Friday, June 12, 2015

World Day Against Child Labour 12 June

NO To Child Labour-YES To Quality Education 
(2015 Theme) 

The International Labour Organization (ILO) launched the World Day Against Child Labour in 2002 to focus attention on the global extent of child labour and the action and efforts needed to eliminate it.



Each year on 12 June, the World Day brings together governments, employers and workers organizations, civil society, as well as millions of people from around the world to highlight the plight of child labourers and what can be done to help them.


Around the world, large numbers of children are engaged in paid or unpaid domestic work in the home of a third party or employer. These children can be particularly vulnerable to exploitation.


Their work is often hidden from the public eye, they may be isolated, and they may be working far away from their family home. Stories of the abuse of children in domestic work are all too common.


World Day 2015 calls for:
  • free, compulsory and quality education for all children at least to the minimum age for admission to employment and action to reach those presently in child labour.
  • new efforts to ensure that national policies on child labour and education are consistent and effective;
  • policies that ensure access to quality education and investment in the teaching profession.

வறுமையில், அப்பாவோ , அம்மாவோ  இல்லாதவங்க, அப்பா சரியில்லாதவங்க, படிக்காத அப்பா,அம்மா இருக்குற பரம ஏழைக்குழந்தைங்க, சரியான வழிகாட்டுதல் இல்லாம, சமூகத்துல எப்படி போராடி ஜெயிக்கணும்'னு வகை தெரியாம.இருக்குற பெற்றோருக்கு பிறந்தவங்க, குடும்பமே வேலை செஞ்சாலும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே கூலி வாங்குற அடிமைத் தொழிலாளிங்களோட பசங்க   இப்படி எல்லாம் இருக்குற சின்னப் பசங்க வேலைக்கு போகாம என்ன பண்ணுவாங்க.

மக்கள்'னா  பெரிய பணக்காரன், பணக்காரன், நடுத்தரம், ஏழை, பரம ஏழை, கொத்தடிமைகள்'னு எல்லோரும் தான் நாட்டுல இருக்காங்கன்னு புரிஞ்சு, ஓட்டு வாங்கி ஆட்சி அமைக்குறவங்கதான், இப்படி சின்ன வயசுலேயே பசங்க படிக்காம, கொத்தடிமை வேலைக்கு போகுறதை  தடுக்கணும். தனி நபர்களும், சேவை அமைப்புகளும் எவ்வளவு பேரை காப்பாத்த முடியும்?

இவங்க வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை என்னன்னு கண்டறிஞ்சு, அவங்க பெற்றோரோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவி செஞ்சா அவங்களே படிக்கப் போவாங்க. அரசாங்கங்கள் இதைப் பத்தி கவலைப் படுமா?

அடுத்த வருஷம் இதே ஜூன் 12ல், குழந்தை தொழிலாளர்கள் எவ்வளவு பேர் குறைஞ்சு இருக்காங்கன்னு UN புள்ளி விவரம் தரும்போது தெரியும்.


ff

Thursday, June 11, 2015

மருத்துவ படிப்புகளுக்கான ‘ரேண்டம் எண்’ வெளியீடு

சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, ’ரேண்டம் எண்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. 

அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ’ரேண்டம் எண்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பலர் ஒரே மாதிரியான, ’கட் - ஆப்’, பிறந்த தேதி, பாடவாரியாக மதிப்பெண் என, எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. 

அப்படியான சூழலில், அவர்களில், யாரை முன்னிலைப்படுத்துவது என்பதற்கான, ’ரேண்டம்’ எண், இன்று வெளியிடப்பட்டது. பிளஸ் 2 மறு கூட்டலுக்கான முடிவுகள் குறித்த, ’சிடி’ இன்று, பள்ளிக் கல்வித் துறை தர உள்ளது. இதைத் தொடர்ந்து, 14ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிடவும், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வை நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

‘ரேண்டம் எண்’ அறிந்துகொள்ள: http://www.tnhealth.org/

VANAVIL AVVAIYAR SOFTWARE FOR WINDOWS XP

 Click the link Below to download Vanavil .msi for Windows XP


https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dbWtoMGRScnJUcEU/view?usp=sharing



Click the link below to download  Vanavil .msi, Font, Settings- Installation Guide


https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dS3hyaVNiOUZ5R2s/view?usp=sharing  




உங்கள் கணினியில்  Office 2007, Office 2010 இல்லை என்றாலும்  .docx , .xlsx பைல்களை பார்வையிட முடியும்.

