ஆசிரியர்கள் மற்றும்
கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில்
எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன்
உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பள்ளிகள்
மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள
சுற்றறிக்கை:
கல்வித் துறையில்,
1978ல்
பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து
பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே
கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த
அரசாணைப்படி, 'Initial' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே
எழுத வேண்டும். இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.