Friday, September 25, 2015

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 Postman பணியிடங்கள் - கடைசி தேதி 04.10.2015

Re post
 

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 தபால்காரர் (Postman) பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ளன. 

பணியிடத்தின் பெயர்
போஸ்ட்மேன்
மொத்த பணியிடங்கள்
143
கல்வித்தகுதி
10ம் வகுப்பு பாஸ்
வயது வரம்பு
18 முதல் 27க்குள்
வயது வரம்பு தளர்வு

எஸ்.சி/எஸ்.டி,
5 ஆண்டுகள்
(32 வயது வரை)
ஓ.பி.சி
3 ஆண்டுகள் ( 30 வயது வரை)
தேர்வு செய்யும் முறை
தேர்வு
Objective Type – 100 மதிப்பெண்கள்

தேர்வு காலம்
2 மணி நேரம்
விண்ணப்பக் கட்டணம்
(அனைவருக்கும்)
ரூ. 100/-
தேர்வுக் கட்டணம்
ரூ. 400/-
(SC/ST/PH/பெண்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு நடைபெறும் இடங்கள்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி
தேர்வுக்கான பாடங்கள்
10ம் வகுப்பு தரத்திலான
பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை
www.dopchennai.in இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி
04.10.2015
மேலும் விவரங்களுக்கு

Thursday, September 24, 2015

கொஞ்சம் சிரிக்க, கொஞ்சம் சிந்திக்க


Source: Google+ , Facebook ,twitter.
Composed by: deccanbluediamonds.



*********

எல்கேஜி பையன்
:  
ஹலோ டீச்சர் இன்னிக்கு என் பையன்
ஸ்கூலுக்கு வர மாட்டான் ,அவனுக்கு    உடம்பு சரியில்லை
டீச்சர்
:
நீங்க யார் பேசறது ?
பையன்
:
எங்க அப்பா பேசறேன்

*********


*********
புருசன்
:  
ஆமா ,என்னடி இவ்வளவு நேரமா காலெண்டரை பார்த்துக்கிட்டு இருக்க
மனைவி
:
பல்லி விழும் பலன் பத்தி பார்த்துக்கிட்டு இருக்கேன்

புருசன்
:
கொண்டா நான் பார்க்கிறேன்,ஆமா பல்லி எங்க விழுந்தது ?

மனைவி
:
நீங்க சாப்பிட்ட சாம்பார்ல!!

*********





                              *********


ஒருதடவை மிஸ்டர் எக்ஸும் அவர் மனைவியும் ஆட்டோல போய்க்கொண்டிருந்தார்கள்.  ஓட்டுனர் கண்ணாடியை சரி செய்து கொண்டிருந்தார்.
 மிஸ்டர் எக்ஸ்  கோபமாக:
"ஏய், நீ என் மனைவியைக் கண்ணாடில பாத்துட்டிருக்க.  நீ வந்து பின்னாடி உட்காரு.  நான் ஆட்டோ ஓட்டறேன்."

*********

*********



ஒருதடவை மிஸ்டர் எக்ஸ்   இந்திய தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார்.  அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத  குறைதான்.   

அவர் கேட்டது   'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.


 *********



கோபுர தரிசனம் கோடி புண்ணியம்            


 


''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''

 


 ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''

 

  *********






மிஸ்டர் எக்ஸ், மிஸ்டர் ஒய்  ரெண்டுபேரும் சொர்க்கத்திற்கு லொகேஷன் பாக்க போனாங்க.  அங்கே  காந்தியும் பிபாஷா பாசுவும்  நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாங்க.

மிஸ்டர் ஒய்   : காந்திக்கு இவ்ளோ மஜாவான தண்டனையா?

மிஸ்டர் எக்ஸ் : தண்டனை காந்திக்கு இல்ல, பிபாஷாவுக்கு.




  *********



அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு ஏன் சொன்னார் ?''

''  ஒரிஜினல், ஜெராக்ஸ்  இரண்டையும் படிச்சு , ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிட்டு காசு தர்றேன்னு சொன்னேன் ,தப்பா ?''



  *********

 

போதும்.   இப்போ சிந்திக்க...

 




*********

 

 

*********

 


விடுமுறை நாட்களிலும் கட்டாயப்பணி : பள்ளி கல்வித் துறை அலுவலக ஊழியர்கள் சங்கம்



அரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி கல்வித் துறையில் 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிலும், பள்ளிகளிலும், 15 ஆயிரம் நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.இந்த அலுவலகங்களில், சில ஆண்டுகளாக, ஓய்வு பெறுவோர், பணி மாறுதல் பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் மற்றும் ஏற்கனவே உள்ள காலியிடங்களில் தேவையான  ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தேக்கமடைந்த பணிகளைக் கவனிக்க, அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஊழியர்களை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால் பல ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளிடம் கூட ஒன்றாக இருக்க முடியாமல், மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில், இன்று (24.09.2015) பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாடு, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் நடக்கிறது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் A.S.ராஜேந்திர பிரசாத், பொதுச் செயலர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது: 

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆவணம் சேகரித்தல், பள்ளி வாரியாக புள்ளிவிவரம் சேகரித்தல் உள்ளிட்ட பல பணிகள், ஊழியர்கள் மீது கூடுதலாக சுமத்தப்படுகின்றன. 

