தி.மு.க.வின் 144 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 123 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
Click Here to download DMK Election Manifesto.pdf.(59 MB)
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
- மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் - டாஸ்மாக் நிறுவனம் கலைப்பு - டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி.
- மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
- ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும்
- நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும்
- விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்
- அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.
- கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3,500 வழங்கப்படும் .
- நெல் கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
- விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
- சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்
- ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.
- மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
- மீனவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை.
- மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5000 தரப்படும்.
- ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.
- வெள்ள சேதங்களை தடுக்க 5000 கோடியில் திட்டம்
- ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும் .
- தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்
- வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி
- முதியோர் உதவித்தொகை ரூ.1300 ஆக உயர்த்தப்படும்.
- தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை
- மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
- மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்
- விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கப்படும்
- மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்
- தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.
- தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும்
- பத்திரிக்கையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்
- பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.
- தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.
- மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை
- பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.
- 3 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் .
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
- அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
- முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை.
- தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் 16 லட்சம் மாணவர்களுக்கு 3ஜி,4ஜி தொழில்நுட்பத்தில் மாதம் 10 ஜிபி பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட இணைய இணைப்புக்கான டாங்கிளுடன் லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.
- மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை.
- படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை
- பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.
- சென்னை முதல் ஓசூர் வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்.
- மதுரை முதல் தூத்துகுடி வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்.
- சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.
- நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.
- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.
- 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படும்.
- மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்.