரத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். 

 எனவும், அரக்கோணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Monday, March 30, 2015

வெளிமாநிலத்தில் 10,12ம் வகுப்பு படித்த தமிழக அரசு பணியாளர்களுக்கான 2ம்,3ம் நிலை மொழித் தேர்வு முடிவுகள் TNPSC வெளியீடு

SECOND CLASS LANGUAGE TEST  & 3RD CLASS LANGUAGE TEST - RESULT ANNOUNCED BY TNPSC (EXAM HELD ON 13,16,17,18,19,20 MARCH 2015 )


மார்ச் மாதத்தில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற TNPSC 2ம் நிலை ,3ம் நிலை மொழித் தேர்வு (VIVA VOICE) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன  

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்களின் பெயர்ப் பட்டியலை http://www.tnpsc.gov.in/Resultget-dec2k14.html என்னும் வலைத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முடிவுகளை DOWNLOAD செய்ய கீழே கிளிக் செய்யவும்.

RAMNAD DISTRICT - NOON MEAL COOKING ASSISTANT RECRUITMENT -சத்துணவு மையங்களில் 219 சமையல் உதவியாளர் பணியிடம்

  RAMNAD DISTRICT 

NOON MEAL PROGRAM - COOKING ASSISTANT RECRUITMENT

ராமநாதபுரம்  

சத்துணவு மையங்களில் 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகின்றன. 

பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்ய, பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மண்டபம் - 27, ஆர்.எஸ்.மங்கலம் -18, திருவாடானை - 26, முதுகுளத்தூர் - 15, கமுதி - 22, கடலாடி - 26, பரமக்குடி - 17, போகலூர் - 14, நயினார்கோவில் - 11, திருப்புல்லாணி - 22, ராமநாதபுரம் - 17, ராமநாதபுரம் நகராட்சி - 1, பரமக்குடி நகராட்சி - 3, என மொத்தம் 219 பள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி
  1. ஐந்தாம் வகுப்பு படித்து, எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
  2. ஆதி திராவிடர் 1.1.2015 அன்று 21 வயது நிரம்பியவராகவும், பழங்குடியினர் 18 வயது நிரம்பியவராகவும், இருதரப்பினரும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 
  3. விண்ணப்பதாரர் காலி இடம் உள்ள மையம் அமைந்திருக்கும் ஊரிலோ அல்லது 3 கி.மீ., தொலைவிற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை http://www.ramnad.tn.nic.in/nmp.htm என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பத்துடன் கல்வி, வயது, இருப்பிடச் சான்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஜாதிச்சான்றுகளின் ஜெராக்ஸ் இணைத்து ஏப்., 7க்குள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம். அன்றைய தினமே நேர்காணல் நடத்தப்படும்.  தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களும், ஏப்., 7 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.

விண்ணப்பத்தினை பெற கீழே DOWNLOAD செய்யவும்.

 

Technical Teachers’ Certificate (TTC)  Course in 
Typewriting 2015
தட்டச்சு தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிப்பு  -  தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு.


2015ம் ஆண்டிற்க்கான தட்டச்சு தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தகுதிகள் 

1.  01.03.2015 அன்று 25 வயது நிரம்பி இருக்க வேண்டும் 
2.  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தமிழ் அல்லது ஆங்கில தட்டச்சில் Higher தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தினை tndte.gov.in என்னும் வலைத்தளத்தில்  பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பம் மற்றும்  விவரங்களை கீழே download செய்யவும்.

Monday, March 23, 2015

WORLD WATER DAY 2015 - March 22 - Water and Sustainable Development



இதை படிக்கலேன்னா நீங்க வரும் காலத்தில் ரொம்ப கஷ்டப் படுவீங்க. தண்ணியே இல்லாத ஊர்ல சதுர அடி 1500 ரூபாய்க்கு வாங்குவோமே. அந்த மாதிரி.(So,  Read Must and Be Cool Friends.)

 Humanity Needs Water

 A drop of water is flexible. A drop of water is powerful.

A drop of water is in demand.

தண்ணீர் என்பது உடல்நலன் (Water is Health)

மனிதனின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தண்ணீர். உணவு இல்லாமல் பல வாரங்கள் கூட மனிதனால் உயிர் வாழமுடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது. கைகளை சுத்தமாக கழுவுவதாலேயே நாம் பெரும்பாலான நோய்களை தவிர்த்து விட முடியும். ஒரு கிராம் மனிதக் கழிவில் சுமார் 1 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதனின் உடல் சராசரியாக 50-65% தண்ணீரைக் கொண்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகள் உடலில் 78% தண்ணீர் உள்ளது. மனிதர்களாகிய நாம்  தினந்தோறும் குடிக்கவும் , குளிக்கவும், சமைக்கவும், துவக்கவும் என பல விதங்களில் தண்ணீரைச் சார்ந்தே வாழ்கிறோம்.  உலகில் சுமார் 75 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட  குடிநீர் வசதி இல்லாமலே வாழ்கிறார்கள். சுமார் 250 கோடி மக்களுக்கு சரியான சுகாதார வசதிகள் இல்லை. எனவே வருங்காலத்தில்  தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் சார்ந்த தொழில்துறை வளர்ச்சிபெரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 தண்ணீர் என்பது இயற்கை  (Water is  Nature )

 உலகின் சுற்றுச் சூழல் என்பது  நிலையான, தொடர்ச்சியான நீர் சுழற்சியை மட்டுமே நம்பி உள்ளது.  சுத்திகரிக்கப் படாத தொழிற்சாலை கழிவுகள், விவசாயக் கழிவுகள், இல்லக் கழிவுகள்  என எல்லாவற்றையும் ஆறுகளிலும் , கால்வாய்களிலும், ஏரிகளிலும் கலந்து சுத்தமான நன்னீர் மண்டலங்களை எல்லாம் நாம் பாழ்படுத்தி விட்டோம். 

 இந்தியாவை பொறுத்தவரை, கங்கை நதியை நாம் மிகவும் கீழ்த்தரமாக மாசுபடுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் காவேரி, பாலாறு, வைகை, பவானி என அனைத்து ஆறுகளும் கழிவுநீர் கால்வாய்களாகிவிட்டன. இதனால் இயற்கையின் சமநிலையும் சுற்றுச் சூழலும் வெகுவாக பாதிக்கப் பட்டு எங்கெங்கு காணினும் வறட்சியை மட்டுமே கண்டு வருகிறோம்.

 

 தண்ணீர் என்பது நகர்மயமாதல்   (Water is urbanization )

உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சுமார் 10 இலட்சம் மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். நகரமயமாக்கல் பெரும்பாலும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் சுமார் 93% இருக்கும் என  UN DESA’s Population Division ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் நகர்ப்புறங்களில் சுமார் 40% பகுதிகள் குடிசைப் பகுதிகளை இருக்கும். 2050ம் ஆண்டிற்குள் 250 கோடி மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா , சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில் மிகப் பெரும் நகர்மயமாதல் ஏற்படும் எனவும் UN DESA ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் என்ன ஆகும்?

நகர்புற மேம்பாடுகளை செய்வது என்பது 2050ம் ஆண்டுவாக்கில் பெரும் சவாலானதாக இருக்கும். தற்போதுள்ள நீர் மேலாண்மை கட்டமைப்புகள் அனைத்தும் ஏராளமான தண்ணீரை வீணாக்குகின்றன. கழிவுநீர் அமைப்புகள் எல்லாம் முறையாக இல்லாமலும், காலாவதி ஆகியும் உள்ளன. இதனால் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் பைப்புகளை புதைக்க வேண்டியிருக்கும்.

                                                                                   --  இன்று மாலை நிறைவு பெறும் .

Sunday, March 22, 2015

Physical Director Grade-1 Final Selection List and CV Date Announced.




 உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான இறுதி தேர்வுப் பட்டியல்
 
முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 10.01.2015 அன்று   எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 25.02.2015 அன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

28.03.2015 அன்று முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



தற்போது உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட அனைவருக்கும் individual call letter அனுப்பப் பட்டுள்ளது.  இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 10.04.2015 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தேர்வுப் பட்டியலை பெற கீழே Download செய்யவும் 

1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.03.2015 அன்று பணி நியமன கலந்தாய்வு






 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.03.2015 அன்று  பணி நியமன கலந்தாய்வு

 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28.03.2015 அன்று  பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் அறிவித்துள்ளார்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன.

 கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

652 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான இறுதி தெரிவுப் பட்டியல் வெளியீடு


652 COMPUTER INSTRUCTOR SELECTION LIST BY TRB

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது.  இதில்  கணினி பயிற்றுனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் http://trb.tn.nic.in/ வெளியிட்டுள்ளது.  பணிநியமன ஆணை விவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.  

தேர்வுப் பட்டியலை கீழே Download  செய்யவும். 

Tuesday, March 17, 2015

Software's For U

Software's For U

Alternative for Adobe Reader
1. Foxit Reader (Download Below)  
FoxitReader531.0606_enu_Setup.exe


2. Canon LBP2900/2900B Printer Driver (Download Below)  
 LBP2900_R150_V330_W32_uk_EN_2.exe


3. Samsung Universal Printer Driver (Download Below)
SamsungUniversalPrintDriver.exe 

4. Samsung Scx 3400 Scan Driver(Download Below)
Samsung_SCX-3400_Series_Scan.exe 

Saturday, March 14, 2015

Google Science Fair - 2015 ( Google அறிவியல் கண்காட்சி 2015)


 Google Science Fair 2015

( Read and Scroll Down for Details)

  It's your turn to change the world

Google நிறுவனம் 2011 முதல்   ஆண்டுதோறும்  Science Fair  திருவிழாவை நடத்துகிறது

13 வயது முதல் 18 வயதிற்குள் உள்ள மாணவர்கள் ஒரு குழுவாகவோ, அல்லது பெற்றோர் வழிகாட்டுதலில் தனியாகவோ பங்கேற்கலாம்.

உலகின் எந்த நாட்டிலுள்ள மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.

எந்த எந்த தலைப்புகளில் ஆய்வு செய்யலாம் என்பதை, உங்கள் ஆர்வத்தை பொறுத்து தேர்வு செய்துகொள்ளலாம். இதற்கு Google Science Fair  வழிகாட்டும்.

நீங்கள் தேர்வு செய்த தலைப்பில், ஆய்வுகள் செய்யவும், அந்த குறிப்பிட்ட பொருளில் உங்களுக்கு முழு அறிவை வழங்கவும் பேட்டிகள், வீடியோக்கள், புத்தகங்கள் அனைத்தும் Online ல் பெறலாம்.

  • முதலில் Register  செய்யவேண்டும்.
  •  தலைப்பை (Select a Topic)தேர்வு செய்யவேண்டும்.
  • கருதுகோள் (Make Hypothesis) தீர்மானிக்க வேண்டும் 
  • பின்னர் ஆய்வுகள் மேற்கொள்ள (Do Experiments or Make Models)வேண்டும். அல்லது மாதிரிகள் வடிவமைக்க வேண்டும்.
  • முடிவுகள் (Discover New Results or Invent New Product) பெறப்பட வேண்டும். அவை புதிய கண்டுபிடிப்பாகவோ, ஆலோசனையாகவோ இருக்கலாம் 
  •  உங்கள் படைப்பை (Last Date for Submission) அனுப்ப கடைசி தேதி  19.05.2015
  •  $100,000 அளவிற்கான பரிசுகள் வழங்கப்படும்.                                             

    Submission Deadline               : May 19, 2015
    Regional Finalists Announced: July 02, 2015
    Global Finalists Announced    : August 04, 2015
    Site


    Channel
    https://www.youtube.com/user/GoogleScienceFair 



    Videos
    https://www.youtube.com/user/GoogleScienceFair/videos 

     idea spring board

     
    Google Science Fair 2015 is a global online competition open to individuals or teams from 13 to 18 years old.

    What will you try?
 

Tujh Mein Rab Dikhta Hai - Rab Ne Bana Di Jodi (1080p HD Song)

உங்களுக்கு புரியுதோ இல்லையோ, ஆனா ஒரு தடவை இந்த Song ஐ அமைதியான சூழலில் கேட்டு பாருங்களேன்.
Song: Tujh Mein Rab Dikhta Hai (Blu-ray - Male)
Movie: Rab Ne Bana Di Jodi (2008) 
Singer: Roopkumar Rathod

Friday, March 13, 2015

தேவையான பக்கங்களை மட்டும் கொண்ட pdf கோப்புகளை உருவாக்குவது எப்படி? How to make a PDF file with selected pages.


How to make a  PDF file with selected pages


1. கீழே உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.

2.இந்த மென்பொருளை கணினியில் நிறுவவும்.

3. Printer and Faxes தேர்வை click  செய்து உங்கள் Printer Folder ல் PrimoPDF என உள்ளதா என்பதை உறுதி படுத்தவும். ( See Below)


4. தேவையான பக்கங்களை மட்டும் கொண்ட PDF கோப்பை உருவாக்க  முதலில் நீங்கள் தேர்வு செய்துள்ள PDF  கோப்பை Adobe Reader, Foxit Reader போன்ற ஏதேனும் ஒன்றில் திறந்து கொள்ளவும். (உதாரணமாக இந்த கோப்பில் 100 பக்கங்கள் இருப்பதாக கொள்வோம்)

5. தற்போது  உங்களுடைய PDF கோப்பு திறந்திருக்கும் நிலையில் , 

  • File -->Print  அல்லது Ctrl +P  கிளிக் செய்யவும். Print Dialogbox  தோன்றும். இதில்  Printer --> Name  என்னும் பகுதியில் PrimoPDF என்பதை தேர்வு செய்யவும்.
  • Print Range --> Pages  என்னும் பகுதியில்  உங்களுக்கு வேண்டிய பக்கங்களை மட்டும் கொடுத்து OK பட்டனை கிளிக் செய்யவும்.  உதாரணமாக, 1,4,6,15-20,31,50 etc (See Below for Example)


6. OK கொடுத்தவுடன் PrimoPDF உரையாடல் பெட்டி தோன்றும். இதில் கீழ்ப்பகுதியில் உள்ள Create  PDF பட்டனை கிளிக் செய்யவும்.


7. இப்போது தோன்றும்  Save As உரையாடல் பெட்டியில் உங்களுடைய கோப்பிற்கு புதிய பெயரை தட்டச்சு செய்து Save பட்டனை கிளிக் செய்யவும்.

8. பக்கங்கள் குறைக்கப்பட்ட உங்களுடைய புதிய PDF கோப்பு Adobe Reader  அல்லது Foxit Reader ல் திறக்கப்படும்.

Invigilator Handbook for SSLC Exam -March 2015

Click Below to Download the

Invigilator Handbook for 
SSLC Examination March 2015


Wednesday, March 11, 2015

மனிதர்கள் 500 ஆண்டுகள் உயிர் வாழ முடியும். Google says humans could live for 500 YEARS


மனிதர்கள் 500 ஆண்டுகள் உயிர் வாழ  முடியும் 

Google says humans could live for 500 YEARS - and is investing in firms hoping to extend our lives five-fold

மனிதர்கள் வாழ்நாளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என google  நிறுவனம் தெரிவித்துள்ளது. google  நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவு தலைவர் திரு பில் மாரிஸ் அவர்கள் பகிரும் தகவல்,

  "விஞ்ஞானிகள் உதவியோடு  இன்னும் 20 வருடங்களில் கீமோதெரபி மூலம் புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.  மருத்துவ துறையின் நவீன வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும்  BioMechanics  மூலமாக இது சாத்தியமாகும்."  என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மரபணுவியல் துறையில் ஏற்கனவே இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன எனவும், அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 google  நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குனர் திரு Ray Kurzweil அவர்கள் , "2045ம்  ஆண்டிற்குள் இயந்திர மனிதனில் மனித மூளையை பொருத்த முடியும் " என தெரிவித்துள்ளார்.

  ஆனால், புகழ் பெற்ற நரம்பு உயிரியல் பேராசிரியர் திரு Sir Colin Blakemore அவர்கள் , "மனிதனின் அதிகபட்ச வாழ்நாள்  120 ஆண்டுகள் மட்டுமே " என தெரிவித்துள்ளார்.

our sincere thanks to