வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : 7.3.2015-க்குள் புதுப்பிக்கலாம்.
தொழிலாளர்
நலத்துறை அமைச்சரால் 11.7.2014 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து 2011, 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக
பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் 7.3.2015-க்குள் tnvelaivaaippu.gov.in வலைத்தளத்தில் ஆன்-லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ
தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்கள் யாரேனும் இருப்பின் இத்தகவலை தெரிவித்து பயனடையச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment