Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Friday, February 19, 2016
Thursday, February 18, 2016
பிளாஸ்டிக் கழிவுகள் (Plastic Wastage)
Source : The Hindu
ஒவ்வொரு நாளும் நம்மில் பெரும்பாலானோர் சாதாரணமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்பதை பற்றிய கவலை நமக்கில்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கூட கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் இது.
ஒவ்வொரு நாளும் நம்மில் பெரும்பாலானோர் சாதாரணமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்பதை பற்றிய கவலை நமக்கில்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கூட கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் இது.
பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து கிடக்கிறது
பிளாஸ்டிக் சந்தை. ஆனால் மனித பயன்பாட்டிற்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள்
மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நமக்கென்ன ஆகப்
போகிறது என்று கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு தற்போதே அதிர்ச்சி
காத்திருக்கிறது. ஆம்! கடல் நீரில் உள்ள மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள்
அதிகரித்து வருவதாக ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இதனால் புவியின் ஒட்டுமொத்த
சூழ்நிலை மண்டலமே மாற்றத்திற்கு உள்ளாகும் என எச்சரிக்கப்படுகிறது.
- வருடத்துக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் கடலில் கலக்கின்றன.
- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 7 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள்.
- தற்போது 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்துள்ளன. இது 25 கோடி டன் ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- இன்னும் சில வருடங்களில் கடலில் இருக்கும் மீன்களின் அளவை விட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் தான் பிளாஸ்டிக்கை அதிக அளவு கடலில் கலக்கின்றன.
- பிளாஸ்டிக் கழிவு அதிகம் கலக்கப்படுவதால் கடலில் வாழும் உயிரினங்கள் அதை தின்று விடுகின்றன. இதனால் அந்த உயிரினங்களில் வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது
- தமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வையும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளையும் டிஜிட்டல் தட்டிகளுக்கு பதிலாக சணலினால் ஆன தட்டிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
- கடந்த 50 வருடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது 20 முறை அதிகரித்துள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
- இந்தியாவில் 20 மைக்ரான் எடை மற்றும் 8க்கு 12 அங்குலத்திற்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் தற்போது அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்க பயன்படுத்தி வருகின்றனர்.
- இந்தியா முழுவதும் 60 முக்கியமான நகரங்களில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 3501 டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது.
- சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் டன் குப்பை உருவாகிறது. இதில் 7 சதவீதம் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகள்.
- 2013-14ம் ஆண்டில் நாடு முழுவதும் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.
- பிளாஸ்டிக் பைகளை குப்பைகளுடன் சேர்த்து மண்ணில் புதைப்பதால் நீண்ட காலத்துக்கு மண்ணில் மக்கி போகாமல் இருக்கும். இது மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
- பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் பாலி எத்திலின் என்ற துணை பொருளை கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளைக் தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு எரிபொருள் அதிகமாக காகிதப்பையை உருவாக்கப் பயன்படுகிறது. ஆகையால் இருவிதமான பைகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து முடிந்த வரை துணிப்பைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
- சர்வதேச அளவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
- முதன் முதலில் மனிதனால் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை உருவாகியவர் அலெக்ஸாண்டர் பார்க்ஸ்.
Friday, February 12, 2016
8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு
தனித்தேர்வர்களுக்கு
8ம்வகுப்பு பொதுத்தேர்வு
ஏப்ரலில் நடக்கவுள்ளது.
இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு
எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம்
ரூ.50 ஐ சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது
பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால்
மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Thursday, February 11, 2016
3 லட்சம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' : பணிகள் ஸ்தம்பிப்பு
மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு
நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்
சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். மூன்று லட்சம்
ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள் ஸ்தம்பித்தன. புதிய
ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்;
அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது
உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும்
மற்றும் பல துறை சார்ந்த சங்கங்களும் போராடி வந்தன.
அப்போது, ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அரசு
செயல்படுத்தாததாலும், ஆட்சிக்காலம் முடிய உள்ளதாலும், தற்போது போராட்டங்கள்
தீவிரம் அடைந்துள்ளன. இதற்கு தீர்வு காண, மூத்த அமைச்சர்கள் இடம் பெற்ற,
ஐவர் அணி பேச்சு நடத்தியது. ஆனால், அதற்கு உரிய பலன்
கிடைக்கவில்லை.'அரசாணைகள் தர நீங்கள் முயற்சியுங்கள்; நாங்கள் போராட்டத்தை
துவக்குகிறோம்' எனக்கூறி, அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று
திட்டமிட்டபடி, காலவரையற்ற ஸ்டிரைக் துவங்கியது.
இந்த சங்கத்தில், வருவாய் துறை, வணிக
வரித்துறை, ஊரக வளர்ச்சி என, 68 சங்கங்கள் உள்ளன. வணிக வரித்துறையில், ஒரு
வாரத்திற்கும் மேலாக, ஸ்டிரைக் நீடிப்பதால், ஏற்கனவே பணிகள் முடங்கி, வரி
வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, அரசின் மற்ற துறைகளிலும் பணிகள்
முடங்கின. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்தபோராட்டத்தில், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களும்
பங்கேற்றனர். இதனால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், சத்துணவு
வழங்கும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும்
வெளி ஆட்கள் மூலம், பல இடங்களில் சத்துணவு வழங்கும் பணி நடந்தது. அரசு
ஊழியர்கள், மூன்று லட்சம் பேர் வரை பங்கேற்றதால், அரசுப் பணிகள் முற்றிலும்
முடங்கின.
'அரசாணை கிடைத்தால் ஸ்டிரைக்கை முடிப்போம்' :
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில
செயலர் தமிழ்செல்வி கூறியதாவது: மூத்த அமைச்சர்கள் பேச்சு நடத்திய போது,
'கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்கிறோம்' என்றனர். அமைதியாக, சுமூகமாக
பேசினர். ஆனால், உறுதியான முடிவு கிடைக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி
காலவரையற்ற ஸ்டிரைக் துவக்கி உள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டப்படி, ஓய்வு
பெற்ற, இறந்த, 6,000பேருக்கு இதுவரை, பணப்பயன் கிடைக்கவில்லை. கோரிக்கைகளை
ஏற்று, அரசாணைகள் ஓரிரு நாளில் கிடைக்கும் என,நம்புகிறோம். அரசாணைகள்
கிடைத்தால், ஸ்டிரைக்கை கைவிட தயார்; அரசுப் பணிகளை முடக்க வேண்டும் என்பது
எங்கள் நோக்கம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்தில், அரசு
அலுவலர் ஒன்றியம், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ' உள்ளிட்ட
அமைப்புகள் பங்கேற்கவில்லை. காலவரையற்ற ஸ்டிரைக் நீடித்தால், பணிகள்
முடங்கி, அரசுக்கு பெரும் சிக்கலாக அமையும்.
'நசுக்கப்படுகிறோம்':
தமிழகத்தில், 68 சங்கங்களை உள்ளடக்கிய, அரசு
ஊழியர் சங்கம் ஸ்டிரைக் நடத்தி வருகிறது. ஆனால், பதிவுத்துறை பணியாளர்
சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை. பதிவுத்துறை அனைத்து பணியாளர் சங்க
நிர்வாகிகள் கூறியதாவது: பதிவுத்துறையில், 50 ஆயிரம் பேர் உள்ளனர்.
