Thursday, December 18, 2014

Your Attention Please...




 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 16.12.2014அன்று  ராணுவ பள்ளியில் தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 132 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அந்நாட்டு அரசு தூக்கு தண்டனைக்கு விதித்திருந்த தடையை நீக்கி உள்ளது

சிட்னியில் லிண்ட் சாக்லேட் கபே பகுதியில் 15.12.2014 அன்று பயங்கரவாதி நுழைந்து, அங்கிருந்தவர்களை பிணைகைதிகளாக பிடித்து வைத்த சம்பவமும் சிந்திக்க வைக்கிறது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம்  கிராமத்தை  சேர்ந்த 6ம் வகுப்பு  பயிலும்  பிஞ்சு குழந்தை அதே  பள்ளியில்  பயிலும்  10ம் வகுப்பு மாணவன்  ஒருவனால்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்பட்டு  கொடூரமான முறையில்  கொல்லப்பட்டுள்ளார் .

இவையெல்லாம்  இந்த 2 நாட்களில்  நாம் படித்த செய்திகள். 

இவை மட்டுமா?

தினந்தோறும்  வழியில் செல்லும்  பெண்களிடம்  நகை பறிப்பு .

வீட்டில்  தனியாக  இருக்கும் பெண்களை பயமுறுத்தி , பாலியல்  பலாத்காரம் செய்து , கொலை செய்து  நகைகள்  கொள்ளை.

ஏ.டி.எம் களில்  கொள்ளை 

60 வயதை கடந்த  கிழவர்கள்  கூட  5 வயது குழந்தைகளை பலாத்காரம் செய்தல்.

மர்மக்  கொலைகள் .

குடிப்பது  பரவலாக்கப் பட்ட சாலைகள்.

கும்பலாக சேர்ந்து  தனியாக  சிக்கும்  பெண்களை பலாத்காரம் செய்தல்.

கருணை இல்லம் ,  அனாதை  இல்லங்களில் தங்கி கல்வி பயிலும்  ஆதரவற்ற  குழந்தைகளை  அங்கு பாதுகாப்பில் இருப்பவர்களே பலாத்காரம் செய்தல்.

ஆசிரியர் பணிக்கு  தவறி  வந்த சிலர்  அவர்களிடம்  பயிலும்  மாணவிகளிடமே  செக்ஸ் தொல்லை.

மாணவர்கள்  ஆசிரியர்களையே  ஆள்  வைத்து அடித்தல்.

மாணவர் விடுதிகளில்  ஓரினச்  சேர்க்கைக்கு  வலியுறுத்தும், கட்டாயப் படுத்தும் , பழக்கப் படுத்தும்  சில  சமூக  விரோத  மாணவ கும்பல்கள். அப்படி இணங்காதவனை செப்டிக் தொட்டியில்  தள்ளி கொலை  செய்த  மாணவர்கள்.

இப்ப சொல்லுங்க நீங்க என்ன நினைக்கிறீங்க?

மேல  சொன்ன  யாரா  இருந்தாலும்  அவங்க எல்லாமே  ஸ்கூல் ல  படிச்சவங்க தான் .

அரசு  சார்பா,   இந்த  சமூகத்தை  சரியான  வழியில்  செலுத்தவும் , நல்ல  குணம்  கொண்ட  மாணவர்களை  உருவாக்கவும் , தப்பான எண்ணங்கள், பழக்கங்கள் இருக்குற  மாணவர்களை  அறிவுரை சொல்லி திருத்தவும், எதிர் காலத்துல  வரக் கூடிய தலைமுறை சோம்பேறியா இல்லாம , ஏமாத்துக்காரனா இல்லாம , கடின உழைப்பாளியா, பொறுப்பானவனா, சமூகத்தோட பாதுகாப்புக்கு தானும் ஒரு அங்கமா இருக்குறவனா உருவாக்குற  கடமை  யாருக்குங்க  இருக்கு?

ஆசிரியர்களுக்கு மட்டும் தாங்க  இருக்கு .

வேற  எந்த  துறைக்கும்  இந்த  பொறுப்பு  இல்லேங்க.  வேணும்னா  இவங்க எல்லாம் தப்பு பண்ணிட்டு  வந்தா  தண்டனை  கொடுக்கத் தான் இருக்கு.

நீங்க  என்ன  சப்ஜெக்ட்  வேணும்னாலும்  எடுங்க . ஆனா  ஒரு  மாணவன் நல்லவனா, பொறுப்பானவனா, சமுதாயத்துக்கு  பயனுள்ளவனா  அவனை மாத்த என்ன  சொல்லிக் கொடுக்க  முடியுமோ  அதையும்  சொல்லிக் கொடுங்க.

