Thursday, May 7, 2015

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் - பிளஸ் 2 ரேஸில் விருதுநகர் முதலிடம்; அரியலூர் கடைசி இடம்

மார்ச் 2015ல்  நடைபெற்ற +2 தேர்வில்,  விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 80.92 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. 

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம்  பின்வருமாறு.
மாவட்டம்
தேர்வு எழுதியவர்கள்
தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம்
பள்ளிகளின் எண்ணிக்கை
விருதுநகர்
22,304
21,737
97.46
193
பெரம்பலூர்
8,296
8,068
97.25
65
ஈரோடு
26,835
25,779
96.06
192
நாமக்கல்
31,020
29,702
95.75
187
தூத்துக்குடி
19,651
18,766
95.5
165
திருச்சி
32,476
30,969
95.36
221
கன்னியாகுமரி
25,322
24,108
95.21
209
ராமநாதபுரம்
14,844
14,051
94.66
121
கோவை
36,908
34,825
94.36
325
திருப்பூர்
23,238
21,916
94.31
174
சிவகங்கை
15,930
15,001
94.17
129
திருநெல்வேலி
34,565
32,461
93.91
278
தேனி
14,814
13,896
93.8
114
மதுரை
37,143
34,495
92.87
276
தருமபுரி
20,514
18,936
92.31
139
கரூர்
10,918
10,013
91.71
96
சென்னை
53,180
48,679
91.54
412
சேலம்
39,613
35,927
90.69
267
காஞ்சிபுரம்
44,676
40,514
90.68
312
தஞ்சாவூர்
29,598
26,715
90.26
194
திண்டுக்கல்
22,495
20,294
90.22
175
புதுக்கோட்டை
18,076
16,188
89.56
137
புதுச்சேரி
14,252
12,563
88.15
128
திருவள்ளூர்
41,365
36,121
87.32
298
ஊட்டி
8,559
7,424
86.74
72
கிருஷ்ணகிரி
21,392
18,499
86.48
145
நாகப்பட்டினம்
18,105
15,652
86.45
122
கடலூர்
28,093
23,792
84.69
191
விழுப்புரம்
36,738
30,846
83.96
253
திருவண்ணாமலை
24,362
20,326
83.43
193
திருவாரூர்
14,221
11,815
83.08
105
வேலூர்
42,220
34,364
81.39
306
அரியலூர்
7,548
6,108
80.92
63
 

பிளஸ் 2 தேர்வில் 90.6% தேர்ச்சி: மாநில அளவில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்


தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 


தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா முதலிடம் பெற்றார். இவர் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல் கோவை சவுடேஸ்வரி வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி நிவேதாவும் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 



1190 மதிப்பெண்கள் பெற்று 4 பேர் இரண்டாம் இடம் பிடித்தனர். ஈரோடு மாவட்ட ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், நாமக்கல் எஸ்.கே.வி.பள்ளியைச் சேர்ந்த பிரவீண், நாமக்கல் SSM Lakshmi Ammal மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சரண்ராம், திருச்சி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி வித்யவர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 


நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு துறை இயக்குநர் தேவராஜன் வெளியிட்டார். 

 பிளஸ் 2 தேர்ச்சியில் வழக்கம்போல் மாணவிகள் முன்னிலை 
 
பிளஸ் 2 தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%. கடந்த ஆண்டும் இதே தேர்ச்சி விகிதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.4%. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் அரியலூர் 
 
2015 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 80.92 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 91.54 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.

பாட வாரியாக 200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை:
 
இயற்பியல்- 124, வேதியியல்- 1,049, உயிரியல்-387, தாவரவியல்-75 விலங்கியல்-4, கணிதம்-9710, கணினி அறிவியல்-577, வணிகவியல்-819, கணக்குப்பதிவியல்-5,167, வணிகக் கணிதம்- 1,036 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர். 

இயற்பியலில் வீழ்ச்சி
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இயற்பியல் பாடத்தில் சதம் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. 
சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்:
 
அரசியல் அறிவியல் பாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளை விஞ்சிய மெட்ரிக் பள்ளிகள்:
 
2015 பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளிலேயே தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.  சுயநிதி மெட்ரிக் 97%, அரசுப் பள்ளிகள் 84% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
புதுச்சேரியில் 88.16% தேர்ச்சி:
 
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 88.16 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 1.45 சதவீதம் குறைவு.  புதுச்சேரியில் 88.16% பிளஸ் 2 தேர்ச்சி: 2 மாணவிகள் முதலிடம்  பெற்றுள்ளனர்.
 
தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (புரவிஷனல் மார்க் ஷீட்) தாங்கள் படித்த பள்ளியில் மே 14-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

Wednesday, May 6, 2015

TNPSC - Group II - 1241 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு


Probation Officer,Deputy Commercial Tax Officer, Junior Employment Officer, Assistant Inspector of Labour, Sub-Registrar, Handloom Inspector, Special Branch Assistant,Assistant Section Officer ,Assistant Inspector in Local Fund Audit, Audit Inspector ,Revenue Assistant  உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான Group II-  தேர்வு அறிவிப்பை  TNPSC வெளியிட்டுள்ளது.

