மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வால் 10 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.
இந்த புதிய அகவிலைப்படி 2016ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. 4.8 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களும், 5.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும்.
இதற்கு முன் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 113 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியிலிருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டு மட்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வால் 10 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.
இந்த புதிய அகவிலைப்படி 2016ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. 4.8 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களும், 5.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும்.
இதற்கு முன் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 113 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியிலிருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டு மட்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment