Thursday, December 24, 2015

தந்தை பெரியார் நினைவஞ்சலி

 
ஈ.வெ.இராமசாமி 
(17.09.1879 -  24.12.1973) 
 
"புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி"   - UNESCO


பகுத்தறிவு 

சாணியைக் கொண்டு போய் வைத்து, "இது ஒரு அருமையான உணவாகும்" என்று சொல்லிச் சாப்பிடச் சொன்னால் யாராவது சாப்பிடுவார்களா? பார்த்தவுடனேயே "இது சாணி, அசிங்கம்" என்று சொல்லிவிடுவார்களே! ஆனால் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து இது சாமி என்று சொன்னால் தலையில் குட்டுப் போட்டுக் கொண்டு விழுந்து கும்பிடுகிறார்கள்.

ஏனென்றால், கடவுள் சங்கதி என்று சொன்னால் நம் மக்கள் அதைப் பற்றிச் சிந்திக்காமல் குருட்டுத்தனமாய் நம்ப வேண்டும். அது விசயத்தில் அறிவைச் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை. இந்த முட்டாள் தனம் அதாவது அறிவுக்குப் பூரணச் சுதந்திர மற்ற அடிமைத் தன்மை ஒழிந்து பகுத்தறிவு வளர வேண்டும்.


கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமய மலையின் உயரம் ஏன் வெளிநாட்டான் கூற வேண்டியிருக்கிறது? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? 

நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக் கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு இந்த ஒலி பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பது மட்டும் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை? என்று கவனிக்க வேண்டும். 

பார்வதியுடன் பரமசிவன் பேசிய ரகசியத்தைக்கூட அறிந்து கொள்ளும் சக்தி பெற்றுள்ள நமக்கு இவ்வளவு வெளிப்படையாக இருந்துவரும் இழிவு தெரியாமற்போனது ஏன் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொது அறிவு வளரவும் விசய ஞானம் உண்டாகவும் உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்பட வேண்டும்.

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள்,  கேள்வி மாத்திரத்தினாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகு காலமாக நடந்து வருவதாக்த் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அனேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது; கடவுளாலோ மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.

மதம் 

ஓரிரு கோடி ரூபாய்ப் பணமும், ஓரிரு ஆயிரம் ஆண்களும்,   ஐந்து - ஆறு மொழிகளில் பத்திரிக்கைகளும் வைத்துக் கொண்டு,  ஒரு ஈன முகத்துக்கும் தெய்வப் பிறவித்தன்மை கற்பித்து, அற்புத அதிசயங்கள் செய்ததாகத் கதை கட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால், ஒரு ஆண்டுக்குள்ளேயே பல லட்சக் கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம். எதிர்ப்பவரைத் தூக்கிலிடத்தக்க ஆதரவும் கிடைத்துவிடும். இதுதான் மதத்தின் லட்சணம்.

  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது. 
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

Wednesday, December 23, 2015

பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடுமுறை

மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன; இந்தச் சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் டிசம்பர் 24, 25, 27 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மட்டும் நடத்தக் கூடாது என்றும் மற்ற நாள்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த பள்ளிகளில் டிசம்பர் 26 முதல் 31 வரையிலான விடுமுறை நாள்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

வகுப்பறைகளிலும், வகுப்பறைகளைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடரைத் தெளித்தும், தேவைப்பட்டால் தினக்கூலி பணியாளர்களை அமர்த்தியும் பள்ளிகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Saturday, December 19, 2015

10th ,12th HALF YEARLY EXAMINATION JAN 2015 – TIME TABLE

10,12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள் - கால அட்டவணை 

Click Here to Download the Timetable in Ms Word
Click Here to Download the Director Proceedings with Time Table in pdf

Date
Day
12th
10th
Subjects
Subjects
11.01.2016
Mon
Language 1st Paper
(Tamil and other Minority Languages)
Tamil 1st Paper
12.01.2016
Tue
Language 2nd Paper
---
13.01.2016
Wed
English 1st Paper
Tamil 2nd Paper
14.01.2016
Thur
English 2nd Paper
---
18.01.2016
Mon
Commerce, Home Science, Geography
English 1st Paper
19.01.2016
Tue
Mathematics, Zoology,

Agriculture Practice, Accounts & Auditing(A&A), Political Science, Micro-Biology,  Nutrition and Dietetics, Food Management & Child Care, Textiles Designing, Nursing(Vocational), Nursing(General)
---
20.01.2016
Wed
---
English 2nd Paper
21.01.2016
Thur
Physics, Economics,

General Machinist(GM),
Electrical Machines and Appliances(EMA),
Electronics Equipment(EE), Draughtsman Civil(DC), Auto Mechanic(AM), Textile Technology(TT), Office Management(OM)

22.01.2016
Fri
----
Mathematics
23.01.2016
Sat
Chemistry, Accountancy
---
25.01.2016
Mon
Biology, Botany, History, Business Mathematics
Science
27.01.2016
Wed
Computer Science,
Statistics, Bio Chemistry, Indian Culture, Communicative English, Advanced Language(Tamil)
Social Science
 

Wednesday, December 16, 2015

Bajirao Mastani Official Trailer with Subtitles | Ranveer Singh, Deepika...