For Word Files Download it and install.  ( TMViewerSetup.exe , Freeware, 5.2 MB only)

https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dSE1rYkl5ZzJVZ0E/view?usp=sharing

For Excel files Download it and install   (  PMViewerSetup.exe ,  Freeware , 4.20 MB only)

https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dakQyTFRDT01NTVE/view?usp=sharing

Wednesday, June 10, 2015

Kendriya Vidyalaya Sangathan Announces Direct Recruitment for Teaching and Non-Teaching posts

Kendriya Vidyalaya Sangathan
केÛġȣय ͪवɮयालय संगठन

Filling up the Officers Cadre, Teaching, Non Teaching  Post for the Year's  2014-15  AND 2015-16.

Adv.No: 10


Candidates are required to apply online through the KVS website www.kvsangathan.nic.in    or  https://jobapply.in/kvs/    at the link available on this site. No other means/mode of submission of applications will be accepted. The schedule of ONLINE registration is as follows



Commencement of Online Registration on KVS website  www.kvsangathan.nic.in  or  https://jobapply.in/kvs/
23.5.2015
Last Date for Online Registration
22.6.2015 


for more details, click                       http://jobapply.in/KVS2015/

for Advertisement Notice, Click    Adv-Eng.pdf


நர்ஸ் தகுதித் தேர்வு - 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

 

 அரசு மருத்துவமனைகளில்  தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள 451 ஆண் நர்ஸ்கள் உட்பட  7243 நர்ஸ்கள் பணியிடங்களுக்கு  40 ஆயிரம் பேர்  ’ஆன் லைன்’ மூலம் விண்ணப்பித் துள்ளனர்.  இதற்கான மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு ஜூன் 28ம் தேதி நடக்க உள்ளது.


இதற்கான பணிகளில்  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக  நர்ஸ் பணிக்கு  அரசு தகுதித் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Tuesday, June 9, 2015

ஜூலை 1 முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்


தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகன ஓட்டிகள், ஜூலை 1 முதல், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உட்பட ஆவணங்களை முடக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. புதிதாக, ஹெல்மெட் வாங்கி, ரசீதுடன் தாக்கல் செய்தால் தான், ஆவணங்களை திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஹெல்மெட் அணியாததால், விலை மதிக்க முடியாத, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஹெல்மெட் அணிய வேண்டும் என, சட்டம் மற்றும் தீர்ப்புகள் இருந்தும், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. சாலைகளில் பார்க்கும் போது, ஹெல்மெட் அணியாமல், வாகனங்களில் செல்வதை பார்க்க முடிகிறது.கடந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில், 6,419 பேர், ஹெல்மெட் அணியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். தினசரி என கணக்கிட்டால்,17 பேர் இறக்கின்றனர்.


  1. 'ஜூலை, 1ம் தேதி முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும்; இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட, வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, வரும், 18ம் தேதிக்கு முன், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  2. இந்திய தர நிறுவனம் சான்றளித்த ஹெல்மெட்டை ரசீதுடன் தாக்கல் செய்தால், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பித் தரப்படும்.

  3. இந்த உத்தரவை, தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வில்லை என்றால், வரும், 19ம் தேதி, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

  4. ஹெல்மெட் அணிந்து செல்கின்றனரா என்பதை கண்காணிக்க, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, உள்துறை மற்றும், டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

  5. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து, விசாரணைக்குப் பின், உரிமத்தை ரத்து செய்யலாம்.

  6. பக்கவாட்டில் பார்க்கும் வகையில், ஹெல்மெட் வடிவமைப்பது குறித்து, மத்திய அரசு கவனிக்க வேண்டும்.

  7. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, எவ்வளவு வழக்குகள் தாக்கல் ஆகிஉள்ளன என்ற விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

  8. ஹெல்மெட் கண்டிப்பாக அணிவதை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

  9. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை விளக்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை, மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

How to Avoid Road Accident while Driving

கனவுகளை நொடிப்பொழுதில்  தகர்க்கும்  
 சாலை விபத்துகளை தவிப்பது எப்படி? 
(How to Avoid Road Accident) 
Re-published

நேரம் நள்ளிரவை  நெருங்கிய பிறகும்   அன்பிற்குரிய கணவரோ, அப்பாவோ, அண்ணனோ , தம்பியோ  வீடு திரும்பாத போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் number you have called is not reachable என்று வந்தால் மனசு எப்படி பதறி துடிக்கும்?

 பள்ளிக்கு சென்ற அக்கா, தங்கை, தம்பி வீடு திரும்ப நேரம் ஆனாலும், வெளியூருக்கு சென்ற அப்பா, அம்மாவை  தொடர்பு கொள்ள இயலாதபோதும், வேலைக்கு சென்ற மகன் அல்லது மகள் உரிய நேரத்தில் திரும்பி வராத போதும் ஒருவரது மனம் எவ்வளவு பாடுபடும்?

பதற்றமும், பயமுமாய் நாம்  அவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்றுக்  கொண்டே இருப்போம்.  ஏன்?

Accident  என்னும்  வார்த்தையின் தாக்கத்தை நாம் தினந்தோறும்  செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள் மூலமாகவும், சில நேரங்களில் நேரில் பார்த்தும் அனுபவித்து இருக்கிறோம்.
  • பாதுகாப்பில்லாத  சாலை போக்குவரத்தின் கசப்பான உண்மைகள் என்ன? 
  • விபத்துக்கான காரணிகள் யாவை?
  • பாதுகாப்பான பயணத்திற்கு நம் எதை செய்ய வேண்டும் ?
  • எதை செய்யக் கூடாது?
பார்ப்போம் வாருங்கள்.

2014ம்  ஆண்டில்  தமிழ்நாட்டில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 17,000 பேர்  இறந்துள்ளனர். 

இருசக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்கள்  :   4500 பேர் 
கார் , தனியார் பஸ்களால் இறந்தவர்கள்               :   3700 பேர் 
லாரி மோதி  இறந்தவர்கள்                                           :   3000 பேர் 
அரசு பஸ் மோதி இறந்தவர்கள்                                  :   1200 பேர் 
பிற வாகனங்கள், ரயில், பிற விபத்துகளில்         :    4600 பேர் 

 விபத்துக்கான காரணிகள் 

  1. வாகனம் ஓட்டுபவர்களின்  கவனக் குறைவு (அ ) கவனச் சிதறல்  40%
  2. அசுர வேகம் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுதல்   30%
  3. செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுதல்  20%
  4. குறுகலான சாலை 
  5. மழையால் ஓரங்கள் அரிக்கப்பட்டு பள்ளமான சாலைகள் 
  6. ஆபத்தான வளைவுகள் 
  7. வேகத்தடையை  கவனிக்காமல் செல்வது 
  8. சாலையோர ஆக்ரமிப்புகள் 
  9. கண்ட இடங்களில் வண்டிகளை Park செய்து  Blind Spot களை  உருவாக்குதல்
  10. சாலையின் குறுக்கே மாடுகள், நாய்கள் வருவது
  11. ஹெல்மெட் அணியாமல் ஒட்டுவது 
  12. சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுதல்
  13. பராமரிப்பில்லாத வாகனங்களை ஓட்டுதல் 
  14. ஓய்வில்லாத நீண்ட தூரப் பயணம் 
  15. சாலை விதிகளை மதிக்காமல் நடப்பது.
 விபத்தை தவிர்க்க  செய்யவேண்டியவை  (Do's)


