Sunday, March 22, 2015

Physical Director Grade-1 Final Selection List and CV Date Announced.




 உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான இறுதி தேர்வுப் பட்டியல்
 
முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 10.01.2015 அன்று   எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 25.02.2015 அன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

28.03.2015 அன்று முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



தற்போது உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட அனைவருக்கும் individual call letter அனுப்பப் பட்டுள்ளது.  இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 10.04.2015 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தேர்வுப் பட்டியலை பெற கீழே Download செய்யவும் 

1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.03.2015 அன்று பணி நியமன கலந்தாய்வு






 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.03.2015 அன்று  பணி நியமன கலந்தாய்வு

 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28.03.2015 அன்று  பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் அறிவித்துள்ளார்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன.

 கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

652 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான இறுதி தெரிவுப் பட்டியல் வெளியீடு


652 COMPUTER INSTRUCTOR SELECTION LIST BY TRB

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது.  இதில்  கணினி பயிற்றுனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் http://trb.tn.nic.in/ வெளியிட்டுள்ளது.  பணிநியமன ஆணை விவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.  

தேர்வுப் பட்டியலை கீழே Download  செய்யவும். 

Tuesday, March 17, 2015

Software's For U

Software's For U

Alternative for Adobe Reader
1. Foxit Reader (Download Below)  
FoxitReader531.0606_enu_Setup.exe


2. Canon LBP2900/2900B Printer Driver (Download Below)  
 LBP2900_R150_V330_W32_uk_EN_2.exe


3. Samsung Universal Printer Driver (Download Below)
SamsungUniversalPrintDriver.exe 

4. Samsung Scx 3400 Scan Driver(Download Below)
Samsung_SCX-3400_Series_Scan.exe 

Saturday, March 14, 2015

Google Science Fair - 2015 ( Google அறிவியல் கண்காட்சி 2015)


 Google Science Fair 2015

( Read and Scroll Down for Details)

  It's your turn to change the world

Google நிறுவனம் 2011 முதல்   ஆண்டுதோறும்  Science Fair  திருவிழாவை நடத்துகிறது

13 வயது முதல் 18 வயதிற்குள் உள்ள மாணவர்கள் ஒரு குழுவாகவோ, அல்லது பெற்றோர் வழிகாட்டுதலில் தனியாகவோ பங்கேற்கலாம்.

உலகின் எந்த நாட்டிலுள்ள மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.

எந்த எந்த தலைப்புகளில் ஆய்வு செய்யலாம் என்பதை, உங்கள் ஆர்வத்தை பொறுத்து தேர்வு செய்துகொள்ளலாம். இதற்கு Google Science Fair  வழிகாட்டும்.

நீங்கள் தேர்வு செய்த தலைப்பில், ஆய்வுகள் செய்யவும், அந்த குறிப்பிட்ட பொருளில் உங்களுக்கு முழு அறிவை வழங்கவும் பேட்டிகள், வீடியோக்கள், புத்தகங்கள் அனைத்தும் Online ல் பெறலாம்.

  • முதலில் Register  செய்யவேண்டும்.
  •  தலைப்பை (Select a Topic)தேர்வு செய்யவேண்டும்.
  • கருதுகோள் (Make Hypothesis) தீர்மானிக்க வேண்டும் 
  • பின்னர் ஆய்வுகள் மேற்கொள்ள (Do Experiments or Make Models)வேண்டும். அல்லது மாதிரிகள் வடிவமைக்க வேண்டும்.
  • முடிவுகள் (Discover New Results or Invent New Product) பெறப்பட வேண்டும். அவை புதிய கண்டுபிடிப்பாகவோ, ஆலோசனையாகவோ இருக்கலாம் 
  •  உங்கள் படைப்பை (Last Date for Submission) அனுப்ப கடைசி தேதி  19.05.2015
  •  $100,000 அளவிற்கான பரிசுகள் வழங்கப்படும்.                                             

    Submission Deadline               : May 19, 2015
    Regional Finalists Announced: July 02, 2015
    Global Finalists Announced    : August 04, 2015
    Site


    Channel
    https://www.youtube.com/user/GoogleScienceFair 



    Videos
    https://www.youtube.com/user/GoogleScienceFair/videos 

     idea spring board

     
    Google Science Fair 2015 is a global online competition open to individuals or teams from 13 to 18 years old.

    What will you try?
 

Tujh Mein Rab Dikhta Hai - Rab Ne Bana Di Jodi (1080p HD Song)

உங்களுக்கு புரியுதோ இல்லையோ, ஆனா ஒரு தடவை இந்த Song ஐ அமைதியான சூழலில் கேட்டு பாருங்களேன்.
Song: Tujh Mein Rab Dikhta Hai (Blu-ray - Male)
Movie: Rab Ne Bana Di Jodi (2008) 
Singer: Roopkumar Rathod

Friday, March 13, 2015

தேவையான பக்கங்களை மட்டும் கொண்ட pdf கோப்புகளை உருவாக்குவது எப்படி? How to make a PDF file with selected pages.


