பிப்ரவரி 29 திங்கள் அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மானியத்தில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை, 12லிருந்து இனி, ஆண்டுக்கு 10ஆக குறைக்கவும், வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூபாய் 2.50 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்த வேண்டாம் எனவும் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே, இதுவே மத்திய பொது பட்ஜெட் அறிக்கையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.