01.04.2003க்கு பின்னர் அரசுப் பணியில் சேர்ந்த தமிழக அரசுப்பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் சேர்ந்துள்ள அரசுப்பணியாளர்களிடம் மாதந்தோறும், மொத்த ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, அரசின் பங்களிப்பாக 10% சேர்க்கப்படும். ஓய்வு பெறும்போது முதிர்வுத் தொகை, தவணைகளாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சேர்ந்து சந்தா செலுத்திய சந்ததாரர்களில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை ஓய்வு பெற்றுள்ளனர். பலர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை எவருக்கும் எந்த தொகையும் திருப்பி தரப்படவில்லை.
தற்போது முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, CPS Final Settlement பெறுவதற்க்கான, கணக்குத் தலைப்புகளும்(DPC - Head of Accounts), Final Settlement பெறுவதற்கான படிவம்(ANNEXURE I), அங்கீகாரம் அளிப்பதற்கான படிவம் (ANNEXURE II) ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
அரசாணையை பெற