பதிவுத்துறை சங்கங்கள் ஆரம்பத்தில், போராட்டங்களில் தீவிரம் காட்டி
வந்தது.கோரிக்கை மனு கொடுக்கச் சென்றாலும், போராட்ட, 'நோட்டீஸ்'
தரச்சென்றாலும், துறைத் தலைமை யாரையும் சந்திப்பது இல்லை. சங்க
நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறி வைத்து பழி வாங்கப்படுகின்றனர். எனவே,
கோரிக்கை குறித்து குரல் எழுப்பக்கூட முடியாமல் நசுக்கப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tuesday, February 9, 2016
மருத்துவ படிப்பில் சேர தேசிய அளவில் பொது நுழைவு தேர்வு
தேசிய அளவில்
பொது மருத்துவ நுழைவுத்
தேர்வு நடத்தும்
திட்டத்துக்கு மத்திய
சுகாதாரத்துறை ஒப்புதல்
அளித்துள்ளது.
ஐ.எம்.சி.,
எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ கல்வியை கட்டுப்படுத்தும்
அமைப்பாக செயல்படுகிறது. மருத்துவ கல்லுாரிகளில் சேரதேசிய அளவில் பொது
மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை ஐ.எம்.சி., முன்வைத்துள்ளது.
இத்திட்டத்துக்கு
மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுபற்றி பிற
அமைச்சகங்களின் கருத்துகளை பெறுவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா
சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். விரிவான ஆலோசனைகளுக்கு பின் இவ்விஷயத்தில்
இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொது நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்தால்,
- அனைத்து கல்லுாரிகளிலும் இளநிலை மற்றும்முதுநிலை மருத்துவ பாடப் பிரிவுகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடக்கும்.
- தனியார் கல்லுாரிகளும், பொது நுழைவுத் தேர்வு வளையத்தில் கொண்டு வரப்படும்.
- நாடு முழுவதும் மருத்துவக் கல்லுாரிகளில் 32 ஆயிரம் இளநிலை, 13 ஆயிரம் முதுநிலை மருத்துவப் பட்டங்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடைபெறும்.
- தற்போதைய முறைப்படி மருத்துவப் படிப்பில் சேர ஏழுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.புதிய முறைப்படி ஒரே பொது நுழைவுத் தேர்வை எழுதினால் போதும்.
அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் ஊழியர் சம்பளத்திற்கு செல்கிறதா? அரசு ஊழியர் சங்கம் மறுப்பு
அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் அரசு
ஊழியர்களின் சம்பளத் திற்கு செல்கிறது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
கூறியுள்ள தகவல் தவறானது,'' என, சங்க மாநில பொதுச்செயலாளர்
பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது:20 அம்ச கோரிக்கைளை
வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைமையில் 67 சங்கங்கள்
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பிப். 10 முதல் ஈடுபடுகின்றன. மாநில
முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்களும், 2 லட்சம் தொகுப்பூதியம்
பெறுபவர்களும் பங்கேற்பர்.அரசு ஊழியர் வசூலித்த தானே புயல் நிவாரண நிதியை
கூட முதல்வர், தலைமை செயலாளரை சந்தித்து வழங்க முடியவில்லை. சங்க
பிரதிநிதிகளை சந்திப்பது இல்லை.
அரசின் நிதிவருவாயில் 90 சதவீதம் அரசு
ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடுவதாக அமைச்சர் பன்னீர் செல்வம் தவறான
தகவலை கூறி வருகிறார். அரசின் நிதிவருவாய் 41,215,57 லட்சம் கோடி. இதில்
கல்வி மானியத்திற்கு 40 சதவீத நிதி செலவிடப்படுகிறது. மீதியுள்ள தொகை ரூ.30
ஆயிரம் கோடி. இதில் முதல்வர்,அமைச்சர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற
உயர்அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றனர். 20 ஆயிரம் கோடியில் 8 லட்சம் அரசு
ஊழியர்கள் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. இது அரசின் வருவாயில் 30
சதவீதம், என்றார்.
Monday, February 8, 2016
Friday, January 22, 2016
XII PHYSICS IMPORTANT QUESTIONS FOR MARCH 2016
Click Here to Download the files.
1. Must follow this Question Order for effective learning.
1. Must follow this Question Order for effective learning.
TAMIL NADU STATE ELIGIBILITY TEST (TN SET 2016) Notification
Quick Link: E-Payslip , Annual Income Statement, PayDrawn particulars
Website : http://www.setexam2016.in/
TAMIL NADU STATE ELIGIBILITY TEST (TNSET-2016).
