Friday, December 26, 2014

How to Reduce the Size of PDF file?

PDF கோப்புகளின்  அளவை குறைக்க வேண்டுமா? 

கவலையே படாதீங்க. கீழே இருக்குற வழிமுறைகளை Use பண்ணுங்க. Free ஆயிடுங்க.

1. PDF fileகளோட sizeஐ  குறைக்க  நெறைய வழிகள் இருக்கு. ஆனாலும்   http://www.primopdf.com/ இணையத்தளத்துல  ப்ரீயா கெடைக்குற  PrimoPDF சாப்ட்வேர் ரொம்ப  பயனுள்ளதா இருக்கும்.
(ரொம்ப  Advanceஆன Nitro Pro சாப்ட்வேர் வேணும்னா நீங்க trial version டவுன்லோட் பண்ணி பயன்படுத்தலாம். பிடிச்சிருந்தா purchase பண்ணிக்கலாம்.)

2. நீங்க   http://www.primopdf.com/   site ல PrimoPDF சாப்ட்வேர் டவுன்லோட் பண்ண முடியலைன்னா இந்த primopdf.exe லின்க்ல டவுன்லோட்  பண்ணுங்க .

3. PrimoPDF.exe file ஐ  Install பண்ணுங்க.

Step I:  Open the  PDF  file which you want to reduce the size.  (in any pdf readers like adobe reader, foxit reader).


Step II:  Select  File--> Print


Step III:  Now the Printer Dialog box appeared on the screen.  Select the printer name as PrimoPDF in the list box.


Step IV:  Then select properties



Step V:  Now a dialog box appeared.   In the  paper/quality tab Click Advanced button.

Step VI:  In Graphics Section, Click the Print Quality List box then choose the lesser dbi (like 300dpi or 144 dpi).  Then 
Click OK  ( it will close 5th dialog)
Click OK ( it will close 4th dialog)
Click OK ( it will close  third dialog)  and wait for a moment. 
 
Step VII:  Now the PrimoPDF dialogbox window appeared on the screen. in this window click Create PDF button.


Step VIII:  Now the Save As dialog box appeared.  Type the file name (for reduced PDF file) and click Save  button.

 இந்த வழிமுறைகளை PDF ஆ  டவுன்லோட்  பண்ணும்னா இதை  Procedure for Reducing the PDF file .pdf  கிளிக்  பண்ணுங்க.

Wednesday, December 24, 2014

K BALACHANDAR ( 09.07.1930 - 23.12.2014 )

 
மனதில் உறுதி வேண்டும் 
வார்த்தையிலே தெளிவும் வேண்டும் 
உணர்ச்சி என்பது வேண்டும் 
ஒளிபடைத்த பார்வை வேண்டும்  ஞானதீபம் ஏற்ற வேண்டும்

இடைவரும் பலவிதத் தடைகளை  
தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும் 
இலக்கியம் பெண்மைக்கு இலக்கணம் நீ என  
யாரும் போற்ற வேண்டும்.

மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்  
 மானம் காக்கும் மாந்தர் யார்க்கும் மாலை வாங்கி போடுவோம்.
வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி  
நாடும் ஏடும் பேச வேண்டும்.

சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை
  பூமி பார்க்க வேண்டும்.
தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் 
பாடல் கேட்க வேண்டும்.

பெண்கள் கூட்டம் பேய்கள் என்று  
பாடம்  சொன்ன சித்தர்களும் 
ஈன்ற தாயும் பெண்மை என்று  
எண்ணிடாத பித்தர்களே.
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்.







தஞ்சாவூர் மாவட்டம்  நன்னிலத்தில்  09.07.1930ல்  தமிழ்  பிராமண குடும்பத்தில்  பிறந்ததவர் கைலாசம் பாலசந்தர்.  அண்ணாமலை  பல்கலைகழகத்தில்  படித்த  உயிரியல்  பட்டதாரியான  இவர்  1949ல்  திருவாரூர் முத்துப்பேட்டையில்  பள்ளி  ஆசிரியராக  தனது கேரியரை துவக்கினார்.

1950ல்  சென்னையில் உள்ள  Account General அலுவலகத்தில்  கிளார்க் ஆக பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில்  பல்வேறு மேடை நாடகங்களுக்கு கதை வசனம்  எழுதியும் , இயக்கியும்  தனது  கலைப் பயணத்தை  துவக்கிய  பாலச்சந்தர்  அவர்கள் எம்.ஜி.ஆர்  அவர்களின்  தெய்வத் தாய்  படத்திற்கு  கதை  வசனம்  எழுதி உள்ளார். 

திரைத்துறையில்  1965ம்  ஆண்டு  வெளியான  நீர்க்குமிழி  இவர் இயக்கிய  முதல் படமாகும் . நாகேஷ்  அவர்கள்  இதில்  கதாநாயகனாக நடித்தார்.

இவருடைய  பெரும்பாலான  படங்களில் , மனித உறவு  முறைகளுக்கு  இடையிலான  சிக்கல்கள் , சமூக பிரச்சினைகள்  ஆகியவையே  கருப்பொருளாய் விளங்கின .

சர்வர் சுந்தரம், பாமா  விஜயம், தில்லு முள்ளு ஆகியன சிறந்த  நகைச்சுவை கலந்த  குடும்ப  சித்திரங்களாகும் .

 

அபூர்வ ராகங்கள் , புன்னகை மன்னன் , எதிர்நீச்சல் , வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி, சிந்து  பைரவி, அவள்  ஒரு  தொடர்கதை, புது புது அர்த்தங்கள், வெள்ளி  விழா, அரங்கேற்றம் , நிழல்  நிஜமாகிறது, மனதில் உறுதி  வேண்டும் முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். 



தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி,  ஒரு வீடு இரு வாசல், கல்கி என்று எத்தனையோ சமுக அக்கறையுள்ள கதைகளை திரைத்துறையில் புகுத்தியவர் கே.பி. 






சிவாஜிராவ்  ஆக  இருந்தவரை  ரஜினிகாந்த்  ஆக  அபூர்வ  ராகங்கள்  படத்தில்  அறிமுகப்  படுத்தியவர். இவரது இயக்கத்தில் உருவான படங்கள் வழக்கமான சினிமா பாணியிலிருந்து சற்று வித்தியாசம் பெற்றிருந்தன. நாடகம் போன்ற அமைக்கப்பட்ட காட்சிகள் இவர் படங்களில் அதிக அளவில் காணப்பட்டாலும், முத்திரை பதிக்கும் வசனங்கள் முழுப்படத்திலும் பரவி இருக்கும்.



 அழுத்தமான கதையை மட்டும் நம்பியே இவரது படைப்புகள் படைக்கப்பட்டதால், பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களை இவர் அவரது படங்களில் தேர்வு செய்தது இல்லை. குறிப்பாக இவர் இயக்கிய எந்த படத்திலும் நடிகர் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை அதேபோல் நடிகர் சிவாஜியும் கூட ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். 

இவரது ஆரம்பக்கட்டம் தொடங்கி பெரும்பாலான படங்களில் நடிகர் நாகேஷ் மட்டும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தார். அதிலும் பாலச்சந்தர் எழுதிய கதையில் உருவான திரைப்படமான சர்வர் சுந்தரம் தான் நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்கே அழைத்து சென்றது.

நகைச்சுவைக்கான முக்கியத் துவத்தை அளித்த இதே இயக்குனர் பாலச்சந்தர், குடும்பச் சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமுகப் பிரச்சனைகள் என்று பல்வேறு தரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் அவர் கையாண்டார். 

துவக்கத்தில் மேடை நாடகங்களுக்கு கதைகள் எழுதியும், அவற்றை இயக்கம் செய்திருந்த கே.பாலச்சந்தர், திரைப்பட இயக்குனராக வெற்றி பின்பும் கூட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியுள்ளார். 

தொலைக்காட்சிகளில் வெளியாகிய அவரது தொடர் நாடகங்கள் கூட தனிமுத்திரை பதித்து அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரைகளில் தற்போது பிரபலாமாக இல்ல நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் என்னும் முறையையும் இவர் தான் அறிமுகம் செய்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தனது கலை சேவையை தொடர விரும்பிய அவர், அதன் மூலமாகவும் பலருக்கும் பலவிதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 

கலை உலகில் போற்றப்படுபவர்களை பின்தொடராமல், கலையை, அவர் போற்றிய காரணத்தினால் தான் கலைத்துறை கொண்டாடும் இயக்குனராக மக்கள் மனதில்  என்றும்  நீங்காமல்  இடம்  பெற்றிருக்கிறார் கே.பாலச்சந்தர்.



 

Thursday, December 18, 2014

Your Attention Please...




 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 16.12.2014அன்று  ராணுவ பள்ளியில் தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 132 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அந்நாட்டு அரசு தூக்கு தண்டனைக்கு விதித்திருந்த தடையை நீக்கி உள்ளது

சிட்னியில் லிண்ட் சாக்லேட் கபே பகுதியில் 15.12.2014 அன்று பயங்கரவாதி நுழைந்து, அங்கிருந்தவர்களை பிணைகைதிகளாக பிடித்து வைத்த சம்பவமும் சிந்திக்க வைக்கிறது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம்  கிராமத்தை  சேர்ந்த 6ம் வகுப்பு  பயிலும்  பிஞ்சு குழந்தை அதே  பள்ளியில்  பயிலும்  10ம் வகுப்பு மாணவன்  ஒருவனால்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்பட்டு  கொடூரமான முறையில்  கொல்லப்பட்டுள்ளார் .

