மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண்
தேர்வு வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம்
அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது ஏராளமான
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பெற்றோர்களும், மாணவர்களுக்கு அவதி
அடைந்தனர்.