ஸ்கூல் ல அவனோட  நிஜமான  ரோல் மாடலா இருங்க. அதுக்கு  முக்கியமானது  நீங்க கோவப்  படக்கூடாது. உங்க  நாவில்  இருந்து கடினமான  வார்த்தைகள்  வரக் கூடாது. நீங்க  ஸ்கூல் ல எந்த  மதம்  ஜாதி சார்பாகவும் இருக்கக் கூடாது . 

மாணவன் நோட் புக் ல  ஜாதி  கட்சி  கொடிங்க  வரஞ்சு இருக்குறதையும், சட்டைக்குள்ள ஜாதி  பனியன் போட்டு  வரதையும், புத்தகப்  பைக்குள்ள  செல்போன் மறைச்சு வச்சிட்டு வரதையும், சின்ன சின்ன கத்திங்க  வச்சிருக்குறதையும், இண்டர்வல் டைம் ல  சிகரெட்  பிடிக்கிறது, ஒயிட்னர் யூஸ் பண்ணி  போதை வரவைக்கிறது, கும்பலா சேர்ந்து பீர் குடிக்கிறது, செல்போன் ல போர்ன் வீடியோஸ் பாக்குறது, டவுன் பஸ்ல கேங் வார் நடத்துறது   இப்படி எத்தனையோ விதமா கெட்டுப் பொய் இருந்தாலும்  அவனை  மனுஷனாகுற பொறுப்பு என்னவோ ஆசிரியர்களுக்கு தான் இருக்கு.

ஆசிரியர்களால்  தான்  சமூகம்  குறைந்த  பட்சம்  மிருக  கூட்டமா  மாறாமலாவது இருக்கும்.

நம்ம சந்ததியும்  நாளை  இந்த சமூகத்துல  தானே  வாழணும் ?









Thought Of the Day

சின்ன சின்ன செலவுகளை 
குறையுங்கள் 
காரணம் ,எவ்வளவு 
பெரிய கப்பலையும் 
சிறிய  ஓட்டை மூழ்கடித்துவிடும்

                                                       -   பெஞ்சமின்  பிராங்க்ளின்


GPF ACCOUNT STATEMENT AND MOBILE NUMBER REGISTRATION

 GPF ACCOUNT MOBILE NUMBER REGISTRATION


நீங்க GPF ACCOUNT HOLDER ஆ?  அப்படினா  http://agae.tn.nic.in/ வெப்சைட்  ல  உங்க மொபைல் நம்பர் ஐ GPS SUBSCRIBERS - Please Register your mobile number ன்னு  இருக்குற  இந்த லிங்க் ல போயிட்டு அப்டேட்  பண்ணுங்க.

Wednesday, December 17, 2014

Government Museum Chennai

 Government Museum Chennai

 ஆங்கில கிழக்கிந்திய  கம்பெனியின் மெட்ராஸ் பிரெசிடென்சி கவர்னர்  சர் ஹென்றி பாடிங்கர் என்பவரால் 1846ம்  ஆண்டு உருவாக்கப் பட்டது  சென்னை அரசு  அருங்காட்சியகம்  ஆகும்.

43 ஏக்கர்  பரப்பளவில் பரந்து விரிந்துள்ள  அருங்காட்சியகத்தில்  Archaeology, Anthropology, Art, Numismaticsm Botany, Zoology, Geology, Children's Museum, Chemical Conservation என பல பிரிவுகளில்   காண்பதற்கு  அரிய  பல பொக்கிஷங்கள் உள்ளன.

உங்களால்   சென்னைக்கு சென்று அருங்காட்சியகத்தை பார்வையிட  நேரம் செலவிட   இயலவில்லையா? கவலை விடுங்கள். 

இப்போது  என்ற http://chennaimuseum360.org/ இணையத்தள  முகவரியில்  உங்கள்  வீட்டிலிருந்தே  3D முறையில்  மொத்த  அருங்காட்சியகத்தையும்  கண்டு களிக்கலாம். உங்க  குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த மிஸ் பண்ணாதிங்க.

Sunday, December 14, 2014

Jurassic World - Official Trailer (HD)


ஜூராசிக்  பார்க் வரிசையில் 4ஆவதாக  வெளி வரும் பிரம்மாண்டமான  திரைப்படம் ஜுராசிக் வேர்ல்ட்.  ஜுராசிக் பார்க் 3வது பாகம் 2001ஆம்  ஆண்டு வெளிவந்தது. இப்போது மேலும்  அதிக பொருட்செலவில் 3D science fiction adventure படமாக  2015 ஜுன்  12ல்  வெளிவரவுள்ள  ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கு  இப்போதே ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.  youtubeல் இதுவரை 4 1/2 கோடி  பேர்  இதன்  trailor ஐ  ரசித்துள்ளனர்.


TNPSC Gr. IV Hall Ticket & Group II Rank



21.12.2014 அன்று  நடைபெறவுள்ள  டி.என்.பி.எஸ்.சி குரூப் 4  தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்
  டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப்4 தேர்வு வரும் 21ம் தேதி ஞாயிறு காலை நடைபெற உள்ளது. 4,963 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத 12.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கானஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள், நிராகரிப்பு பட்டியலில் பெயர் உள்ளதா எனசரி பார்க்க வேண்டும். ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் 1800 429 1002 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.



29.06.2014 அன்று  நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ  தேர்வுகளுக்கான மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியல் 
 

Saturday, December 13, 2014

CPS Enrolment Date Extended for Govt Employees



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் CPSல்  இணைய 28.02.2015 வரை கால அவகாசம் - தமிழக அரசு உத்தரவு

 CPS Joining Date Extended G.O. 

Missing Employment Card Renewal? Date Extended for 2011,2012,2013



வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : 7.3.2015-க்குள் புதுப்பிக்கலாம்.

 தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் 11.7.2014 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து 2011, 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை  புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் 7.3.2015-க்குள் tnvelaivaaippu.gov.in வலைத்தளத்தில் ஆன்-லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள்  நண்பர்கள்  யாரேனும்  இருப்பின் இத்தகவலை தெரிவித்து பயனடையச் செய்யுங்கள்.

Wednesday, December 10, 2014

Mangalyaan

India's Mangalyaan among best inventions of 2014:  Time USA

 
 New York: Mangalyaan has been named among the best inventions of 2014 by Time magazine, which described it as a technological feat that will allow India to flex its "interplanetary muscles."

"Nobody gets Mars right on the first try. The US didn't, Russia didn't and the Europeans didn't. But on September 24, India did. That's when the Mangalyaan went into orbit around the Red Planet, a technological feat no other Asian nation has yet achieved," Time said about Mangalyaan, calling it "The Super smart Spacecraft."

Mangalyaan is among the 25 'Best Inventions of 2014' listed by Time magazine that are "making the world better, smarter and in some cases, a little more fun."

Developed by the Indian Space Research Organization, the Mars spacecraft cost India just USD 74 million, less than the budget for the multi-Academy Award winning science fiction thriller film Gravity. Time said at that price, the Mangalyaan is equipped with just five on board instruments that allow it to do simple tasks like measure Martian methane and surface composition.

"More important, however, it allows India to flex its interplanetary muscles, which portends great things for the country's space programme and for science in general," Time said.

Curiosity Rover Report: The Making of Mount Sharp (Dec. 8, 2014)

செவ்வாய் கிரகத்தில்  மிகப் பெரிய  ஏரியும், ஆறுகளும்  இருந்ததற்க்கான தடயங்கள் கண்டுபிடிப்பு . க்யுரியாசிட்டி  விண்கலம் சாதனை




      NASA's Curiosity rover has found new evidence of water on Mars, indicating that the planet most like Earth in the solar system was suitable for microbial life.

        Pictures and other data collected by NASA's Mars rover Curiosity show that rivers once flowed into a lake or lakes at the bottom of Gale Crate, an enormous dimple carved out by an incoming space rock.


 (Pictures show that rivers once flowed into a lake or lakes at the bottom of Gale Crate.  Photo: Screengrab)

        NASA said its interpretation of Curiosity's finds in Gale Crater suggests ancient Mars maintained a climate that could have produced long-lasting lakes at many locations on the Red Planet.

     The American space agency said Mars's Mount Sharp was built by sediments deposited in a large lake bed over tens of millions of years.

          Mount Sharp stands about three miles (5 kilometers) tall, its lower flanks exposing hundreds of rock layers.
    
          Curiosity currently is investigating the lowest sedimentary layers of Mount Sharp, a section of rock 500 feet (150 meters) high dubbed the Murray formation.

 


Enfacement Slip for All Major Head of Accounts

Enfacement Slip for All Major Head DP Code's

எந்த Head of Account ல  பல விதமான Bill's போடணும்னு  குழப்பமா இருக்கா? Download பண்ணுங்க. கவலையை விடுங்க.