  1. வாகனத்தை  எடுக்கும் போது  ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா? பிரேக் சரியாக இருக்கிறதா? டயர் சரியாக உள்ளதா? லைட் சரியாக எரிகிறதா என்பதை கவனியுங்கள்.
  2. சாலை விபத்துக்களில் ஆண்கள் தான்  சிக்குகிறார்கள். அல்லது  ஆண்களால் தான்  விபத்துக்கள் ஏற்படுகின்றன. உங்களை  ஒருவர் முந்திச் செல்வது  உங்களை Tease செய்வது போல் இருக்கிறதா?  ஆனாலும் நீங்கள்  ஆக்சிலரேட்டரை வேகமாக அழுத்த வேண்டாம். நான் தான் முன் செல்ல வேண்டும் என்ற வேக உணர்வை அப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்.                            
  3. நீங்கள் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது உங்கள் முன்னே இருக்கும் சாலையை Scan செய்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு முன்னாலும், பக்கவாட்டிலும், உங்களுக்கு பின்னாலும். Blind Spot எனப்படும் சாலையின் மறைக்கப் பட்ட பகுதிகளில் அதிக கவனத்துடன் இருங்கள் .
  4. சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது நீங்கள் வேகத்தை குறைக்க வேண்டியிருப்பின் உடனடியாக Flashers அல்லது Signal Indicatorகளை  ON  செய்யுங்கள். 
  5. மழையில் வாகனம் ஓட்டுகிறீர்களா? அப்படியெனில் வாகனங்களில் இருந்து கசியும் எண்ணெய் படலத்துடன் மழை நீர் கலந்து வழுக்கும் தன்மையுடைய (Slippery Surface from water & Oil contact) பரப்புகளை உருவாக்கி இருக்கும். எனவே வேகத்தை குறையுங்கள். கவனமாக செல்லுங்கள்.
  6.  வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள். முக்கியமாக Hands Free Set களையும் பயன்படுத்த வேண்டாம். அதிக அளவில் விபத்து ஏற்படுவதற்கு வாகனம் ஓட்டும் நேரத்தில் ஏற்படும் கவனச்சிதறலே முக்கிய காரணம்.கவனச் சிதறல் ஏற்படுத்தும் காரணிகளில் முதல் இடத்தில் செல்போன் உள்ளது.. 
  • வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது (ஹேண்ட்ஸ் ஃப்ரீ போட்டிருந்தாலும்) அல்லது எஸ்.எம்.எஸ். டைப் செய்வது போன்றவை கவனத்தைத் திசைதிருப்புகின்றன.

  •  கவனச்சிதறல் ஏற்படுத்தி விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன்.
  •  எஸ்.எம்.எஸ். வரும்போது அது என்ன என்று அறியும் ஆர்வம் ஐந்து நொடிகளுக்கு, கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளி போதுமானது.
    7. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சரியான முறையில் Lane  
        Change செய்யுங்கள்.

    8. வளைவுகளில் திரும்பும் போதும், வண்டியை சாலையிலேயே நிறுத்த  
        நேரிட்டாலும் Indicatorகளை  பயன்படுத்துங்கள்.

    9. கண்ட இடங்களில் வண்டியை பார்க் செய்ய வேண்டாம். அதே போல நாம் 
        எதிர்பாராத இடங்களிலும் வண்டிகள்  பார்க் செய்யப் பட்டிருக்கும் 
        என்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள்.  சாலையோரம் நிறுத்தப் 
        பட்டிருக்கும் லாரி அல்லது பிற வாகனங்களின் மீது மோதிய
        விபத்துக்களை நாம் பார்த்திருக்கிறோம்.

   10. உடல் நலக் குறைவு இருக்கும்போது வண்டியை ஒட்ட வேண்டாம்.

   11. கோபம் அல்லது  குழப்பத்துடன் வண்டியை ஓட்டுவதை தவிர்க்கவும் .

   12. வண்டியை ஓட்டும் போது பின்னால் இருக்கும் நண்பர்களுடன் 
         பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவதை தவிர்க்கவும்.

   13. தூங்காமல் வண்டியை ஓட்டுவது, நீண்ட  தூரம் தொடர்ச்சியாக 
         வண்டியை ஓட்டுவது  கூடாது.
  
   14. அதிகாலை  2 மணி முதல் 6 மணி  வரையும், மதிய உணவிற்கு பின் 
         மாலை 2 மணி முதல் 4 மணி வரையும்  கவனத்துடன்  வண்டியை 
         ஒட்டவும் .