Online Registration ஆரம்ப தேதி   :    30.04.2015
Online Registration முடிவு தேதி    :    29.05.2015
தேர்வு நடைபெறும் தேதி             :    26.07.2015

Group II தேர்வுகளுக்கான கையேட்டை பெற  கீழே கிளிக் செய்யவும்.


நாளை(07.05.2015) பிளஸ் 2 தேர்வு முடிவு!

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு விவரத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பாட வாரியாக மதிப்பெண்களுடன், குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலமும் மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம். இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதன்முறையாக அறிமுகமாகிறது. தலைமை ஆசிரியரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தங்கள் பள்ளிகளில், வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின், தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து பெறலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால், வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியாகும்  இணையதள  முகவரி

Saturday, May 2, 2015

நீங்கள் வாங்கப்போகும் மனை அல்லது வீட்டின் மதிப்பு என்ன?

புதிய வீட்டையோ அல்லது பழைய வீட்டையோ வாங்கப் போகிறீர்களா? குறிப்பிட்ட ஏரியாவில் வீடுகள் என்ன விலையில் விற்கப்படுகின்றன என்பதில் குழப்பமாக உள்ளதா?  இதற்கு அரசின் பத்திரப்பதிவுத் துறை http://bit.ly/1EXusC9 இணையதளம் உதவுகிறது. 


ஒரு இடத்துக்கான சந்தை வழிகாட்டி மதிப்பையும்கூடப் பத்திரப்பதிவு இணையதளத்தில் பார்க்க வழி உள்ளது.  மனையின் Guideline Value மட்டுமல்லாமல் வீடுகளுக்கும்கூடச் சந்தை வழிகாட்டி மதிப்பைப் பார்க்க இயலும்.


வீடுகள் பற்றிய மதிப்பை அறிய இந்த இணையப் பகுதியில் இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. Flat , Independent  House என இரு பிரிவுகள் உள்ளன. அடுக்குமாடி வீடு பகுதியில் வீடு எந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது, யுடிஎஸ் எனப்படும் கட்டிடத் தளப் பரப்பு எவ்வளவு, வீடு அமைந்துள்ள மொத்தச் சதுர அடி, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, எந்தத் தளத்தில் வீடு உள்ளது, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மர வகை, கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், மேற்கூரை வகை, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர் ரகக் கற்கள் வகைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதற்கான பதில்கள் தெளிவாக இருந்தால் வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பு, கட்டிடத்தின் மதிப்பு தனித்தனியாகக் கொடுக்கப்படும். இதில் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் ஆன கட்டிடத்தின் மதிப்பை மட்டுமே பார்க்க முடியும். 

இதே போலத்தான் தனி வீட்டுக்கும் கேள்விகள் தொகுத்துக் கேட்கப்படுள்ளன. வீடு அமைந்துள்ள எல்லை, வீட்டின் மொத்தப் பரப்பளாவு, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, தளம், மர பயன்பாடு, கட்டுமானப் பொருள் பயன்பாடு, மேற்கூரை வகை, உயர் ரகக் கற்கள் பயன்பாடு ஆகியவற்றுடன் சில வசதிகள் பற்றிய கேள்விகளும் கேட்கப்படுள்ளன. மின்சாரம் வசதி, சுகாதார வசதி, குடி நீர் வசதி, வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரின் விவரங்களையும் அளித்தால் வீட்டின் மதிப்பும், அந்த வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பையும் தெரிந்துகொள்ளலாம். 

இந்த மதிப்பானது நாம் ஒரு இடத்தில் வீட்டைப் பார்க்கவும், அதன் அடிப்படையில் வீடு விலை குறித்துப் பேரம் பேசவும் வீடு வாங்குவது தொடர்பான முடிவுக்கு வரவும் ஓரளவுக்கு உதவும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்தே நிலம் மற்றும் வீட்டின் மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதால், இந்த மதிப்பை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. சந்தை நிலவரம், ரியல் எஸ்டேட் நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசின் பத்திரப் பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், இது வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்களுக்கு ஓரளவு பயனுள்ளதாகவே இருக்கும். 

மேலும் விவரங்களுக்கு http://bit.ly/1EXusC9 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

Friday, May 1, 2015

சிந்தனை மாற்றங்களே உழைப்பாளர்களின் விடுதலை - மே தின வாழ்த்துக்கள் ( The May Day Greetings)



    
                              சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
                              உழந்தும் உழவே தலை.

