Sunday, October 11, 2015

மனோரமா எனும் மனோரஞ்சிதப்பூ


'ஆச்சி' மனோரமா

                                 26.05.1937 - 10.10.2015


தனது வாழ்நாளில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், சிங்களம் ஆகிய 6 மொழிகளில் 1,300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

1000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்தவர்.

300க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியவர்.

தமிழ்த் திரையுலகில் 5 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன் நடித்த புகழ் பெற்றவர்.

 
ஆச்சிஎன்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமா இவ்வுலகை விட்டு மறைந்தார்.


5 முதல்வர்களுடன் 

தனது திரை வாழ்க்கையில் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் இணைந்து மேடை நாடகங்களில் பங்கு பெற்றிருக்கிறார்.  

 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' , "வேலைக்காரி'  உள்ளிட்ட சில நாடகங்களில் அண்ணாவுடனும்,  'உதயசூரியன்'  நாடகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு  கதாநாயகியாகவும் நடித்தார். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

'அன்னமிட்டகை' உள்பட பல படங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடனும், 'லவகுசா' படத்தில் என்.டி.ராமராவுடனும் மனோரமா நடித்தார். இந்த ஐந்து பேரும் பிற்காலத்தில் முதல்-அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.


விருதுகள் 

  • 1300 படங்களிற்கு மேல் நடித்து சாதனை புரிந்ததால் கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றார். 

  • 1989 ம் ஆண்டு புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார்.

  • 2002 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

  • மனோரமாவின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு "கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது.
பேபி சாந்தா 

மனோரமா 26.05.1937ல் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில்  காசி கிழக்குடையார் - ராமாமிர்தம் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்

மனோரமாவின் தந்தை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் சாலை காண்ட்ராக்டராக இருந்தார். அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது.  இந்த நிலையில் மனோரமாவின் தாயார், தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்.

இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியது.  இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை.

மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள். அதன் பின்னர் மனோரமாவை அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்.

இளமையில் வறுமை

மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள். அப்போது இரண்டு வயது சிறுமியாக இருந்த மனோரமா, 'திருநீலகண்டர்' படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய 'உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே' என்ற பாடலை பாடுவார்.

இதுபற்றி மனோரமாவின் நினைவுகள் :-

'எனக்கு இரண்டு வயது இருக்கும். மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை, ஓரளவு நயத்தோடு பாடினால் எந்த தாய்க்குதான் மகிழ்ச்சி பொங்காது!

தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன் முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அன்று முதல் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே அழைத்து வைத்துக்கொண்டு, 'பாப்பா! ஒரு பாட்டு பாடு' என்று சொல்வார்கள். நானும் பாடுவேன்.

படிப்படியாக இந்த 'பாடும் வித்தை' எப்படியோ என்னை விடாமல் ஒட்டிக்கொண்டது. மற்றவர்களுக்கு பாடிக்காட்டி, பாடிக்காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்து விட்டது.'



அதன் பிறகு மனோரமாவின் பாடல் நிகழ்ச்சி, பல வீடுகளின் விசேஷங்களில் முக்கிய இடம் பிடித்தது.

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு முறை `பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாட்டை, 'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாட்டின் மெட்டில் பாடி ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற்றார்.

அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூட விழாக்கள், சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மனோரமாவை அழைத்துச்சென்று பாட வைத்தார்கள்.

பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்பியதும், மனோரமா சினிமா 'டூரிங்' கொட்டகைக்கு சென்று பலகாரம் விற்பார்.

அங்கே பலகாரம் விற்பதுடன், எந்த காட்சியிலும், எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்கும் இலவச அனுமதியும் கிடைத்தது. 'பாட்டுப் பாடுற பொண்ணு படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள். அதனால் மனோரமாவும் இடை, இடையே தியேட்டருக்குள் சென்று பாடல் காட்சிகளை பார்த்து விட்டு வருவார்.

இப்படியே தியேட்டரில் படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டும் அவருடைய இசை ஞானம் வளர்ந்தது.


சில வருடங்களில் மனோரமாவின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, பள்ளத்தூரில் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ள மனோரமாவை அனுப்பி வைத்தார்.


மனோரமாவும், அவரது தாயாரும் வறுமையில் கஷ்டப்பட்டு வந்த நேரத்திலும், மனோரமாவின் இலவச பாட்டுக் கச்சேரி அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் நடந்து கொண்டு இருந்தது.

