12 ம் வகுப்பு AGRI தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவு
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ம் தேதி, அரசியல் அறிவியல்,
புள்ளியியல், நர்சிங், இஎம்ஏ, ஜிஎம், வேளாண் செயல்முறைகள் ஆகிய தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது.
தொழிற்கல்வி பாடமான வேளாண்
செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள்,
புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.
தோட்டக்கால் பயிர் குறித்து இடம்பெற்ற,
47வது வினா குழப்பமானதாக இருந்ததால், மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். இது குறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.
வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம், கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட அந்த வினாக்கள் குளறுபடியாக இருப்பது
தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண்
செயல்முறைகள் தேர்வில்,
47வது வினா, 3,4 வது 1 மதிப்பெண் வினா ஆகியவற்றுக்கு மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு,
தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி
தெரிவித்துள்ளனர்.