Friday, April 22, 2016

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்


 
தமிழக அரசின், அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.

அதன் விவரம்: 

நவம்பர் 8,2015  குரூப் 1 தேர்வு

காலிப் பணியிடங்கள்: 74
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  117,696
முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்:  4,033
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  29.07.2016, 30.07.2016 மற்றும்  31.07.2016

ஜூலை 11,2015  புள்ளியல் அதிகாரி தேர்வு

காலிப் பணியிடங்கள்: 270
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  19,130
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தேர்வு செய்யப்பட்டவர்கள்:  54
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்:  06.05.2016

ஆகஸ்ட் 1,2015  நுாலகர் தேர்வு

காலிப் பணியிடங்கள்: 29
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  2,352
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தேர்வு செய்யப்பட்டவர்கள்: 71
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்:  09.05.2016 மற்றும் 10.05.2016


தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in வலைதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

No comments: