Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Friday, September 2, 2016
இன்று பாரத் பந்த்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15
ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க
வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து
தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன.
வங்கி, இன்சூரன்ஸ் பணிகள் உட்பட நாடு முழுக்க அரசு மற்றும் தனியார்
பணிகளில் 15 கோடி ஊழியர்கள் இந்த சங்கங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் வேலை
நிறுத்த பாதிப்பு பெருமளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
சாலை போக்குவரத்து, மின் வினியோகம், சமையல் எரிவாயு, எண்ணை சப்ளையில்
பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. மின்சாரம், சுரங்கம், பாதுகாப்பு,
டெலிகாம் மற்றும் இன்சூரன்ஸ் துறைகள் பாதிப்பை சந்திக்கும் எனவும்,
வங்கிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் அனேகமாக மூடப்படும் எனவும்
தெரிகிறது.
ஆட்டோ, டாக்சி யூனியன்கள் பலவும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து்ள்ளதால்
அவற்றின் போக்குவரத்து பாதிக்கப்படலாம்.
தமிழகத்தை பொறுத்தளவில், வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும்
பங்கேற்கிறது. அரசு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் இதற்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை கைவிடக்கோரி
தமிழ்நாடு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குழுவும் போராட்டத்தில் கலந்து
கொள்கின்றன.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் தனியார் பஸ்,
ஆட்டோ, லாரிகள் ஓடாது. வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் அரசு
பணிகள், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கிகளை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள 6000 வங்கி கிளைகளில் சேவை கடுமையாக
பாதிக்கப்படும். பணப்பட்டு வாடா, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து
சேவையும் முற்றிலும் முடங்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி கூறுகையில், புதிய பென்ஷன் திட்டத்தை
கைவிட வேண்டும், ஊதிய மாற்றுக் குழு அமைக்க வேண்டும், காலி பணியிடங்களை
நிரப்ப வேண்டும் என தமிழகத்தில் போராடி வருகிறோம். அரசு இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்காததால் 5 லட்சம் அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில்
பங்கேற்கிறோம் என்றார்.
இன்று நடக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி, ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச்
சேர்ந்த ஆசிரியர்களும் ஈடுபடுகின்றனர்.
Monday, August 29, 2016
CPS திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை(DCRG) வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்
பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத்தில்(CPS) உள்ள அரசு
ஊழியர்களுக்கும் பணிக்கொடை (Death Cum Retirement Gratuity) வழங்க மத்திய அரசு உத்தரவிட்
டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு பணியில்
சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில்
சேர்க்கப்படு கின்றனர். மத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டம், 2004 ஜனவரி
1-ம் தேதிக்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு
வருகிறது.
ராணுவத் தினருக்கு மட்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு
ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்(BASIC), தர ஊதியம் (Grade Pay), அகவிலைப்படி(DA)
ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.. இதற்கு
இணையான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும். இதற்காக ஒவ்வொரு அரசு
ஊழியருக்கும் CPS எண்
கொடுக்கப்பட்டு அதில் இரு தொகைகளும் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு CPS கணக்கில் சேரும் தொகை, அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது மொத்த
தொகையில் 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை,
பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதிய மாக வழங்கப்படும். புதிய
ஓய் வூதிய திட்டத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என்றாலும்
எவ்வளவு கிடைக்கும் என்பதை உத்தரவாதத்துடன் சொல்ல இயலாது. மேலும், இந்த
திட்டத்தில் பழைய அரசு ஊழியர் களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை
(கிராஜுவிட்டி), குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்களும் கிடையாது.
தமிழகத்தில் சுமார் 4.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,
காவல்துறையினர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பழைய
ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு தொடர்ந்து
கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ்
அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்
திருக்கிறது.
இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர் களுக்கும்
பணிக்கொடை வழங்க மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி ஓர் உத்தரவை
பிறப்பித்துள் ளது. அதில், 1.1.2004-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்து
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தில்
உள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையைப் பெற தகுதியுடையவர்
ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து அனைத்து மாநில
தலைமைச் செயலாளர்களுக்கும், நிதித்துறை செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர்
நல அமைச்ச கத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூ தியதாரர் நலத்துறை இயக்குநர்
கடந்த 26-ம் தேதி தகவல் அனுப்பி யுள்ளார்.
பணிக்கொடை என்பது ஓர் ஊழியரின் பணிக்காலத்துக்கு ஒவ்வோர் ஆண்டுக்கும் அரை
மாத சம்பளம் என்ற வீதத்தில் கணக் கிடப்படும். அதாவது, ஒரு ஊழியர் 20
ஆண்டுகள் பணியாற்றி இருந் தால் தோராயமாக அவரின் 10 மாத சம்பளம்
பணிக்கொடையாக கிடைக்கும். தற்போது பணிக் கொடைக்கான உச்சவரம்பு ரூ.10
லட்சமாக உள்ளது.
Friday, August 26, 2016
QUARTERLY EXAMINATION – SEPTEMBER 2016 - TIME TABLE
DATE
|
DAY
|
XII
|
X
|
08.09.2016
|
THU
|
LANGUAGE I
PAPER |
LAN. I PAPER
|
09.09.2016
|
FRI
|
LANGUAGE II
PAPER |
-
|
10.09.2016
|
SAT
|
ENGLISH I PAPER |
LAN. II PAPER
|
MON
|
ENGLISH II PAPER |
ENGLISH I
|
|
13.09.2016
|
TUE
|
BAKRID HOLYDAY
|
|
14.09.2016
|
WED
|
COMMERCE/ HOME SCIENCE/ GEOGRAPHY |
ENGLISH II
|
15.09.2016
|
THU
|
MATHS / MICRO BIOLOGY / ZOOLOGY / NUTRITION AND DIET / TEXTILES DESIGN / FOOD MGMT AND CHILD CARE/ AGRICULTURE PRACTICES / POLITICAL SCIENCE / NURSING (VOC & GEN) / ACCOUNTANCY & AUDITING |
-
|
16.09.2016
|
FRI
|
COMMUNICATIVE ENGLISH/ INDIAN CULTURE/ COM.SCI / BIO CHEMISTRY / STATISTICS / ADV. LANGUAGE(TAMIL) |
MATHS
|
19.09.2016
|
MON
|
PHYSICS / ECONOMICS VOCATIONAL: GM / EE / DC/ EMA / AM/ TT/ OSS |
SCIENCE
|
21.09.2016
|
WED
|
CHEMISTRY / ACCOUNTANCY |
OPTIONAL
LANGUAGE
|
23.09.2016
|
|
BIOLOGY/ BOTANY/HISTORY / BUSINESS MATHS |
SOCIAL SCIENCE
|
Tuesday, August 23, 2016
மேல்நிலைத் துணைத்தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு ( October Private Exam for XII - Online Application, Centre, Time Table Announced)
மேல்நிலைத்
துணைத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க விரும்பும்
தனித்தேர்வர்கள் 24.08.2016 முதல் (25.08.2016 மற்றும் 28.08.2016 ஆகிய விடுமுறை நாட்கள் தவிர்த்து ) 31.08.2016 மாலை 5.45 வரை தங்களின்
விண்ணப்பங்களை, தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நோடல் மையங்களுக்கு சென்று
பதிவு செய்யலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
- ஏற்கனவே நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் H வகையினர்
- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும், 16 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் HP வகையினர்.
பாடத்திட்டம்
நேரடித் தனித்தேர்வர்கள் (HP)
முதன்முதலாக
மேல்நிலைத் தேர்வெழுதும் HP வகை நேரடித் தனித்தேர்வர்கள், பகுதி I மற்றும்
II மொழிப் பாடங்களுடன் பின்வரும் ஐந்து பாடத் தொகுப்புகளில் ஏதேனும்
ஒன்றில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
பாடத் தொகுப்பு எண்
|
பகுதி 3 – பாடங்கள்
|
304
|
வரலாறு,பொருளியல்,வணிகவியல்,கணக்குப்
பதிவியல்
|
305
|
பொருளியல்,அரசியல்
அறிவியல்,வணிகவியல், கணக்குப் பதிவியல்
|
306
|
பொருளியல்,
வணிகவியல், கணக்குப்பதிவியல், இந்தியக் கலாச்சாரம்
|
307
|
பொருளியல்,
வணிகவியல், கணக்குப் பதிவியல், சிறப்பு மொழி (தமிழ்)
|
308
|
பொருளியல்,
வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம்
|
அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள்
ஆண்
தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை
ஆன்-லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள்
(Service centres) அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு
நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணம்
மறுமுறை தேர்வெழுதுவோர் (H வகை தனித்தேர்வர்கள்)
- ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ35/-ம் செலுத்த வேண்டும்.
- ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-
நேரடித் தனித்தேர்வர்கள் (HP வகை தனித்தேர்வர்கள்)
- தேர்வுக் கட்டணம் ரூ.150/- இதரக் கட்டணம் ரூ.35/- கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு ரூ.2/- மொத்தம் ரூ.187/-
- ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-
- தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை பணமாக செலுத்த வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் கவனத்திற்கு
- பார்வையற்றோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத் திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய குறிப்பிட்ட சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப எண்ணின் முக்கியத்துவம்
ஆன்-லைனில்
விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு
வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application
Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில்
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும்
என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
தேர்வு மையம்
தனித்தேர்வர்கள் அவரவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
H வகையினர்
- உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையங்களில் (Service Centre) பணமாகச் செலுத்த வேண்டும்.
- மதிப்பெண் சான்றிதழ் ஒளிநகல் (இதுவரை எழுதிய மேல்நிலைத் தேர்வுகளுக்கானது).ஜூன் 2016 பருவத்தில் தேர்வெழுதியோர் தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினை இணைக்க வேண்டும்.
- பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவராக பதிவு செய்யப்பட்டு தேர்வெழுதாதவர்களுக்கு மட்டும்).
- செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வெழுதுவோர் மட்டும்)
HP வகையினர்
- உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையங்களில் (Service Center) பணமாகச் செலுத்த வேண்டும்.
- பத்தாம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்.
- பள்ளி மாற்றுச் சான்றிதழின் அசல்
- இடப்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்)
மேற்
குறிப்பிட்டுள்ள இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால்
மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும்
அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி
குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மேலும்
மேற் குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 14.09.2016
மற்றும் 15.09.2016 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின் (Takkal)
மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.
Saturday, July 30, 2016
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் இருந்து மாவட்டக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற 41 தலைமையாசிரியர்கள் பெயர்ப்பட்டியல்
மாவட்டக்கல்வி
அலுவலர் நிலை பதவிகளில்,
பதவி உயர்வு பெற்ற 41 தலைமையாசிரியர்கள் பெயர்ப்பட்டியல்
வ.
எண்
|
தலைமையாசிரியர்
பெயர்,பணிபுரிந்த பள்ளி, மாவட்டம்
|
பதவி உயர்வின்
பெயர்
|
பதவி உயர்வில்
பணிபுரியவுள்ள மாவட்டம்
|
1
|
என்.சுப்பிரமணியன், தலைமையாசிரியர்
அ.ம.மே.நி.பள்ளி கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி
அலுவலர்,
|
திருவாரூர்
|
2
|
மு.மணிமேகலா தலைமையாசிரியை
அரசு உ.நி.பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம்
|
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்
|
தஞ்சாவூர்
|
3
|
எம்.எஸ்.மல்லிகா தலைமையாசிரியை
அரசு மே.நி.பள்ளி தொரப்பாடி, வேலூர்
|