எனவே, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை கூடுதலாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விடுமுறை நாட்களில் ஊழியர்கள் அலுவலகம் வர நிர்ப்பந்திக்ககூடாது. அலுவலக பணியாளர்களின் குறைகளைத் தீர்க்க, மூன்று மாதங்களுக்கு, ஒருமுறை உயரதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற பெயரில் அலுவலக பணியாளர்களை விசாரணையின்றி, போதிய காரணங்களின்றி ஆணைகள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். 

இதுகுறித்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசு அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Wednesday, September 23, 2015

IBPS CWE PO/MT Call Letter 2015 - Date of Examination : 04 October 2015

Institute of Banking Personnel Selection (IBPS)

 
 CALL LETTER FOR THE PRELIMINARY ONLINE EXAMINATION(CWE) FOR RECRUITMENT OF PROBATIONARY OFFICER / MANAGERMENT TRAINEES IN PARTICIPATING ORGANIZATIONS.

DATE:  04.10.2015     TIME :  08.00 AM

The Institute of Banking Personnel Selection (IBPS) will be conducting an online examination (Preliminary and Main) for the next common recruitment process for selection of personnel for Probationary Officer (PO)/ Management Trainee (MT) posts.

Click Here to download the Call letter for Preliminary online Examination

பள்ளிக்கல்வித்துறை - விதி எண்.110ன் கீழ் தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்

பள்ளிக்கல்வித்துறை - தமிழக சட்டப்பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்

23.09.2015 நாளிட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை,சென்னை-9

 Click Here to Download the pdf file.

pr230915_tnla_010.pdf

வாட்ஸ் அப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு விதிக்கும் வரைவுக் கொள்கை உடனடியாக வாபஸ் - மத்திய அரசு



Govt U turn on Encryption Policy
வாட்ஸ் அப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை 90 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மீறினால், கைதாகவும் வாய்ப்பு உள்ளது' என்ற வரைவு செயல் திட்டத்திற்கு, பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மத்திய அரசு அதை வாபஸ் பெற்றுள்ளது.அழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றது.


பொதுமக்கள் மட்டுமன்றி வணிக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள நிறுவனங்களும் இந்த கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வரைவு கொள்கையில் கூறப்பட்டிருந்தது.



இந்தத் தகவலை டெல்லியில் நேற்று  செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தகவல் பரிமாற்றங்களை நாட்கள் அழிக்கக்கூடாது என்று வெளியிடப்பட்ட குறியீட்டுக் கொள்கை வெறும் மாதிரி அறிக்கை மட்டுமே. இது அரசின் கருத்து அல்ல. வாட்ஸ் ஆப்90 , பேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொதுமக்களை கட்டுப்படுத்துவது குறியீட்டுக் கொள்கையின் நோக்கம் அல்ல. சில விஷயங்கள் தவறான புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. எனவே வரைவு கொள்கை வாபஸ் பெறப்படுகிறது. 

 


மத்திய அரசை பொறுத்தவரை சுதந்திரமான சமூக இணையதள வசதியை ஆதரிக்கிறோம். எனினும் பாதுகாப்பு விவகாரங்களுக்காக தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்த குறியீட்டுக் கொள்கை வரையறுக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதன்படி திருத்தப்பட்ட வரைவு கொள்கை தயாரிக்கப்பட்டு மக்களின் கருத்துகள் கோரப்படும்" என்றார் அவர்.
 
Social Media Reflects





" i guess kabutar yug will be back soon #ModiDontReadMyWhatsapp" MAG poked fun at the Encryption policy"

#EncryptionPolicy is like giving you a car, a bungalow, a beautiful wife and you are not allowed to enjoy anything!"

"This Govt wants to control everything, how you using net, what u doing in Whatsapp and next they gonna ask who u sleeping with" - Amit kumar

now will the govt. ask us to tell them what we had for breakfast? policy


This is very "Durbhagyapurna". How long will you keep on taking U-turns. Whose resignation should we ask for?



the IT Minister who referred to it as an "encryption policy" would appear to disagree with you :)

Tuesday, September 22, 2015

Whats App மெசேஜ்களை 3 மாதங்களுக்கு அழிக்கக்கூடாது: புதிய சட்டம் அறிவிப்பு - இணையத்தில் கருத்து கேட்பு

 

Whatsapp, Apple imessage  உள்ளிட்டவற்றின் மெசேஜ்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது, இந்த கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 
Whatsapp போன்ற சமூக ஊடகங்களில் வருகின்ற தகவல்கள் அனுப்பப்படும் இடத்திலிருந்து  செர்வர்களுக்கு சென்று Encrypt செய்யப்பட்டு  குறியீட்டுச் சொற் களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம் அனுப்பும் செய்திகள் தானாவே குறியீட்டுச் சொற்களாக(Encryption) மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன. அதனை பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம் அனுப்பிய தகவலை படிக்க முடியும். 
இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவு சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது அமல் படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங் அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்ட வற்றை 3 மாதங்கள் வரை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். (The Draft National Encryption Policy wants users to store all encrypted communication for at least 90 days and make it available to security agencies, if required, in text form.) அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்
இந்த புதிய சட்டத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மே 2015 துறைத் தேர்வு முடிவுகள் - Results of Departmental Examinations - MAY 2015


மே 2015ல் நடைபெற்ற துறைத்தேர்வுகளுக்கான முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Click Here to View and download the TN Dept Exam May 2015 Results.