Nero Portable CD/DVD Writer Software

Nero Portable CD/DVD Writer Software
 ரொம்ப  கஷ்டப் படாதீங்க . instant CD Write பண்ணுங்க.

Tuesday, December 9, 2014

Middle School to High School Upgradation G.O.

50 நடுநிலைப்  பள்ளிகள்  உயர்நிலைப்  உயர்வு.

Temporary Consolidate Computer Instructor Appointment

இந்த சீட்ல கொஞ்ச நேரம் தான்  உக்காரணும்

பள்ளிக்கல்வித் துறையில் காலியாக  உள்ள 652 கணினி  பயிற்றுனர்  பணியிடங்களை ஆசிரியர் தேர்வு  வாரியத்தின் மூலம் நிரப்பும் வரை, தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்  ரூ.4000/- ஊதிய  அடிப்படையில் கணினி ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham Menon, Harris Jayaraj,...


Saturday, December 6, 2014

The Beautiful Maldives

மாலத்தீவு மக்களுக்கு இந்தியா தண்ணீர் சப்ளை


          இந்தியப் பெருங்கடல் நாடுகளில் ஒன்றான, சென்னையிலிருந்து 1439 கிலோ மீட்டர் தெற்கே உள்ள அழகான தீவுகளின் நாடு மாலத்தீவு ஆகும். 

       சுற்றுலா  விரும்புவோரின் சொர்க்கமாக திகழும் இந்நாடு  சுமார் 1200 தீவுகளை கொண்டுள்ளது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது.
  

              90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. 

              தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத் தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. 


       ஏராளமான  குட்டி தீவுகளைக்  கொண்டுள்ள  மாலத்தீவில்  ஆறுகள்  எதுவும் இல்லை என்பதால் அங்கு குடிநீர் ஆதாரங்கள் இல்லை. கடல் நீரையே சுத்திகரித்து  குடிநீராக  பயன்படுத்துகின்றனர். 

           கடல் நீரை குடி நீராக்கும் தொழிற்சாலையில் நேற்று  தீ விபத்து ஏற்பட்டு கடும் சேதம் அடைந்ததால் , குடிக்க நீர் இன்றி  தலைநகர் மாலேயில்  உள்ள 1 இலட்சம்  மக்கள் தவித்தனர்.

       இந்திய அரசு உடனடியாக போயிங் 17 -III விமானங்கள் மூலமாகவும், ஐ.என்.எஸ் . சுகன்யா போர் கப்பல்கள் மூலமாகவும்  மாலத்தீவுகளுக்கு  குடிநீர் வழங்கி வருவதால்  அம்மக்களின்  குடிநீர் பஞ்சம் தற்காலிகமாக தீர்ந்துள்ளது.


        மாலத்தீவுகளுக்கான  இந்திய ஹை கமிஷனர்  ராஜீவ் சகாரே  மற்றும்  மாலத்தீவின் ராணுவ  அமைச்சர் நஜீம்  இந்தியாவின்  செயலுக்கு நன்றி கூறினர்.

மாலத்தீவு  - ஒரு பார்வை

வரலாறு

                 கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி, கலாசார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.



     மாலைத்தீவுகளின் தொல்பொருள் ஆய்வுபற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள்  ஆணையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.

பொருளாதாரம் 

          மாலத்தீவுகளின் 50% வருமானம்  மீன்பிடி தொழில்  மூலமாக கிடைக்கிறது .  சுற்றுலா துறை மூலம்  20% வருமானமும் , மீதம் குடிசைத்  தொழில்கள்  மூலமும்  கிடைக்கிறது.

எவ்வாறு செல்வது?

         சென்னையிலிருந்து  தினந்தோறும்  விமானங்கள்  இயக்கப் படுகின்றன. 1439 கி.மீ . தொலைவு.  2 மணி நேர விமான பயணம். 06.12.2014 நிலவரப்படி மாலத்தீவு சென்று  வர ஒரு ஆளுக்கு சுமார் 23,000 ருபாய் செலவாகும். 

       மாலியில் எங்கு சொல்ல வேண்டுமானாலும் டாக்ஸி கிடைக்கின்றது. 20 ருபியாவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம் மாலியை ஒருமுறை.

      நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு வாரம் தங்கி சுற்றிப்பார்க்க விமான கட்டணம் உட்பட கிட்டத்தட்ட இந்திய பணத்தில் 1,00,000 செலவாகும். இந்திய பணம் 3.6 ரூபாய்க்கு மாலியின் 1 ருபியா கிடைக்கின்றது.