மாவட்டக்கல்வி அலுவலர்,
ஓசூர்
|
கிருஷ்ணகிரி
மாவட்டம்
|
4
|
ஆர்.கலைச்செல்வன் தலைமையாசிரியர்
அரசு உ.நி.பள்ளி, சின்னசேமூர்,
ஈரோடு மாவட்டம்
|
மாவட்டக்கல்வி அலுவலர், கோபிச்செட்டிபாளையம்
|
ஈரோடு
|
5
|
ஆர்.சண்முகம் தலைமையாசிரியர்
அரசு மே.நிபள்ளி அரிமழம்,
புதுக்கோட்டை மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
திருச்சிராப்பள்ளி
|
6
|
பி.வி.சாவித்ரி தலைமையாசிரியை
அ.உ.நிபள்ளி,
காசநாடுபுதூர்,
தஞ்சாவூர் மாவட்டம்
|
மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்,
|
திருவாரூர்
|
7
|
இ.மொக்கத்துரை தலைமையாசிரியர்
அ.மே.நி.பள்ளி
பி.சுப்பலாபுரம், தேனி மாவட்டம்
|
மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்
|
தேனி
|
8
|
கே.வீரேஸ்வரன் நாயர்,
தலைமையாசிரியர்,
அ,உ.நி.பள்ளி
பொன்மனை,கன்னியாகுமரி மாவட்டம்
|
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
|
நாகர்கோவில்
|
9
|
கே.சங்கரநாராயணன் தலைமையாசிரியர்
அ.மே.நி.பள்ளி ஜாகீர்அம்மாபாளையம்
சேலம் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
சேலம்
|
10
|
எஸ்.தமிழரசி, தலைமையாசிரியை
அ.உ.நிபள்ளி, பட்டூர், காஞ்சிபுரம்
மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு
|
காஞ்சிபுரம்
மாவட்டம்
|
11
|
ஆர்.சௌந்தரநாயகி, தலைமையாசிரியை,
கே.ஆர்.சாரதா அ.மே.நிபள்ளி, நல்லாட்டின்புதூர்,
தூத்துக்குடி மாவட்டம்
|
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
|
தூத்துக்குடி
|
12
|
எஸ்.கற்பகவல்லி, தலைமையாசிரியை
அ.உ.நி.பள்ளி,புக்கத்துறை,
காஞ்சிபுரம் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
காஞ்சிபுரம்
|
13
|
ஏ.கே.கங்காதரரெட்டி தலைமையாசிரியர்,
அ.உ.நி.பள்ளி,
பழையநாப்பாளையம், திருவள்ளூர் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி
|
திருவள்ளூர்
மாவட்டம்
|
14
|
ஆர்.லோகநாதன் தலைமையாசிரியர்
அ.மே.நிபள்ளி,குலமங்கலம், மதுரை மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், உசிலம்பட்டி
|
மதுரை மாவட்டம்
|
15
|
கா.பழனிச்சாமி தலைமையாசிரியர்
அ.உ.நி.பள்ளி,
வெங்கடசமுத்திரம்,
தர்மபுரி மாவட்டம்
|
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
|
தர்மபுரி
|
16
|
என்.விசாகமூர்த்தி தலைமையாசிரியர்
அ.(ம)மே.நி.பள்ளி,சோளிங்கர், வேலூர் மாவட்டம்
|
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்
|
காஞ்சிபுரம்
|
17
|
ஜி.லில்லிபுஷ்பராணி தலைமையாசிரியை
அரசு.உ.நி.பள்ளி,
ஆண்டார்குப்பம்,
திருவள்ளூர் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
திருவள்ளூர்
|
18
|
கே.தேன்மொழி தலைமையாசிரியை
அ.(ம) மே.நி.பள்ளி சிங்காநல்லூர் கோயமுத்தூர்
மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
கோயமுத்தூர்
|
19
|
கே.அருளரங்கன் தலைமையாசிரியர்
அ.உ.நி.பள்ளி,ஆண்டிப்பாளையம்நாமக்கல்
மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
நாமக்கல்
|
20
|
என்.சரசுவதி தலைமையாசிரியர் அரசு மே.நி.பள்ளி
அஞ்சூர், காஞ்சிபுரம் மாவட்டம்
|
ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஆய்வாளர்
|
சென்னை
|
21
|
சி.செல்வராசு
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி
புதுப்பாடி, வேலூர் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், சங்ககிரி
|
சேலம் மாவட்டம்
|
22
|
எம்.பரிமளம்,
தலைமையாசிரியை,
அரசு மே.நி.பள்ளி அனகாபுத்தூர் காஞ்சிபுரம்
மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், மத்திய சென்னை
|
சென்னை-15
|
23
|
இ. செந்தமிழ்ச்செல்வி,
தலைமையாசிரியை,
அ.உ.நி.பள்ளி சிவாடா, திருவள்ளூர் மாவட்டம்
|
உதவி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்ககம்