  செய்யக் கூடாதவை (Dont's)
  1.  குடித்துவிட்டு  வாகனம் ஓட்டவேண்டாம் 
  2.  புகை பிடித்துக் கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் 
  3.  நழுவும் அல்லது கீழே விழும் பொருட்களை வைத்திருக்கவேண்டாம். (பாதுகாப்பாக வைக்கவும் )
  4. முன்னே செல்லும் வாகனத்தை ஒட்டியபடியே (Tailgate) செல்ல வேண்டாம். குறைந்தபட்சம் முன்னே செல்லும் வாகனத்தின் பின்புற டயர்கள் தெரியும் அளவுக்காவது செல்லவும்.
  5. Blind Spot களில் வேகமாக செல்ல வேண்டாம் 
  6. பெரிய Truckகளை  முந்திச் செல்ல அவசரப் படவேண்டாம்.
  7. Signalகளை  கவனிக்காமல் செல்ல வேண்டாம்.
  8. அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டு பயணிக்க வேண்டாம்.
  9. Helmet அணியாமல் செல்லவேண்டாம்.
  10. உங்களுக்கு அறிமுகம் இல்லாத எந்த சாலையிலும் வேகம் வேண்டாம்.
சாலைவிதிகளை மீறி வாகனம் ஒட்டுபவர்களுக்கான சட்டத்தின் தண்டனைகள் 


  •  டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ரூ.500 அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.  
  • வாகனக் காப்பீடு இன்றி வாகனம் ஓட்டினால், ரூ.1000 அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும்.
  • சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டினால், ரூ.500 அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
  • ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.100 அபராதம்.
  •  வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்.
  •  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.2,000 அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
  •  மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தினால், காப்பீடு பலன் எதுவும் கிடைக்காது.
  •  வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால், ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.                                        
                                                                                                                            - Admin

How To Make Correction's in Your AADHAAR ID ?

How To Make Corrections Like Your 
Name, Date of Birth, Address, Phone No of Your AADHAAR ID? How to print your Updated AADHAAR ID?
Re-Published


உங்களோட AADHAAR ID ல் 
  பெயர், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண் 
இப்படி ஏதாவது  திருத்தம் செய்யனுமா?

Online ல திருத்தம் செய்யணும்னா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க 
(For online update click the line below)


Postal மூலமா திருத்தம் செய்யனும்னா கீழே இருக்குற இந்த படிவங்களை டவுன்லோட் பண்ணுங்க. படிங்க. fill பண்ணுங்க. அனுப்புங்க.
(For update through post, download the form and instruction. Read, Fill and Send it.) 



நீங்க successful  ஆ update பண்ணின பிறகு ( either online or postal ) உங்களோட Registered மொபைல் நம்பர்ல உங்களுக்கு  
Acknowledgement வரும். 
(After Successful Updation, You Get The Acknowledgement on your Registered  Mobile Number)


Acknowledgement  வந்த பிறகு நீங்க https://eaadhaar.uidai.gov.in/eaadhaar/ லிங்க் ல போயிட்டு உங்களோட updated  ஆதார் ID ஐ டவுன்லோட் செய்யலாம். Download செய்யப்பட்ட PDF File ஐ Open பண்ண Pincode ஐ  Password Field ல கொடுத்து பிரிண்ட் பண்ணுங்க.
(After Receiving the Acknowledgement, Go to the above link now you get the following screen. give the proper details, get the OTP password to your phone-enter the OTP-download- open the pdf with your pincode. thats all)


 

Monday, June 8, 2015

EMIS சுணக்கம் - பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தர கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ  மாணவியரின் விவரங்களை  பதிவு செய்ய, EMIS ( Educational Management Information System) என்ற மின்னணு மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் 2012ம்  ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டது.