How to make a  PDF file with selected pages


1. கீழே உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.

2.இந்த மென்பொருளை கணினியில் நிறுவவும்.

3. Printer and Faxes தேர்வை click  செய்து உங்கள் Printer Folder ல் PrimoPDF என உள்ளதா என்பதை உறுதி படுத்தவும். ( See Below)


4. தேவையான பக்கங்களை மட்டும் கொண்ட PDF கோப்பை உருவாக்க  முதலில் நீங்கள் தேர்வு செய்துள்ள PDF  கோப்பை Adobe Reader, Foxit Reader போன்ற ஏதேனும் ஒன்றில் திறந்து கொள்ளவும். (உதாரணமாக இந்த கோப்பில் 100 பக்கங்கள் இருப்பதாக கொள்வோம்)

5. தற்போது  உங்களுடைய PDF கோப்பு திறந்திருக்கும் நிலையில் , 

  • File -->Print  அல்லது Ctrl +P  கிளிக் செய்யவும். Print Dialogbox  தோன்றும். இதில்  Printer --> Name  என்னும் பகுதியில் PrimoPDF என்பதை தேர்வு செய்யவும்.
  • Print Range --> Pages  என்னும் பகுதியில்  உங்களுக்கு வேண்டிய பக்கங்களை மட்டும் கொடுத்து OK பட்டனை கிளிக் செய்யவும்.  உதாரணமாக, 1,4,6,15-20,31,50 etc (See Below for Example)


6. OK கொடுத்தவுடன் PrimoPDF உரையாடல் பெட்டி தோன்றும். இதில் கீழ்ப்பகுதியில் உள்ள Create  PDF பட்டனை கிளிக் செய்யவும்.


7. இப்போது தோன்றும்  Save As உரையாடல் பெட்டியில் உங்களுடைய கோப்பிற்கு புதிய பெயரை தட்டச்சு செய்து Save பட்டனை கிளிக் செய்யவும்.

8. பக்கங்கள் குறைக்கப்பட்ட உங்களுடைய புதிய PDF கோப்பு Adobe Reader  அல்லது Foxit Reader ல் திறக்கப்படும்.

Invigilator Handbook for SSLC Exam -March 2015

Click Below to Download the

Invigilator Handbook for 
SSLC Examination March 2015


Wednesday, March 11, 2015

மனிதர்கள் 500 ஆண்டுகள் உயிர் வாழ முடியும். Google says humans could live for 500 YEARS


மனிதர்கள் 500 ஆண்டுகள் உயிர் வாழ  முடியும் 

Google says humans could live for 500 YEARS - and is investing in firms hoping to extend our lives five-fold

மனிதர்கள் வாழ்நாளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என google  நிறுவனம் தெரிவித்துள்ளது. google  நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவு தலைவர் திரு பில் மாரிஸ் அவர்கள் பகிரும் தகவல்,

  "விஞ்ஞானிகள் உதவியோடு  இன்னும் 20 வருடங்களில் கீமோதெரபி மூலம் புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.  மருத்துவ துறையின் நவீன வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும்  BioMechanics  மூலமாக இது சாத்தியமாகும்."  என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மரபணுவியல் துறையில் ஏற்கனவே இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன எனவும், அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 google  நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குனர் திரு Ray Kurzweil அவர்கள் , "2045ம்  ஆண்டிற்குள் இயந்திர மனிதனில் மனித மூளையை பொருத்த முடியும் " என தெரிவித்துள்ளார்.

  ஆனால், புகழ் பெற்ற நரம்பு உயிரியல் பேராசிரியர் திரு Sir Colin Blakemore அவர்கள் , "மனிதனின் அதிகபட்ச வாழ்நாள்  120 ஆண்டுகள் மட்டுமே " என தெரிவித்துள்ளார்.

our sincere thanks to




 

2012-2013 TRB SELECTED P.G.ASSISTANT'S REGULARISATION ORDER BY JD(HSS)


Click Below to download the Proceedings of  
JD(HSS), TN School Edn 
for 
2012-2013 TRB SELECTED P.G.ASSISTANT'S REGULARIZATION


Saturday, March 7, 2015

JACTTO சார்பில் வேலூர் மாவட்டத்தில் 08.03.2015 அன்று பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


15 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி JACTTO சார்பில்  வேலூர் மாவட்டத்தில் 08.03.2015 அன்று  பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



TANCET - 2015 (Tamil Nadu Common Entrance Test) - ANNA UNIVERSITY NOTIFICATION


TANCET - 2015
 
 அண்ணா பல்கலைக் கழகம் முதுகலை இன்ஜி.,- எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' ஐ  ஆண்டுதோறும்  மே மாதத்தில் நடத்துகிறது .