|
சென்னை-6
|
24
|
ஆர்.எத்திராஜூலு தலைமையாசிரியர்,
அரசு மே.நி.பள்ளி அயப்பாக்கம் திருவள்ளூர்
மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (வடக்கு)
|
சென்னை-8
|
25
|
அ.பாலுமுத்து, தலைமையாசிரியர்
அரசு உ.நி.பள்ளி தேக்கம்பட்டி, தேனி
மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், பெரியகுளம்
|
தேனி மாவட்டம்
|
26
|
ஆர்.எடிசன்,
தலைமையாசிரியர்
அறிஞர்அண்ணா அ.மே.நி.பள்ளி,
ஊரூர், அடையார், சென்னை-90
|
மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு)
|
சென்னை
|
27
|
ஐ.முகம்மது அயூப்,
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,
தென்சிறுவள்ளூர்,
விழுப்புரம் மாவட்டம்
|
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
|
திருச்சிராப்பள்ளி
|
28
|
எஸ்.ஆஷாகிறிஸ்டி எமெரால்ட்,
தலைமையாசிரியை,
அ.உ.நி.பள்ளி மேல்பட்டாம்பாக்கம்,
கடலூர் மாவட்டம்
|
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
|
நாகப்பட்டினம்
மாவட்டம்
|
29
|
ஏ.செல்வராஜ்,
தலைமையாசிரியர்,
அரசு (ஆ) மே.நி.பள்ளி கோயமுத்தூர்
|
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
|
நீலகிரி மாவட்டம்
|
30
|
கே.தங்கவேல் தலைமையாசிரியர்,
அரசுஉ.நி.பள்ளி,நாழிக்கல்பட்டி, சேலம் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
கரூர்
|
31
|
டி.பாலசுப்பிரமணியன் தலைமையாசிரியர்,
அரசு மே.நி.பள்ளி,
ஓ.சிறுவயல்,
சிவகங்கை மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், பரமக்குடி
|
இராமநாதபுரம்
மாவட்டம்
|
32
|
எஸ்.முருகேசன் தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி, முடுவார்பட்டி,
மதுரை மாவட்டம்
|
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்
|
மதுரை
|
33
|
ஆர்.ஜெயபாண்டி,
உதவித்திட்ட அலுவலர்,
(அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்
தரத்தில்) அனைவருக்கும் கல்வி இயக்கம் திருநெல்வேலி
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
திருநெல்வேலி
|
34
|
எம்.செல்வராஜ் தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,
மாதேயன்குட்டை,
சேலம் மாவட்டம்
|
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
|
கரூர்
|
35
|
எஸ்.வளர்மதி
தலைமையாசிரியை,
அரசு (ம) மே.நி.பள்ளி,
பட்டுக்கோட்டை,
தஞ்சாவூர் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை
|
தஞ்சாவூர் மாவட்டம்
|
36
|
ஜி.ஜெயராஜ்,
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,
வினைதீர்த்தநாடார்பட்டி திருநெல்வேலி
|
மாவட்டக் கல்வி அலுவலர், சேரன்மாதேவி
|
திருநெல்வேலி
மாவட்டம்
|
37
|
எம்.அன்புக்கரசி தலைமையாசிரியை,
அரசு (ம) மே.நி.பள்ளி, வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம்
|
ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் இடைநிலைக்
கல்வித் திட்டம்
|
சென்னை-6
|
38
|
அ. இராமகிருஷ்ணன்,
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,
வி.ராமசாமிபுரம்,
மதுரை மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
விருதுநகர்
|
39
|
எம்.எஸ்.உமா தலைமையாசிரியை,
அரசு மே.நி.பள்ளி,
இலக்கியம்பட்டி,
தர்மபுரி மாவட்டம்
|
மாநகராட்சி கல்வி அலுவலர்
|
கோயமுத்தூர்
|
40
|
மு.வேலம்மாள்,
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி, லட்சுமிபுரம், தேனி
மாவட்டம்
|
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
|
விருதுநகர்
|
41
|
த.சுப்பிரமணியன் தலைமையாசிரியர்,
அரசு மே.நி.பள்ளி,
கோவிலம்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்
|
மாவட்டக் கல்வி அலுவலர்
|
நாகப்பட்டினம்
|
Subscribe to:
Posts (Atom)