Sunday, March 22, 2015

1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.03.2015 அன்று பணி நியமன கலந்தாய்வு






 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.03.2015 அன்று  பணி நியமன கலந்தாய்வு

 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28.03.2015 அன்று  பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் அறிவித்துள்ளார்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன.

 கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.