இவையெல்லாம்  இந்த 2 நாட்களில்  நாம் படித்த செய்திகள். 

இவை மட்டுமா?

தினந்தோறும்  வழியில் செல்லும்  பெண்களிடம்  நகை பறிப்பு .

வீட்டில்  தனியாக  இருக்கும் பெண்களை பயமுறுத்தி , பாலியல்  பலாத்காரம் செய்து , கொலை செய்து  நகைகள்  கொள்ளை.

ஏ.டி.எம் களில்  கொள்ளை 

60 வயதை கடந்த  கிழவர்கள்  கூட  5 வயது குழந்தைகளை பலாத்காரம் செய்தல்.

மர்மக்  கொலைகள் .

குடிப்பது  பரவலாக்கப் பட்ட சாலைகள்.

கும்பலாக சேர்ந்து  தனியாக  சிக்கும்  பெண்களை பலாத்காரம் செய்தல்.

கருணை இல்லம் ,  அனாதை  இல்லங்களில் தங்கி கல்வி பயிலும்  ஆதரவற்ற  குழந்தைகளை  அங்கு பாதுகாப்பில் இருப்பவர்களே பலாத்காரம் செய்தல்.

ஆசிரியர் பணிக்கு  தவறி  வந்த சிலர்  அவர்களிடம்  பயிலும்  மாணவிகளிடமே  செக்ஸ் தொல்லை.

மாணவர்கள்  ஆசிரியர்களையே  ஆள்  வைத்து அடித்தல்.

மாணவர் விடுதிகளில்  ஓரினச்  சேர்க்கைக்கு  வலியுறுத்தும், கட்டாயப் படுத்தும் , பழக்கப் படுத்தும்  சில  சமூக  விரோத  மாணவ கும்பல்கள். அப்படி இணங்காதவனை செப்டிக் தொட்டியில்  தள்ளி கொலை  செய்த  மாணவர்கள்.

இப்ப சொல்லுங்க நீங்க என்ன நினைக்கிறீங்க?

மேல  சொன்ன  யாரா  இருந்தாலும்  அவங்க எல்லாமே  ஸ்கூல் ல  படிச்சவங்க தான் .

அரசு  சார்பா,   இந்த  சமூகத்தை  சரியான  வழியில்  செலுத்தவும் , நல்ல  குணம்  கொண்ட  மாணவர்களை  உருவாக்கவும் , தப்பான எண்ணங்கள், பழக்கங்கள் இருக்குற  மாணவர்களை  அறிவுரை சொல்லி திருத்தவும், எதிர் காலத்துல  வரக் கூடிய தலைமுறை சோம்பேறியா இல்லாம , ஏமாத்துக்காரனா இல்லாம , கடின உழைப்பாளியா, பொறுப்பானவனா, சமூகத்தோட பாதுகாப்புக்கு தானும் ஒரு அங்கமா இருக்குறவனா உருவாக்குற  கடமை  யாருக்குங்க  இருக்கு?

ஆசிரியர்களுக்கு மட்டும் தாங்க  இருக்கு .

வேற  எந்த  துறைக்கும்  இந்த  பொறுப்பு  இல்லேங்க.  வேணும்னா  இவங்க எல்லாம் தப்பு பண்ணிட்டு  வந்தா  தண்டனை  கொடுக்கத் தான் இருக்கு.

நீங்க  என்ன  சப்ஜெக்ட்  வேணும்னாலும்  எடுங்க . ஆனா  ஒரு  மாணவன் நல்லவனா, பொறுப்பானவனா, சமுதாயத்துக்கு  பயனுள்ளவனா  அவனை மாத்த என்ன  சொல்லிக் கொடுக்க  முடியுமோ  அதையும்  சொல்லிக் கொடுங்க.

ஸ்கூல் ல அவனோட  நிஜமான  ரோல் மாடலா இருங்க. அதுக்கு  முக்கியமானது  நீங்க கோவப்  படக்கூடாது. உங்க  நாவில்  இருந்து கடினமான  வார்த்தைகள்  வரக் கூடாது. நீங்க  ஸ்கூல் ல எந்த  மதம்  ஜாதி சார்பாகவும் இருக்கக் கூடாது . 

