இன்ஜினியரிங் ‘கட்-ஆப்’ உயர்வு
மெடிக்கல் ‘கட்-ஆப்’ குறைவு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு ’சென்டம்’ எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ’கட் - ஆப்’
அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.இதேபோல் இயற்பியல், வேதியியல் மற்றும்
உயிரியலில், ’சென்டம்’ எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்புகளுக்கான ’கட் -
ஆப்’ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 9,710 பேர்
’சென்டம்’ எடுத்துள்ளனர். இதேபோல் 198 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 15
ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் இந்த ஆண்டு இன்ஜினியரிங்
’கட் - ஆப்’ மதிப்பெண் 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர
வாய்ப்புள்ளது. இதனால் கடந்த ஆண்டு ’கட் - ஆப்’ மதிப்பெண்ணை விட அதிகம்
இருந்தால் மட்டுமே கடந்த ஆண்டு பட்டியலில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர
முடியும்.
இதேபோல் உயிரியல், இயற்பியல், விலங்கியல் போன்றவற்றில் ’சென்டம்’
எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்பு ’கட் - ஆப்’
மதிப்பெண் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஆண்டு அதிக
மதிப்பெண் பெற்று தற்போது தேவைப்படும் ’கட் - ஆப்’ வைத்திருப்பவர்கள் சுமார் 800 பேர் வரை உள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டி போடுகிறார்களா
என்பதை வைத்தே இந்த ஆண்டு மாணவர்களுக்கு ’சீட்’ கிடைக்கும். இந்த ஆண்டு இயற்பியலில் ’சென்டம்’ எண்ணிக்கை குறைந்துள்ளதால் இயற்பியல் பாடமே மதிப்பெண்
தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.