மனோரமா உருவானார்


இந்த நிலையில் கோட்டையூரில் ஏகாதசி நாள் விழா நடந்தது. அன்றைய தினம் இரவு 'அந்தமான் காதலி' என்ற நாடகம் நடந்தது. அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்கு பாட வராது. எனவே, அவருக்காக பாடவும், நாடகத்திற்கு இடையே நடனம் ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு மனோரமாவுக்கு கிடைத்தது. வறுமையுடன் போராடிக் கொண்டிருந்த மனோரமா, நாடக நடிகையானார்.


இந்த நாடகத்தில் பணிபுரிந்த டைரக்டர் சுப்பிரமணியன், உதவியாளர் திருவேங்கடம், ஆர்மோனிய வித்வான் தியாகராசன் ஆகியோர் வெகுவாக பாராட்டியதோடு, மனோரமா என்ற பெயரையும் வைத்தார்கள்.

கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீசியனாக இருந்த பால்ராஜ் என்பவர், மனோரமாவின் திறமையை பார்த்து வியந்தார். புதுக்கோட்டையில் நடந்த 'விதியின் விசித்திரம்' என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.

வெறுமனே பாடியும், நடனமாடியும் வந்த மனோரமா, நாடக நடிகையானார். அதன் பிறகு அவர்கள் பசிக்கவலையும் மெல்ல, மெல்ல மறைந்தது.

அதன் பின்னர், எலக்ட்ரீசியன் பால்ராஜ் எழுதி தயாரித்த 'யார் மகன்?'  என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். சித்தன்னவாசலில் நடந்த இந்த நாடகத்திற்கு டைரக்டர் 'வீணை' எஸ்.பாலசந்தர் தலைமை தாங்கினார்.

வஞ்சிக்கப்பட்ட  காதல் 

சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ்.எம்.ராமநாதன், மனோரமாவை காதலித்தார். அந்தக் காதலை மனோரமா ஏற்றுக் கொண்டார்.

மனோரமா - ராமநாதன் திருமணம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.


மனோரமா - ராமநாதன் குடும்ப வாழ்க்கை, ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. கர்ப்பிணியான மனோரமா, 9 வது மாத இறுதியில், பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் சென்றார்.  குழந்தை பிறந்தது. அவர்தான் 'உதிரிப்பூக்கள்'  நடிகர் பூபதி. குழந்தை பிறந்த 15' வது நாளில் மனோரமா வீட்டுக்கு வந்தார் கணவர்  ராமநாதன்.

பச்சை உடம்போடு பலவீனமாக இருந்த மனோரமாவை மீண்டும் வந்து நாடகத்தில் நடிக்கும்படி வற்புறுத்தினார். கையில் பிஞ்சுக் குழந்தையுடன் இருந்த மனோரமா, 'குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆகிறது. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்' என்றார்.

மனைவி, மகன் பற்றிய சிந்தனையே இல்லாமல், தனது நாடகக் கம்பெனி பற்றிய எண்ணம் மட்டுமே கொண்டிருந்த ராமநாதன், மனோரமா மீது கோபம் கொண்டார். அன்று திரும்பிச் சென்றவர் பிறகு திரும்பி வரவில்லை.  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் கணவர் ராமநாதன்.  மனோரமாவின் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. 

இதுபற்றி மனோரமா நினைவுகள் :-

'நான் கொண்டது உண்மையான காதல். அவர் மனமும் அவ்வாறே இருக்கும் என்று நம்பினேன். எங்கள் பிரிவு தற்காலிகமானது என்று நினைத்தேன். ஆனால் என் நம்பிக்கை வீணாயிற்று. இடி விழுந்தது போல, ஒரு நாள் அவரிடமிருந்து 'விவாகரத்து நோட்டீஸ்' வந்தது. அந்த நோட்டீஸ், எனது நம்பிக்கையையும், எதிர்காலம் பற்றிய கனவுகளையும் பொடிப்பொடியாக்கி விட்டது. சோகச் சுமையை தாங்கிப் பழக்கப்பட்ட நான், இதையும் தாங்கிக் கொண்டேன். அவருடைய காதல் நாடகத்தில் நான் ஒரு ஏமாந்த கதாப்பாத்திரம்!'