காந்திகிராம பல்கலைகழகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள   காந்திகிராம பல்கலைக்கழகம் 2015-16 கல்வியாண்டிற்கு ’ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கும் முறையை  அறிமுகம் செய்துள்ளது 

’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை ஒருசில மத்திய பல்கலைக் கழகங்களில் மட்டுமே உள்ளது. தற்போது காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அனைத்து பாடங்களுக்கும் ’ஆன்-லைன்’ மூலம் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Online   மூலம் விண்ணப்பிக்க http://www.ruraluniv.ac.in/includes/adm15/index.html வலைத் தளத்தை அணுகவும்.

P

Wednesday, April 29, 2015

Uttama Villain Official Trailer 2 | Kamal Haasan | Ghibran




By

Gabbar Is Back - Official Trailer HD | Starring Akshay Kumar & Shruti Ha...

PAY EXPRESS ORDER FOR ALL TEMPORARY POST FOR THE MONTH OF APRIL 2015

Click Below to Download the 
Pay Express Order for All Temporary Post








Pay Express Order  for Computer Instructor will be issued on 30.04.2015
The Following Orders are published for G.O. References only.


Vocational  Instructor Pay order for Jan to March 2015 for G.O. References only.

பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் 
125வது  பிறந்த நாள் 

(29.04.1891 - 21.04.1964)

பைந்தமிழ்த் தேர்ப் பாகன்; அவனொரு 
செந்தமிழ்த்  தேனீ; சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக் 
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த  நிலா!

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்  - காய்ச்சுப் 
பாகிடை ஏறிய ருசியும் 
நனிபசு  பொழியும் பாலும் - தென்னை 
நல்கிய குளிரிள நீரும் 
இனியன என்பேன் எனினும் - தமிழை 
என்னுயிர் என்பேன் கண்டீர்.

தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் 
தமிழ்இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு  நேர்.

தமிழுக்கு  மணமென்று பேர்! - இன்பத் 
தமிழ்எங்கள்  வாழ்வுக்கு நிருமித்த ஊர்.

தமிழ்  எங்கள் இளமைக்குப்  பால்! -  இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

7243 நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ( 7243 NURSE RECRUITMENT - TMRB ANNOUNCED)



தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (MRB)   7 ஆயிரத்து 243  நர்ஸ் பணியிடங்களை  நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

Notification ஐ டவுன்லோட் செய்ய கீழே கிளிக் செய்யவும்.


மேலும் விவரங்களுக்கு  http://www.mrb.tn.gov.in வலைத்தளத்தை அணுகவும்.

Monday, April 27, 2015

PAY EXTENSION ORDER FOR RMSA POST'S ( BC & KH HEADS)

SBI PO Recruitment for 2,000 posts - Last Date 02.05.2015

  SBI RECRUITMENT


State Bank of India is looking for 2,000 Probationary Officer posts. The interested candidates who meet the eligibility criteria can submit the application forms by May 2..

Pay scale:
The starting basic pay is Rs 16,900 (with 4 increments) in the scale of Rs 14,500-600/7-18,700-700/2-20,100-800/7-25,700 applicable to Junior Management Grade Scale I. The official will also be eligible for D.A, H.R.A & C.C.A as per rules in force from time to time. The compensation per annul at Mumbai is around Rs 8,55,000. 

The breakup of monthly compensation is as under:
 
Cash Component: 36,046
Bank's contribution to PF: 1,690
Housing (Lease Rental): 29,500
Perquisites (Conveyance,Newspapers,Entertainment,House & Furniture Maintenance etc): 4,130


 In addition, the officers are also entitled to other benefits like:
 
(i) Medical Aid for self (100 per cent) and for family (75 per cent)
(ii) Home Travel Concession/Leave Fare Concession
(iii) Concessional Interest Rates for Housing/Car/Personal Loans


Eligibility:
The candidates applying for the post should have completed their graduation level exams in any discipline from a recognised university or any equivalent qualification recognized as such by the central government. Those who are in the final year/semester of their graduation may also apply provisionally, subject to the condition that, if called for interview, they will have to produce proof of having passed the graduation examination on or before September 1, 2015. Besides, the candidates should not be less than 21 years old and more than 30 years old as on April 1, 2015.



for more information,

Recruitment of Probationary Officers in State Bank of India

Important Events
Dates
Commencement of on-line registration of application
13/04/2015
Closure of on-line Registration of application
02/05/2015
Closure for editing application details
02/05/2015
Last date for printing your application
17/05/2015
Online Fee Payment
13/04/2015 to 02/05/2015

Saturday, April 25, 2015

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) வெளியீடு

 BT TO PG PROMOTION PANEL FINAL 
AS ON 01.01.2015

பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து  பதவி உயர்வு மூலம்  முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வுக்கான தேர்ந்தெடுக்கப்பட்டோர்  பட்டியல் (01.01.2015 நிலவரப்படி)  பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) திரு மு. பழனிச்சாமி அவர்களால் 23.04.2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நீக்கம், சேர்க்கை, திருத்தம் ஆகியவைகளை செய்து 13.05.2015க்குள் ஒப்படைக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய படங்களுக்கு இப்பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

PROMOTION PANEL பட்டியலை கீழே  DOWNLOAD  செய்யவும்.