பாமக நிறுவனர்
ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மாணவ, மாணவியர்கள் தங்களது உடைமைகள், ஆடைகள், பாட நூல்கள் ஆகியவற்றை
இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே , தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு
வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும்
என்றும், அரையாண்டுத் தேர்வுகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும்
ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.