இந்த திட்டத்தில் மாணவர் பெயர், வகுப்பு, பெற்றோர் பெயர், தொழில், இனம், முகவரி, அங்க அடையாளம் மற்றும் ரத்தப்பிரிவு போன்ற பல்வேறு விவரங்களை வலைத்தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி  மாணவர் விவரங்களை  கணினியில் முழுமையாக பதிவேற்ற இயலாமல் மூன்று ஆண்டுகளாக இழுபறி நிலையில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல் நடைமுறைப் படுத்த நினைத்த Smart BusPass வழங்கும் திட்டம் கேள்விக்குறியானது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்த போது, 'கணினி சரியில்லை, பழுது, சர்வர் மக்கர்' என, பள்ளிகளில் பல காரணங்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு தெரியாததால், இந்தப் பணிகள் கிடப்புக்குப் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், ஜூன் 10ம் தேதிக்குள் திட்டமிட்டு இதற்கு உரிய அறிக்கை தருமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு மாவட்ட வாரியாக கட் ஆப்.

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.


அரசு தேர்வுத்துறை நடத்திய இந்தத் தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டுக்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 
முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் மாவட்ட அளவில் தான் நிரப்பப்படும். எனவே, விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அனுமதிக் கப்படுவார்கள். எனவே, கட் ஆப் மதிப்பெண் மாவட்ட அளவில் தான் நிர்ணயிக்கப்படும். இதனால், கட் ஆப் மதிப் பெண் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும். குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள காலியிடங்களின் எண் ணிக்கை, அந்த மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப கட் ஆப் மதிப்பெண் அமைந்திருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட் ஆப் மதிப்பெண் மாவட்ட அளவில் நிர்ணயிக்கப்படுவதால் ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்த ஒரு விண்ணப்பதாரர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பார். வேறு மாவட்டத்தில் இதே மதிப்பெண் பெற்ற தேர்வருக்கு நேர்காணல் வாய்ப்பு வராமல் போகலாம் என்பது குறிப் பிடத்தக்கது.  மேலும்  "ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு கீ ஆன்சர் எதுவும் வெளியிடப்படாது” எனவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்யும் பள்ளிக் கல்வித் துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 5, 2015

World Environment Day 2015

Seven Billion Dreams
One Planet.
Consume with Care.













அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் துவங்க திட்டம்




மாணவர் எண்ணிக்கை குறைந்த அரசு தொடக்கப் பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளைத் துவங்க, தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால், அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதேநேரம், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, பெற்றோரிடம் பிரசாரம் செய்யுமாறு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், ஒரு பள்ளிக்கு குறைந்தது, 30 மாணவர்களாவது இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத, ஓர் ஆசிரியர் மட்டுமே இருக்கும் தொடக்கப் பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. இப்பணியில் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும், 250 பள்ளிகள், ஒற்றை இலக்க மாணவர்களுடன் இயங்குவது தெரியவந்துள்ளது; இப்பள்ளிகள் மூடப்பட்டு அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளன.


இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அவர்கள், ”தொடக்கப் பள்ளிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை. எப்படியாவது, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் வரை, மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தவும், மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் தொடர்ந்து முயற்சி எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது,” என்றார். 


சென்னை மாநகராட்சியில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகள், சிறுபான்மை மொழி உருது மற்றும் தெலுங்குப் பள்ளிகளில் 100 இடங்களில், எல்.கே.ஜி., யு.கே.ஜி ஆங்கில வகுப்புகள் துவங்கி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இதை பின்பற்றி, மற்ற மாநகராட்சிப் பள்ளிகளிலும், ஆங்கில மழலையர் வகுப்புகள் துவங்க, தொடக்கக் கல்வி இயக்கம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

Monday, June 1, 2015

நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டறிவது எப்படி? ( How to Identify the Original Currency? )


நாம் தினந்தோறும் பலவகைகளில் பயன்படுத்தும், கைக்கு கை மாறும் ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டுக்கள் தானா என கண்டறிவது எப்படி?

ஐந்தோ, பத்தோ.. கள்ள   நோட்டு என கண்டறியப் பட்டால் கிழித்து கூட போட்டு விடலாம்.   ஆனால்  500, 1000 என பெரிய தொகையிலான நோட்டுகள் கள்ள   நோட்டு என கண்டறியப் பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தப் படுவீர்கள்?


ஏதேனும் ஒரு கடையிலிருந்தோ, பஸ் பயணத்திலோ, சினிமா தியேட்டரிலோ  அல்லது தெரிந்தவர்களிடமிருந்தே கூட நீங்கள் பெரும் ரூபாய் நோட்டுக்களை  நீங்கள் வங்கியிலோ அல்லது வேறு எங்கேனும் செலுத்தும் போது "இது கள்ள நோட்டுங்க" என்று  நம்மை பார்க்கும் பார்வை என்னவோ நாமே கள்ள நோட்டுக்களை அச்சடித்து கொண்டுவந்தது போல இருப்பது  ஒரு பக்கம் என்றால், அதற்காக நாம் ஏமாளியான வருத்தம் மறுபக்கம். 


அப்போ இப்படி எல்லாம் நடக்காம கொஞ்சம் உஷாரா இருக்கனும்னா நீங்க என்னங்க பண்ணனும்?

எந்தெந்த ரூபாய் நோட்டுகள்ல என்னென்ன பாதுகாப்பு விஷயங்கள் இருக்குன்னு முதல்ல நீங்க தெரிஞ்சிக்கனும்.  அப்போ இதை படிங்க முதல்ல.


Security Features of 1000 Rs. Currency Note

gfgfgfg 



 1. Watermark

 
1996ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி படம் போடப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகள் வெளிவருகின்றன.   1000 ரூபாய் நோட்டின் இடது பக்கத்திலுள்ள வெள்ளை பகுதியை உற்று நோக்கினால் Watermarkல்  அமைந்த நிழல் போன்ற காந்தி உருவமும், பல கோணங்களில் செல்லும் மெல்லிய கோடுகளும்   தெரியும்.
( The Mahatma Gandhi Series of banknotes contain the Mahatma Gandhi watermark with a light and shade effect and multi-directional lines in the watermark window.)

2. Security Thread

2000ம் வருடத்தில் முதல் முதலாக  1000 ரூபாய்  நோட்டுக்கள் அறிமுகப் படுத்தப்பட்டன.  இதில்  மேலிருந்து கீழ் வரை வெள்ளிக் கம்பி போன்று அமைந்துள்ள Security Thread   பட்டை கொஞ்சம் உட்பொதிந்தும், கொஞ்சம் வெளியே இருக்கும் படியும் அமைந்துள்ளது.

1000 ரூபாய் நோட்டுகளில் காணப்படும் Security Threadல் भारत ( Bharath - In Hindi) என ஹிந்தியிலும், 1000, RBI  ஆகிய எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். Security Thread  கரும்பச்சை நிறத்தில் மின்னும்.

500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளில் காணப்படும் Security Threadல் भारत ( Bharath - In Hindi) என ஹிந்தியிலும், RBI  ஆகிய எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். Security Thread  கரும்பச்சை நிறத்தில் மின்னும்.

10,20,50  ரூபாய் நோட்டுகளில் காணப்படும் Security Threadல் RBI என்னும் வார்த்தையும்.   Security Thread   வெள்ளிக் கம்பி நிறத்திலும்  மின்னும்.

( Rs.1000 notes introduced in October 2000 contain a readable, windowed security thread alternately visible on the obverse with the inscriptions ‘Bharat’ (in Hindi), ‘1000’ and ‘RBI’, but totally embedded on the reverse. The Rs.500 and Rs.100 notes have a security thread with similar visible features and inscription ‘Bharat’ (in Hindi), and ‘RBI’. When held against the light, the security thread on Rs.1000, Rs.500 and Rs.100 can be seen as one continuous line. The Rs.5, Rs.10, Rs.20 and Rs.50 notes contain a readable, fully embedded windowed security thread with the inscription ‘Bharat’ (in Hindi), and ‘RBI’. The security thread appears to the left of the Mahatma's portrait. Notes issued prior to the introduction of the Mahatma Gandhi Series have a plain, non-readable fully embedded security thread.)

3.Latent Image
 (A latent image is an invisible image produced by the exposure to light)

Baahubali ( బాహుబలి ) - The Beginning | Official Trailer | Prabhas, Rana Daggubati, SS...


Presenting the much awaited trailer of Baahubali 
 The Beginning.

Deployment First, General Transfer Next - பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிப்பு



ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்

பொதுமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டு  பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் பணி நிரவல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

பள்ளிகளில் உபரிப்பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில் வேறு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களிலோவெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்என பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.