எதிர்நீச்சல்


ராம பாலகான சபாவில் இருந்து பிரிந்து வந்த நடிகர் முத்துராமன், 'குலதெய்வம்' ராஜகோபால் ஆகியோர், 'கலைமணி நாடக சபா' என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவில் 'புயலுக்குப்பின்' என்ற நாடகத்தில் நடித்தார்

பிறகு, 'வைரம் நாடக சபா'வில் நடித்துக் கொண்டிருந்தபோது, எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தின் 'மணிமகுடம்' நாடகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக மனோரமா சென்னை வந்தார்.

அதையடுத்து கே.ஆர்.ராமசாமியின் நாடகங்களிலும், 'பிரண்டு' ராமசாமியின் நாடக மன்றத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

வெள்ளித்திரை பயணம்:- மாலையிட்ட மங்கை

நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் வெளிவந்த கவிஞர் கண்ணதாசனின்  "மாலையிட்ட மங்கை'  என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். முதன்முதலில் ஆச்சி கதாநாயகியாக   நடித்த படம் 'கொஞ்சும் குமரி'.


நாகேஷ் - மனோரமா 

1960- 69 களில் நாகேஷ் - மனோரமா ஜோடி நகைச்சுவையில் சிறந்து விளங்கியது. 1970 - 80 களில் சோ மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவருடன் இணைந்து நடித்த ஆச்சி நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தார்.

தில்லானா மோகனாம்பாள் - ஜில் ஜில் ரமாமணி 

"தில்லானா மோகனம்பாள்', மனோரமாவின் நடிப்பில் ஒரு மணி மகுடம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டரில் வரும் மனோரமாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. டி.எஸ்.பாலையா, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு முன் நடிப்பதால் முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு மனோரமா தயங்கியுள்ளார். பின் இயக்குநர் தைரியம் ஊட்டி இவரை நடிக்க வைத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப்பேரொளி பத்மினி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் அவர்களை விடவும் அதிகமாக ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது மனோரமாவின் ஜில் ஜில் ரமாமணி வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்சாரம் அது மின்சாரம் - கண்ணம்மா 

குடும்ப சித்திரமாக வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணம்மா என்ற வேலைக்காரியாய் நடித்து அசத்தியிருப்பார். விசு, ரகுவரன், லட்சுமி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் மனோரமா பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க பாடுபடுவார். இந்தப் படத்தில் இவர் பேசிய "கம்முன்னு கிட" வசனம் மிகவும் புகழ்பெற்றது.


நடிகன் - பேபி

நடிகன் படத்தில் மனோரமா நடித்த பேபி அம்மா கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒரு பாத்திரமாக திகழ்கிறது. சத்யராஜ், குஷ்பூ இருவருடனும் இணைந்து மனோரமா நடித்த நடிகன் திரைப்படம், மனோரமாவிற்கு மிகவும் பிடித்த ஒரு வேடம் என்று சமீபத்திய பேட்டியில் கூட அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் 2 பெண்களின் கார்டியனாக நடித்த மனோரமா நகைச்சுவையில் பின்னியிருப்பார்.

சின்னக் கவுண்டர் - ஆத்தா 

சின்னக்கவுண்டர் படத்தில் ஆத்தாக் கிழவியாக நடித்து அசத்தியிருந்தார் மனோரமா. விஜயகாந்தின் அம்மாவாக இந்தப் படத்தில் நடித்த மனோரமா தெற்றுப் பல்கள் வைத்து நடித்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் அவரின் சிரிப்பு குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகத் திகழ்ந்தது. சின்னக்கவுண்டர் படமும் மனோரமாவிற்கு மிகவும் பிடித்த படமென்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு வாசல் 

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. நிறைய படங்களில் அவர் நடித்திருந்தாலும் கிழக்கு வாசல் திரைப்படம் அவரின் அம்மா வேடத்தை நன்றாக பிரதிபலித்தது. மகன் கார்த்திக்காக குஷ்பூவை பெண் கேட்டு செல்லும் காட்சி மற்றும் குஷ்பூவின் வீட்டில் அவர் படும் அவமானங்கள் ஆகியவை ரசிகர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது.

சின்னத் தம்பி 

சின்னத் தம்பி படத்தில் பிரபுவின் அம்மாவாக நடிப்பில் கலக்கியிருப்பார்.இந்தப் படத்தில் மனோரமா ஏற்று நடித்த கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஏராளமான படங்களில் மனோரமா கண்ணம்மா என்னும் பெயரிலேயே நடித்திருக்கிறார். இதைத்தவிர அண்ணாமலை, மே மாதம், பாட்டி சொல்லைத் தட்டாதே, சிங்காரவேலன், அருணாசலம், மறுமலர்ச்சி, புதிய பாதை, அபூர்வ சகோதரர்கள், மன்னன் போன்ற திரைப்படங்களும் ஆச்சியின் நடிப்பில் குறிப்பிடத் தகுந்த படங்கள் ஆகும்.