மாணவன் நோட் புக் ல  ஜாதி  கட்சி  கொடிங்க  வரஞ்சு இருக்குறதையும், சட்டைக்குள்ள ஜாதி  பனியன் போட்டு  வரதையும், புத்தகப்  பைக்குள்ள  செல்போன் மறைச்சு வச்சிட்டு வரதையும், சின்ன சின்ன கத்திங்க  வச்சிருக்குறதையும், இண்டர்வல் டைம் ல  சிகரெட்  பிடிக்கிறது, ஒயிட்னர் யூஸ் பண்ணி  போதை வரவைக்கிறது, கும்பலா சேர்ந்து பீர் குடிக்கிறது, செல்போன் ல போர்ன் வீடியோஸ் பாக்குறது, டவுன் பஸ்ல கேங் வார் நடத்துறது   இப்படி எத்தனையோ விதமா கெட்டுப் பொய் இருந்தாலும்  அவனை  மனுஷனாகுற பொறுப்பு என்னவோ ஆசிரியர்களுக்கு தான் இருக்கு.

ஆசிரியர்களால்  தான்  சமூகம்  குறைந்த  பட்சம்  மிருக  கூட்டமா  மாறாமலாவது இருக்கும்.

நம்ம சந்ததியும்  நாளை  இந்த சமூகத்துல  தானே  வாழணும் ?









Thought Of the Day

சின்ன சின்ன செலவுகளை 
குறையுங்கள் 
காரணம் ,எவ்வளவு 
பெரிய கப்பலையும் 
சிறிய  ஓட்டை மூழ்கடித்துவிடும்

                                                       -   பெஞ்சமின்  பிராங்க்ளின்


GPF ACCOUNT STATEMENT AND MOBILE NUMBER REGISTRATION

 GPF ACCOUNT MOBILE NUMBER REGISTRATION


நீங்க GPF ACCOUNT HOLDER ஆ?  அப்படினா  http://agae.tn.nic.in/ வெப்சைட்  ல  உங்க மொபைல் நம்பர் ஐ GPS SUBSCRIBERS - Please Register your mobile number ன்னு  இருக்குற  இந்த லிங்க் ல போயிட்டு அப்டேட்  பண்ணுங்க.

Wednesday, December 17, 2014

Government Museum Chennai

 Government Museum Chennai

 ஆங்கில கிழக்கிந்திய  கம்பெனியின் மெட்ராஸ் பிரெசிடென்சி கவர்னர்  சர் ஹென்றி பாடிங்கர் என்பவரால் 1846ம்  ஆண்டு உருவாக்கப் பட்டது  சென்னை அரசு  அருங்காட்சியகம்  ஆகும்.

43 ஏக்கர்  பரப்பளவில் பரந்து விரிந்துள்ள  அருங்காட்சியகத்தில்  Archaeology, Anthropology, Art, Numismaticsm Botany, Zoology, Geology, Children's Museum, Chemical Conservation என பல பிரிவுகளில்   காண்பதற்கு  அரிய  பல பொக்கிஷங்கள் உள்ளன.

உங்களால்   சென்னைக்கு சென்று அருங்காட்சியகத்தை பார்வையிட  நேரம் செலவிட   இயலவில்லையா? கவலை விடுங்கள். 

இப்போது  என்ற http://chennaimuseum360.org/ இணையத்தள  முகவரியில்  உங்கள்  வீட்டிலிருந்தே  3D முறையில்  மொத்த  அருங்காட்சியகத்தையும்  கண்டு களிக்கலாம். உங்க  குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த மிஸ் பண்ணாதிங்க.

Sunday, December 14, 2014

Jurassic World - Official Trailer (HD)


ஜூராசிக்  பார்க் வரிசையில் 4ஆவதாக  வெளி வரும் பிரம்மாண்டமான  திரைப்படம் ஜுராசிக் வேர்ல்ட்.  ஜுராசிக் பார்க் 3வது பாகம் 2001ஆம்  ஆண்டு வெளிவந்தது. இப்போது மேலும்  அதிக பொருட்செலவில் 3D science fiction adventure படமாக  2015 ஜுன்  12ல்  வெளிவரவுள்ள  ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கு  இப்போதே ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.  youtubeல் இதுவரை 4 1/2 கோடி  பேர்  இதன்  trailor ஐ  ரசித்துள்ளனர்.


TNPSC Gr. IV Hall Ticket & Group II Rank



21.12.2014 அன்று  நடைபெறவுள்ள  டி.என்.பி.எஸ்.சி குரூப் 4  தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்
  டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப்4 தேர்வு வரும் 21ம் தேதி ஞாயிறு காலை நடைபெற உள்ளது. 4,963 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத 12.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கானஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள், நிராகரிப்பு பட்டியலில் பெயர் உள்ளதா எனசரி பார்க்க வேண்டும். ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் 1800 429 1002 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.



29.06.2014 அன்று  நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ  தேர்வுகளுக்கான மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியல் 
 

Saturday, December 13, 2014

CPS Enrolment Date Extended for Govt Employees



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் CPSல்  இணைய 28.02.2015 வரை கால அவகாசம் - தமிழக அரசு உத்தரவு

 CPS Joining Date Extended G.O.