Pinga | Official Video Song | Bajirao Mastani | Deepika Padukone, Priyan...

வங்கிக் கணக்குகளை தொடங்க இனி பான்கார்டு எண் கட்டாயம்

 
கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமான, அனைத்து நிதிப்பரிவர்த்தனைகளுக்கும், PAN(Permanent Account No) எனப்படும்  நிரந்தர கணக்கு எண் விரைவில் கட்டாயமாகிறது.
இதுதொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளைத் தவிர, மற்ற வங்கிக் கணக்குகள் அனைத்திற்கும் PAN எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கப்படும் வெளிநாட்டு பயண டிக்கெட்டிற்கும், ஹோட்டல் பில் கட்டுவதற்கும் பான் எண் கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கப்படும் அசையா சொத்துகளுக்கும் பான் எண் கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Monday, December 14, 2015

விஏஓ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

TNPSC நடத்தும் VAO தேர்விற்குவிண்ணப்பிக்க டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணத்தை செலுத்த ஜனவரி 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ONE DAY SALARY CONTRIBUTION BY GOVT EMPLOYEES FOR CM PUBLIC RELIEF FUND G.O ISSUED

தமிழக வெள்ள நிவாரண நிதியாக, அரசு ஊழியர்கள் டிசம்பர் மாதத்தின் ஒரு நாள் ஊதியத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க தமிழக அரசு பணியாளர்(ம) நிர்வாக சீர்திருத்தத்துறை (P&AR) ஆணை பிறப்பித்துள்ளது.

Go.Ms.No 117(P&AR) Dt. 13.12.2015

Click Here to Download the G.O.

 

TNPSC DEPARTMENTAL EXAMINATION TIME TABLE FOR DEC 2015


Wednesday, December 9, 2015

10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்

மார்ச் 2016ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?
  1. மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள்.
  2. 9-ஆம் வகுப்பில் இடையில் நின்றவர்கள்.
  3. தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் (இ.எஸ்.எல்.சி.) தேர்ச்சிப் பெற்றவர்கள்.
  4. திறந்தநிலைப் பள்ளியில் சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்கள் 
 
ஆகியோர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர் 01.04.2016 -ஆம் தேதி பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பத்தை  மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். மையங்கள் குறித்த விவரங்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் ஊதியம் வழங்க முடிவு


தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு  டி.ஜி.பி., முதல் காவலர்  வரை, 99,896 பேர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள், தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

Monday, December 7, 2015

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்ச்சி வழங்க வேண்டும்(???): டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களது உடைமைகள், ஆடைகள், பாட நூல்கள் ஆகியவற்றை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே , தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என்றும்,  அரையாண்டுத் தேர்வுகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Saturday, December 5, 2015

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) டிசம்பர்  28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான தேர்வு  2016 பிப்ரவரி 21-ல் காலை 9.30 முதல் 12 மணி வரை தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.
 இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும். 
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் டிசம்பர்  28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 
தேர்வறை அனுமதிச் சீட்டை ஜனவரி 25-ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 
கல்வித் தகுதி 
5-ஆம் வகுப்பு வரியிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன் 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டய படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, இரு தாள்களையும் எழுத விரும்புவோர் ரூ.1000-த்தையும் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300-ஐயும், இரண்டு தாள்களையும் எழுத ரூ. 500-ம் செலுத்த வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு 

Wednesday, December 2, 2015

RECRUITMENT: SPECIALIST CADRE OFFICERS IN SBI GROUP : 40 Vacancies for B.L.,M.L And 145 Vacancies for B.E.,B.Tech.,M.Sc.,MCA Computer Science Graduates

Advertisement No. CRPD/SCO/2015-16/7
 
1. Online Registration of Application starts from: 26.11.2015
2. Last date for Online Registration of Application: 12.12.2015
3. Payment of Fee Online: 26.11.2015 to 12.12.2015
4. Downloading of call letter for Online Test: After: 05.01.2016
5. Date of Online Test : 17.01.2016

For Notification and Online Apply, Click Here

டிச., 5 வரை கனமழை: இன்று வட கடலோர மாவட்டங்களில் 25 செ.மீ மழை கொட்டும் என BBC அறிக்கை


லண்டன் BBC  செய்தி நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 50 செ.மீ. மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பதிவாகும்' என தெரிவித்திருந்தது.

இதற்கேற்ப  சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று(01-12-15) காலை 8.30 மணி முதல் தற்போது வரை தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் சராசரியாக நேற்று ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 118 மி.மீ., மழையும், மீனம்பாக்கத்தில் 175 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

எனவே இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சராசரியாக 25 செ.மீ  மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை,  திருவாரூர், திருவண்ணாமலை,வேலுார் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்  இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SSA (G.O.175), RMSA BT,PG, PET, Upgraded School PG's, All Non Teaching(RMSA, General) - Pay Authorization Letter for Nov 2015

Tuesday, December 1, 2015

2016ல் இரண்டு அரையாண்டுத் தேர்வுகள்

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, 2016 ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும். தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.