விண்ணப்பங்கள் வரும் ஏப்.,1 முதல் 20ம் தேதி வரை வழங்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 

 விண்ணப்பங்கள் வழங்கும் நாட்கள்                       01.04.2015 to 20.04.2015
(Issuing Applications)

விண்ணப்பங்களை சமர்பிக்க  கடைசி நாள்       22.04.2015
(Last Date for Submission of  Filled App.)

தேர்வுகள் நடைபெறும் நாட்கள்                                16.05.2015, 17.05.2015
 (Entrance Exam Date's)


            MCA Entrance Exam       :  16.05.2015     10.00 to 12.00 
            MBA                                     :  16.05.2015     02.30 to 04.30
            ME/M.Tech/M.Arc              :  17.05.2015     10.00 to 12.00

 ஆன்லைன்  மற்றும்  நேரடி விண்ணப்பம் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.
 
Anna University conducts the Tamil Nadu Common Entrance Test (TANCET) for admission to MBA, MCA, M.E./M.Tech/M.Arch/M.Plan programme of various Colleges and Universities of Tamil Nadu. 

Eligibility Criteria:



MBA     - Graduate in any discipline under the 10+2+3 pattern


MCA     - Bachelors degree with mathematics as a subject in 12th  or Maths/Stat as one of the 
                subjects at the degree level. 


M.E.     - Bachelors degree in Engineering/Technology in the relevant stream.


*Candidates who are appearing in the final year of the qualifying examination are also eligible to appear in the Tamil Nadu Common Entrance Test 2015. 

Fees:  Rs.500/- for General and  250/- for Reserved Candidates 

Wednesday, March 4, 2015

துறைத் தேர்வுகள் - மே 2015 - Deptl.Exam May'2015

துறைத் தேர்வுகள் - மே  2015

Name of the Examination          : Dept. Examination - May 2015
 
Date of Notification                    : 01.03.2015

Date & time of closing                : 31.03.2015 5.45 PM
 
Date of Examination                   : 24.05.2015 to 31.05.2015
 
Fee   : 
        
     Registration Fee Rs.30/- along with postal charge of Rs.12/- to be included  to the total amount of examination fee. ( Exam Fees for Each  paper  is Rs.50/-)

           Hall ticket can be downloaded from the Commission’s website from 17.05.2015 to 31.05.2015, by presenting the unique online Application No. and date of birth.

           Days and Dates of Written Examinations:- The Forenoon session will commence from 9.00 a.m. and the Afternoon session will commence from 2-30 p.m.
ஆன்லைனில் பதிவு செய்ய    http://tnpsconline.tn.nic.in/

XII MARCH 2015 THEORY EXAM FORMS

XII MARCH 2015 THEORY EXAM FORMS

Download Here

12ம் வகுப்பு பொதுத் தேர்வு-மார்ச் 2015 தேர்வு அறையில் நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு



12ம் வகுப்பு பொதுத் தேர்வு-மார்ச் 2015 
தேர்வு அறையில் நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
 
சென்னை: பிளஸ் 2 தேர்வில், தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 5ம் தேதி துவங்குகிறது.
மாணவர்களை விழிப்புடன் கண்காணிக்க, தேர்வு அறையில், கண்காணிப்பாளர் களுக்கு நாற்காலி போடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
மூன்று மணி நேரம் நின்று கொண்டே இருப்பது இயலாத காரியம். சர்க்கரை நோய் பாதித்தோர் சில நிமிடங்களுக்கு மேல் நின்றால் மயங்கி விடுவர். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் வியர்த்து அழுத்தம் அதிகமாகும். இதயப் பிரச்னை உள்ளவர்களும் சோர்வாகி விடுவர் என தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகப் பொதுச்செயலர் வேலூர் திரு.ஜனார்த்தனன் கூறும்போது, "நாற்காலி போடுவதா, வேண்டாமா என்பதை, ஆசிரியர்களின் வயது மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தேர்வு அறையில் தவறுகள் தெரிந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகத் தலைவர் சிங்காரவேல் கூறும்போது, "உடல்நலப் பாதிப்பு குறித்த ஆசிரியர்களின் பிரச்னைகளை, தேர்வுத் துறைக்கு எடுத்துக் கூறியுள்ளோம். நின்று கொண்டே இருக்க முடியாதோருக்கு தேர்வுப் பணியில் இருந்து விலக்கு வேண்டும்" என்றார்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்ககத்தில் விசாரித்தபோது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, நாற்காலி தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாற்காலி போட வேண்டாம் என்பதை ஆசிரியர்களின் வயது, உடல்நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக நாற்காலி தர வேண்டும் என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.