அரசுப் பணியாளர்களுக்கு தற்போது மாதம் தோறும் ரூபாய் 30/- FBF தொகையாக பிடித்தம் செய்யப் படுகிறது. ஓய்வு பெறும்போது முதிர்வுத் தொகை வழங்கப்படும். பணியிலிருக்கும் போதே பணியாளர் மரணமுற்றால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூபாய் 1,50,000/- வழங்கப்படும்.
தற்போது முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இனி மாதம் தோறும் ரூபாய் 60/- பிடித்தம் செய்யப்படும் . அரசுப் பணியாளர் பணியிலிருக்கும் போது மரணமடைய நேர்ந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூபாய் 3,00,000/- வழங்கப்படும். இது 01.02.2016 முதல் அமலாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசாணையை டவுன்லோட் செய்ய,
No comments:
Post a Comment