Date of Examination : 21.02.2016(Sunday)
Last Date for Online Application : 10.02.2016
Quick Link: E-Payslip , Annual Income Statement, PayDrawn particulars.
Click Here for Payslip , Annual Income Statement, Pay Drawn particulars
Wednesday, January 20, 2016
TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம்
விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யவும்
Annual Pay Drawn Details
Enter your details :-
Employee code (TPF/CPS number)
Suffix (EDN)
Date of birth(DD/MM/YYYY)
Get your
pay slip
annual salary statement
pay drawn particulars...
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் சிறப்பு கையேடுகள்(Special Guide's For 10th and 12th Students, March/April 2016)
Re-post
10ம் வகுப்பில் அனைத்து பாடங்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி
நிறுவனம்,மார்ச்
2016ல் 10 மற்றும் 12ம்
வகுப்பு பொதுத்தேர்வு
எழுதவுள்ள மாணவர்களுக்காக சிறப்பு கையேடுகளை வெளியிட்டுள்ளது.
10ம் வகுப்பில் அனைத்து பாடங்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
12ம் வகுப்பில் Tamil,
English, Mathematics,Physics,Chemistry,Bio-Botany, Bio-Zoology, Economics,
Commerce,History,Accountancy ஆகிய பாடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
தற்போது வெளியிடப்பட்டுள்ள
இக்கையேடுகளை படித்து
பயிற்சி பெற்றால் மாணவர்கள் எளிதில் தேர்வில் வெற்றி பெறுவதுடன் நல்ல மதிப்பெண்களையும் பெற முடியும்.
சிறப்புக் கையேடுகளைப் பெற
சிறப்புக் கையேடுகளைப் பெற
http://www.chiefeducationalofficer.in/specialguide2015.php
http://www.chiefeducationalofficer.in/specialguide2015.php?standard=10
http://www.chiefeducationalofficer.in/specialguide2015.php?standard=12
http://www.chiefeducationalofficer.in/specialguide2015.php?standard=10
http://www.chiefeducationalofficer.in/specialguide2015.php?standard=12
கணினி அறிவியல் பாடத்திற்கு
208 - அறிவியல் பிரிவில் வரும் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கும், கணினி அறிவியல் பாடத்திற்கும் இக்கையேடுகளை வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் வெளியீடு : திருத்தங்கள் செய்வதற்கு பள்ளிகளுக்கு கடைசி வாய்ப்பு
மார்ச் 2016ல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான, பதிவெண்களுடன் கூடிய பெயர்பட்டியல் பள்ளிகளுக்கு www.tndge.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை 22.01.2016க்குள் பதிவிறக்கம் செய்து, திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் 23.01.2016 அன்று சமர்பிக்க வேண்டும். இதுவே திருத்தங்கள் செய்வதற்கான கடைசி வாய்ப்பு என அறிவிக்கப் பட்டுள்ளது.
Saturday, January 16, 2016
அரசு ITI களில் 329 Junior Training Officer பணி நியமனம் : அரசு வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு
தமிழகத்தில்
உள்ள 32 மாவட்டங்களிலும் அரசு ITI
களில், 329 இளநிலை பயிற்சி அலுவலர் (Junior Training Officer) பணியிடங்கள் தேர்வு
மூலமாக நிரப்பப்பட உள்ளன.
அறிவிப்பு நாள்: 12.01.2016
online மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் : 01.02.2016
மேலும் விவரங்களுக்கு :
Friday, January 15, 2016
TNPSC CCSE Group-II A Services (Exam Date: 24.01.2016 FN) - HALL TICKET DOWNLOAD
24.01.2016 ஞாயிறு அன்று நடைபெறவுள்ள TNPSC CCSE Group-II A(Non-Interview Posts) தேர்வுக்கான, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
Subscribe to:
Posts (Atom)