பாடகியாக 

சிறந்த நடிகை மட்டுமன்று நல்ல பாடகியாகவும் திகழ்ந்த ஆச்சி சுமார் 300 க்கும் அதிகமான பாடல்களை தனது திரையுலக வாழ்க்கையில் பாடியிருக்கிறார். 'மகளே உன் சமத்து' படத்தில் மனோரமா தனது சொந்தக் குரலில் 'தாத்தா தாத்தா பொடி கொடு' என்ற பாடலை பாடி இருக்கிறார். அதன் பின்னர் பொம்மலாட்டம் படத்தில் 'வா வாத்தியாரே ஊட்டாண்ட நீ வராங்கட்டி நான் உடமாட்டேன் ' என்ற பாடலையும், 'பாட்டிச் சொல்லைத் தட்டாதே' படத்தில் 'டில்லிக்கு ராஜா ஆனாலும் பாட்டிச் சொல்லைத் தட்டாதே' என்ற பாடலையும் பாடினார். 'மே மாதம்' படத்தில் `மெட்ராசை சுத்திப் பார்க்க போறேன்' என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின்  புகழஞ்சலி

மனோரமா ஒரு மனோரஞ்சிதப் பூ. மனோரஞ்சிதப் பூவுக்குத்தான் ஒரு வித்தியாசமான குணநலம் உண்டு. அதாவது, நாம் எந்த பூவை மனதில் நினைத்துக் கொண்டு மனோஞ்சித பூவை நுகர்கிறோமோ, அது அந்த பூவின் வாசனத்தை அப்படியே வெளிப்படுத்தும். அதேபோல், மனோரமா, நாம் ஒரு நகைச்சுவை நடிகையாக பார்த்தோமானால், அவர் அதைப் போலவே பளிச்சிடுவார். ஒரு குணச்சித்திர நடிகையாக பார்த்தால், அதைப்போல் அப்படியே பளிச்சிடுவார். இதுபோல், எந்த மாதிரி அவரைப் பார்த்தாலும், அந்த பாத்திரமாகவே அவர் காட்சியளிப்பார்.

ஜனவரி 19 முதல் 'ஸ்டிரைக்': அரசு ஊழியர் சங்கம்



"கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார். 

"தமிழக அரசு துறைகளில், இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பாமல், அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பணிச்சுமை, மன அழுத்தம், அதிகாரிகளின் அச்சுறுத்தல் போன்றவை காரணமாக, ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும், 3.5 லட்சம் ஊழியர்களிடம், அரசு, அடக்குமுறையை கையாள்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்"  என்பது உட்பட, பல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, டிச., 22ல், முதல்வரை சந்திக்க உள்ளோம். அதற்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை எனில், வரும், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, October 9, 2015

50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை: 2 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு


இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, வகுப்புகளை புறக்கணித்ததால், தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை; பல தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. 

காலை, 8:00 மணிக்கே பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், தற்செயல் விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டு, கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
 
சென்னை மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், வேன் ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக ஆர்ப்பாட்டத்துக்கு சென்றனர். தலைமை ஆசிரியர்கள் மட்டும், பணிகளை கவனித்தனர்; பல பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.மற்ற மாவட்டங்களில், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், 50 சதவீத ஆசிரியர்கள் வந்திருந்தனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரவில்லை; மாணவர்களும் வரவில்லை.குறைந்த எண்ணிக்கையில் வந்த மாணவர்களுக்கு, வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், வருகை பதிவு குறிப்பிடப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது.

மொத்தத்தில், தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும், 10 ஆயிரம் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்,  நேற்று வகுப்புகள் நடக்கவில்லை.மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு தகவல்கள் கிடைத்தன.

புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் 

வேலைநிறுத்தப் போராட்டத்தில், பெரும்பாலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. அதனால், ஜாக்டோ கூட்டுக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜுலு கூறியதாவது:திருவாரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்கள், 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மற்ற இடங்களில், தங்களை அதிகாரிகளாக நினைத்துக் கொள்வதால் பங்கேற்கவில்லை.

தலைமை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்னையோ, பதவி உயர்வு பிரச்னையோ இல்லை. மாறாக, இலவசத் திட்டங்களைக் கவனிக்க, தனி அலுவலர் இல்லாமல், கடுமையாக பாதிக்கப் படுகிறோம். ஆண்டில் மூன்று பருவங்களுக்கு, குறைந்தது, 30 முறையாவது இலவசத் திட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், கல்விப் பணிகள் பாதிக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக நிலவரம்:

சென்னை, கோவை, நெல்லை உட்பட, பல மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளிகள் திறந்திருந்தாலும், ஆசிரியர்கள் இல்லாததால் பாடங்கள் நடத்தப்படவில்லை. 

சென்னையில், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள், பணியை புறக்கணித்தனர்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓரளவுக்கு வகுப்புகள் நடந்தன.  

நாகையில்பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை; திறந்திருந்த ஒரு சில பள்ளிகளும், மாணவர்கள் இல்லாமல் வெறிச்சோடின. திருவாரூர் மாவட்டத்தில், 5,432 ஆசிரியர்களில், 4,418 பேர் பணிக்கு வரவில்லை.திருப்பூரில், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. பல வகுப்புகளின் மாணவர்களை, ஒரே வகுப்பில் அமர வைத்து, மதிய உணவுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர்.நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை விட, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் பங்கேற்றனர். 


இளங்கோவன் ஜாக்டோ மாநிலஒருங்கிணைப்பாளர்.

இந்தப் போராட்ட வெற்றி, எங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைத்துள்ளது. இனியும், எங்கள் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்காமல் இருக்கக் கூடாது.


சாமி.சத்தியமூர்த்தி பொதுச்செயலர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்.

புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பணியைப் புறக்கணித்தனர். 

பேட்ரிக் ரைமண்ட்மாநில தலைவர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
பள்ளியை மூடுவது எங்கள் நோக்கமல்ல. பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்கள் வெற்றியை காட்டி விட்டனர்; அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும்.

ரெங்கராஜன்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தமிழகத்தில், 95 சதவீத தொடக்கப் பள்ளிகள் இயங்கவில்லை; இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மாற்று ஏற்பாடு செய்தாலும், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளை நடத்த ஆட்களே இல்லை. 

Thursday, October 8, 2015

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: அலட்சியம் காட்டும் அரசு: கலைஞர் கண்டனம்




தமிழகத்தில் ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 
 
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  அரசு பள்ளிகளைச் சேர்ந்த  மூன்று இலட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும்,   ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதி நிதிகளை முதலமைச்சரோ,  அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேச வில்லை.

அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான  தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது. அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.  ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச்  செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது?  உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசி விட்டு,  போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா? கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என  24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில்  இது வரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.   ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.   

வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது  அமைச்சர் உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டு,  போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி  சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்.   ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும்  ஒரு சுமூகமான சூழலை  ஏற்படுத்த எந்தவிதமான  முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு  என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும்  முன் வர வேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Saturday, October 3, 2015

பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் ( Transfer Application for All )

Click to Download the General  Transfer Application Form 2015 (for ALL teachers)


ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL PROCEEDING & APPLICATION

கணினி பயிற்றுனர்கள் மற்றும் வேளாண்மை பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள்

 2015-16ம் கல்வியாண்டில் அரசு  நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு மற்றும் நேரடி நியமனம் செய்யப்பட்ட கணினி பயிற்றுனர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள் 


Click Here to Download the pdf file.


Friday, October 2, 2015

How to Delete Browsing History in firefox or chrome ?

How to delete browsing history?   or  
How to delete browsing history in Firefox ?  (or)
 How to delete browsing history   in google chrome address bar ?


Solution

1. In Firefox


1. click the    Menu option at top right side of the window under the close button.


2.
Now a popup menu  list appears.    Click Option


3. Now  Preferences window appears.  Click Privacy option on the left pane

4. Click  clear all current history  under the  History option on the right pane


5. Now Clear All History Dialog box appears. Select  Everything in the drop down list.

6. Click Clear Now button.


In Google Chrome

  1. Click Menu option at top right side of the window under the close button
  2. Click More tools.
  3. Click Clear browsing data.


4. Select the Beginning of time  in Obliterate the following  items from drop down list.



5. Enable (tick) the Check boxes.

6. Click Clear Browsing data button. 

BT TO PG PANEL LIST - AFTER 24.08.2015 COUNSELING

Click Here to Download the  JD(HSS) Proceedings  and Panel List ( Clear List )