     மாலத்தீவின் அருகே விமானம்  வர வர சன்னல் ஓரத்து இருக்கையாக  இருந்தால் கீழே பச்சை நிற நீரில் நுரைகள் தள்ளும் நீல நிறத்தீவுகள் ஆங்காங்கே கடலில் மிதக்கும் சொர்க பூமிகள். 


     மேலிருந்து பார்ப்பது ஆனந்தம். அலைகள் குறைவான கடலும் அதில் மிதக்கும் கப்பல்களாய் தீவுகள். 1200 தீவுகளில் 350  தீவுகள் கொஞ்சம் பெரியவை.

        கிட்டத்தட்ட பல தீவுகளில் வெறும் ரெசார்ட்ஸ் மற்றும் நட்சத்திர பிதக்கும் வாட்டர் ஹோட்டல்கள் மட்டும்தான் இருக்கும். அங்கு இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவைச்சேர்ந்த வேலையாட்கள் எல்லா நிலையிலும் இருப்பார்கள். 



     அந்தந்த தீவுகளுக்கு செல்ல வாட்டர் ஜெட் விமானங்களும் (தண்ணீரில் தரை இறங்கும்), சொகுசு கப்பல்களும் செல்லும். அங்கிருக்கும் பணியாளர்களுக்கு வருடம் ஒரு முறை ஒரு மாத விடுமுறையும், நல்ல சம்பளமும் கிடைக்கும். ஆனால் ஒரு வருடம் அந்த தீவுக்குள் மட்டுமே இருக்க முடியும்.



        சிறிய விமான நிலையம். எல்லா செக்கிங்களை முடித்துவிட்டு வெளியே வந்தால் இருபதடி தூரத்தில் கடல். விமான நிலையமே ஒரு குட்டி தீவு என்பதால் அங்கிருந்து மாலி நகருக்கு (இரண்டாவது பெரிய நகரம்- மற்றும் தலைநகரம்) சிறிய  ரக கப்பலில் அனைவரையும் ஏற்றிக்கொள்கிறார்கள். ஒரு பத்து நிமிட பயணத்தில் மாலி.

   பொதுவாக ஒரு பத்து அல்லது பதினைந்து கிலோமீட்டருக்குள் அடங்கிவிடுகிறது மாலி. 

 அழகான கடர்கரை காஸ்ட்லியான போட்டுகள்...வித்தியாசமான வாழ்க்கை சூழல். மிதமான வெப்பம் அவ்வப்போது திடீரென மழை பெய்யும் சூழ்நிலை.


பொதுவாக ஆங்கிலம் எல்லோரும் பேசுவதால் மொழி பிரச்சனை இருக்காது. நிறைய மலையாளி பெண்களை பார்க்கலாம். 

இந்தியா போன்ற மிகப்பெரிய இடங்களில் இருந்து வருபவர்களுக்கு மாலி ஒரு ஒரு மினியேச்சராகத்தான் தெரியும். மிதமான வெப்பம், அதிக மழை, குளிர் அவ்வளவாக இல்லாத நாடு.

அழகழகான வலம்புரி சங்குகள், கடற் பாசிகள், அறிய பல கடல் பொருட்கள் இங்கே குறைவான விலையில். கடல் நீர் சுத்தமாக கீழிருக்கும் நிலம் தெரிவது சூப்பர்.

 
மாலத்தீவின் அழகு



Wednesday, December 3, 2014

Bharathiyar University B.Ed Admission -2015 ( DDE)



பாரதியார் பல்கலையில் தொலைநிலை முறையில் பி.எட். படிப்பு


கோவை பாரதியார் பல்கலையில் தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட். படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-2017 கல்வியாண்டிற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



2 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500/-. இணையத்திலோ அல்லது நேரிலோ பெறலாம்.



நுழைவுத் தேர்வு மற்றும் மாநில அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். கால அளவு 2 ஆண்டுகள். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28, 2005

நுழைவுத்தேர்வு  - மார்ச் 29,2015


மேலும் விவரங்களுக்கு   http://www.b-u.ac.in/advt/advt.pdf 

Monday, December 1, 2014

Asst to Desk Superintendent Panel

15.03.2014 நிலவரப்படி உதவியாளர்  பணியிலிருந்து  கண்காணிப்பாளர் (இருக்கைப் பணி )  பதவி உயர்வுக்கான  திருத்தப்பட்ட  முன்னுரிமைப்  பட்டியல்