2016-17 ஆண்டுக்கான முதல் ரிசர்வ் வங்கி கொள்கை நிர்ணயிக்கும் கூட்டம்
ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரகுராம் ராஜன் ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி,
- ரெபோ விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் அதே 4%-ல் தொடர்கிறது.
- வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டியில் 0.25 சதவீதம் குறைந்துள்ளது.
- வீட்டுக்கடன் மீதான வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
- வங்கிகளுக்கான டெபாசிட் வட்டியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.